தீர்ப்பு என்னாகும், சசிகலா உள்ளேயா வெளியாயா?
தீர்ப்பு என்னாகும், சசிகலா உள்ளேயா வெளியாயா? என பலர் மங்காத்தா ஆட தொடங்கியாயிற்று.
தீர்ப்பு சசிகலாவிற்கு சாதகம் என்றால் அவர் முதல்வராவார், அது பாதகம் என்றால் சசிகலாவின் பினாமி முதல்வராகலாம் என்பது ஒரு புறம்
இல்லை ரிசார்ட் எம் எல் ஏக்களிலும் பன்னீருக்கு ஆதரவானர்கள் உண்டு , ஆக இது பெரும் இழுபறி எனும் தியரி ஒரு புறம்
தீர்ப்புவந்த பின் ஆளுநர் சும்மா இருக்க முடியாது, பன்னீருக்கு பெரும்பான்மை நிருபிக்க உத்தரவு, அல்லது சசிகலாவிற்கு உத்தரவு அல்லது ஆட்சி கலைப்பு எனும் 3ல் ஒன்றை ஆளுநர் எடுத்தே தீரவேண்டும்
பெரும்பான்மை நிரூபிக்கா பட்சத்தில் நிச்சயம் தேர்தலே
சரி ஒருவேளை பன்னீரோ? சசிகலாவோ? பெரும்பான்மையினை நிரூபித்துவிட்டால்? ஹிஹிஹிஹி அந்த வரலாறு திரும்பலாம்
எந்த வரலாறு?
எம்ஜிஆர் இறந்த பின் சட்டசபையில் தன் பெரும்பான்மையினை நிரூபித்தார் ஜாணகி, நிச்சயம் அவர்தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆண்டிருக்க வேண்டும், ஆனால் என்ன நடந்தது?
அதனை ஏற்கமுடியாது என நடராஜனின் திட்டத்தில் ஜெயா தரப்பு பெரும் கலவரம் செய்து சட்டமன்றத்தை முடக்கியது, பெரும் கவலரம் அது. கலவரம் என சொல்வதை விட பெரும் தமிழக அவமானம் அது, பேரவமானம்
வாய்ப்புக்காக காத்திருந்த டெல்லி, வன்முறை சம்பங்களால் தமிழக அரசு கலைக்கபடுவதாக அறிவித்து தேர்தலுக்கு வழிவிட்டது
பின் நடந்த தேர்தலில் கலைஞர் முதல்வரானார்
நிச்சயம் அன்று ஜானகிக்கு இழைக்கபட்டது பெரும் அநீதி, இழைத்தது ஜெயாவும் நடராஜன் கும்பலும், துணைபோனது டெல்லி
அதே வரலாறு இனியும் திரும்பலாம், 30 ஆண்டுகள் கழித்து அது திரும்பும் நேரத்தில் ஜாணகி இடத்தில் சசிகலாவும், ஜெயா இடத்தில் பன்னீரும், ராஜிவ் காந்தி இடத்தில் மோடியும் இருக்கலாம்
மற்றபடி அதே காட்சிகள்
சரி அப்படி வரலாறு திரும்பினால், என்னாக வேண்டும்? திமுக ஆட்சிக்கு வருமல்லவா?
அப்படியானால் கலைஞர் இடத்தில் ஸ்டாலின்
ஆனால் முன்பு புலிகளால் கலைஞர் அரசு கலைக்கபட்டு, அதே புலிகளால் ராஜிவ் கொல்லபட்டு அதனால் ஜெயா ஆட்சிக்கும் வந்தார்
நடராஜனின் ஈழ பாசமும், அன்று திருப்பெரும் புதூரில் ஜெயா எப்படி தப்பினார் என்பதும் இன்றுவரை பெரும் கேள்விகுறி?
ஆனால் சிபிஐ விசாரணையில் சிக்கியது கலைஞர், இதுதான் அவர் விதி
ஜெயா ஏன் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை என எந்த கார்த்திகேயனும் கேட்கவில்லை, எந்த கமிஷனும் கேட்கவில்லை. பார்பானிய அட்டகாசம் எனும் வகையில் பார்க்க வேண்டிய விஷயம் இது.
அதாவது காங்கிரசும் ஜெயாவும் கூட்டணி, ஆனால் ராஜிவ் கூட்டத்திற்கு ஜே வரவில்லை, ராஜிவ் செத்தார், ஜெயா முதல்வரானார்
ஆனால் இன்றுவரை நடராஜன் புலிகள் அனுதாபி, ஏதாவது புரிகின்றதா? புரிந்தால் சரி
ராஜிவ் கொலையின் முதல் சந்தேகபுள்ளி இடம் மாறியே தொடங்கபட்ட மர்மம் நடந்தது, இதனால்தான் இறுதிவரை தன்மேல் சிறு சந்தேகமும் வராதவாறு புலி எதிர்ப்பினை கெட்டியாக பிடித்துகொண்டார் ஜே
ஆனாலும் ஒரு நாளும் திருப்பெரும்புதூருக்கு அஞ்சலிக்கு அவர் செல்லவே இல்லை என்பது இன்னொரு முகம், அது குற்றவுணர்ச்சியா இல்லை ஜெயா இயல்பா என்பது தெரியவே இல்லை..
கலைஞரின் ஆட்சிகளில் எல்லாம் பல ஆபத்துக்கள் புலிகள் வடிவிலேதான் வந்தன, ஏன் என்றால் தெரியாது.
ஆனால் புலிகளின் தமிழக ஆதரவாளர்களை பாருங்கள் கலைஞர் எதிரிகளாக இருப்பார்கள்.
மொத்தத்தில் அந்த எழுச்சியான ஈழபோராட்டத்தை கலைஞருக்கு எதிரான ஆயுதமாக மாற்றி, புலிகளை அழித்து, போராட்டத்தையும் அழித்து, இன்று தானும் அழிந்தது இந்த போலி தமிழ்நாட்டு இன உணர்வு தலைவர்களே அன்றி வேறுயாரும் அல்ல
இவர்கள் பேச்சினை கேட்டுத்தான் பிரபாகரன் அழிந்தார், நிச்சயமாக சொல்லலாம், இப்பொழுது இவர்களும் ஓயும் காலம் வந்தாகிவிட்டது
எப்படியோ இனி புலிகள் இல்லை, அதனால் ஸ்டாலின் முதல்வரானாலும் அவருக்கு ஆபத்தில்லை