வீரமணியினை ஒரு ஆளாக கருதி பேசிகொண்டிருக்கின்றார்கள்

வீரமணியினை எல்லாம் ஒரு பொருட்டாக எண்ணி பதிவுபோட்டுகொண்டிருக்கின்றார்கள்

ஒரு விபரீதமாக பாஜக அரசு தமிழகத்தில் அமைந்து வானதி சீனிவாசன் முதல்வாரானால் கூட ஏன் அமித்ஷா தமிழக முதல்வரானால் கூட பெரியார் கண்ட கனவு இதுதான் என கூசாமல் சொல்வார் அவர்

அவர் நிலமை அப்படி, அவர் குணம் அப்படி.

அண்ணாவும், கலைஞரும் விட்டு விட்டு ஓடிய பெரியார் சொத்துக்களை காப்பது என்றால் சும்மாவா?

பெரியாரின் கொள்கைகளை எல்லாம் பெரியாரோடு கொளுத்த முடியும் கொளுத்தியாயிற்று, அவரின் சொத்துக்களையுமா கொளுத்தமுடியும்?

ஆக இல்லாத பெரியார் கொள்கைகளை அவரிடம் எதிர்பார்த்தால் எப்படி?

அவரையெல்லாம் ஒரு ஆளாக கருதி பேசிகொண்டிருக்கின்றார்கள்

நாளையே தமிழிசை உருவில் பெரியாரையும், மோடி தாடியில் பெரியார் முகத்தையும் கண்டதாக சொல்ல அவர் ரெடி

அவருக்கு சசிகலாவும், அதிமுகவுமா சிரமம்?