சமாதிகளுக்கு முதலில் சமாதி கட்ட வேண்டும்
தமிழகம் எப்படிபட்ட வரலாற்றினை கொண்டது
சங்ககாலம் முதல் அதன் சிறப்பென்ன?
எத்தனை பெரும் மன்னர்களும், ராஜராஜன் போன்ற அழியா புகழுடை முடிகள் இருந்தன?
கம்பன், வள்ளுவன் என அதுகொடுத்த சிறப்பென்ன?
அகத்தியன், போகன் என அதன் சித்தர் வரிசையென்ன?
சீனிவாச ராமானுஜம் முதல் அப்துல்கலாம் வரை விஞஞான வரிசை என்ன?
பெரியார், காமராஜர் என இந்தியாவினில் உயர்ந்த தலைவர்கள் என்ன?
பூலித்தேவன் முதல் சிதம்பரனார் வரை எத்தனை தியாகிகள்?
வள்ளலார் முதல் எத்தனை பெரும் அவதாரங்கள் உதித்த பூமி, எவ்வளவு பெரும் ஞான பூமி
ஆனால் இன்றைய தமிழகத்தில் ஒரே ஒரு பெரும் ஞானி மட்டும் அவதரித்தாகவும், அப்படி ஒரே ஒருவர் மட்டும் பிறந்து, அவரும் சமீபத்தில் செத்துவிட்டதாகவும் , அவர் பிறக்கவில்லை என்றால் ஏதோ தமிழ்நாடு உலகிற்கே தெரியாமல் போயிருப்பது போலவும்
அந்த ஜெயா கல்லறை மட்டுமே தமிழக அடையாளம் போலவும் இந்த மானங்கெட்ட ஊடகங்களும், பத்திரிகைகளும் காட்டிகொண்டே இருக்கின்றன
தமிழகம் உருப்பட வேண்டுமானால் இந்த மெரீனா சமாதிகளை மக்கள் நுழையா பகுதியாகவும், செய்தி தணிக்கை இடமாகவும் அறிவிக்க பட வேண்டும்
தமிழகத்திற்கு அந்த மெரீனா சமாதி கும்பல் அப்படி என்ன கிழித்துவிட்டது? யார் செய்த சாதனைகளை அவர்கள் முறியடித்தார்கள்?
ஒன்றுமேயில்லை
அக்கல்லறைகளுக்கு கல்லறை கட்டாமல் தமிழகம் உருப்படபோவதுமில்லை தன் வழியினை வரலாற்றை அறிந்துகொள்ளபோவதுமில்லை
அந்த சமாதிகளுக்கு முதலில் சமாதி கட்ட வேண்டும்
சீமான் ஏன் தெலுங்கு கவர்ணரை கண்டிக்காமல் இருக்கின்றார், அவர் தமிழுணர்வு என்னாயிற்று என கேட்டால், இன்பாக்ஸில் வந்து டேய் அவருக்கு வாக்களிக்காதவன் எல்லாம் அவரை பற்றி பேச கூடாது, அவருக்கு வாக்களிக்கா தமிழகம் நாசமாய் போகட்டும் என்றேல்லாம் கண்ணகி சாபம் இடுகின்றார்கள்.
(கையில் சிலம்பும் தலையினை அவிழ்த்தும் விட்ட கோலத்திலும் இருப்பார்கள் போல..)
அவருக்கு வாக்களித்தால் மட்டும் தமிழ்நாடு உருப்படுமா? இதனை விட மோசமாயிருக்கும்
சரி, அது என்ன சீமானுக்கு வாக்களிக்காமல் பேச கூடாது என்பது?
முன்பு ஈழமக்கள் வாக்களித்தா, அல்லது தெர்ந்தெடுத்தா பிரபாகரன் பதவிக்கு வந்தார்? அவராக வந்து அமர்ந்து ஆட்டி படைக்கவில்லையா?
பிரபாகரனின் தம்பி என மார்தட்டும் சீமானும் ஏன் வாக்குகளை எல்லாம் எதிர்பார்க்க வேண்டும்?
பிரபாகரன் வழியில் படைதிரட்டி ஆட்சிக்கு வந்தால் என்ன?
கையில் பிடித்திருப்பது பிரபாகரன் படம் , செல்லும் வழி காந்தி வழியா?
கடந்த மூன்று மாதங்களில் செய்த பணி என்ன? – மந்திரிகளிடம் அறிக்கை கேட்கின்றார் மோடி
நல்லது, அப்படியே மூன்று மாதங்களாக தமிழகத்தில் என்ன நடக்கின்றது, குறிப்பாக 3 நாட்களாக ஆளுநர் என்ன செய்கின்றார் என்றொரு அறிக்கை கேளுங்கள் மோடி