இந்தியா விட்டுக்கொடுப்பதே பிரச்சினைக்கு தீர்வு : சீனா
அருணாசலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பிராந்தியத்தை இந்தியா விட்டுக்கொடுப்பதே பிரச்சினைக்கு தீர்வு : சீனா
தவாங்கில் பெட்ரோலோ, பெரும் வளமோ இல்லை. ஆனால் புத்தமதத்தின் பெரும் மடம் இருக்கின்றது, அதனை குறிவைத்து கேட்கின்றது சீனா
இந்துக்களின் இந்தியா, இந்துத்வா இந்தியா என முழங்கி ஆட்சிக்கு வந்திருக்கும் இந்த கூட்டம் இப்பொழுது என்ன கேட்கவேண்டும்?
சிவன் வாழும் கைலாச மலை உங்களிடம் இருக்கின்றதல்லவா? அதனை இந்த இந்து நாட்டிடம் கொடுத்துவிட்டு இந்த புத்த பூமி பற்றி பேசலாம் என சொல்லலாம்
ஆனால் சொல்லமாட்டார்கள்
சிவன் வாழும் கைலாயம் எல்லாம் மீட்க மாட்டார்கள், அந்த திட்டமும் இல்லை
ஆனால் உள்ளூரில் மசூதி இடிப்பது, சர்ச்சுகளை கொழுத்துவது என ஆன்மீக பணிகளை செய்து இந்துத்வாவினை வளர்ப்பதாக சொல்லிகொள்வார்கள்
இந்து காவி ஆட்சி என மார்தட்டிகொள்பவர்கள், முழுமுதற்கடவுளான சிவனின் கைலாயத்தை மீட்க ஏன் ஒரு துரும்பும் கிள்ளி போட மாட்டார்கள்?
அவர்கள் அப்படித்தான்,
சிவன் வாழும் கைலாயம் யாருக்கு வேண்டும்? இவர்கள் ஆள 4 வோட்டுகள் கிடைத்தால் போதாதா?
இவர்கள் உண்மை முகம் அதுதான்,
இவர்கள் காட்டும் காவி இந்தியா , அகண்ட இந்தியா படத்தினில் கூட பாகிஸ்தானும், வங்கமும் இடம்பெறுமே தவிர, கைலாய மலை பற்றி மூச் இருக்காது
ஆனால் உள்ளூரில் எவனையாவது போட்டு இந்துக்கள் பூமியினை அபகரித்துவிட்டான் என கும்மிகொண்டிருப்பார்கள்
சீனா அபகரித்தால் கம்மென்று இருப்பார்கள்
அவர்களாக வந்து விட்டுகொடுங்கள் என்றாலும் இவர்களுக்கு கைலாச மலையினை கொடுங்கள் என கேட்க கூட தெரியாது