வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலையேற்றம்
வாட் வரி உயர்வால் பெட்ரோல் விலையேற்றம்
எண்ணெய் உற்பத்திநாடுகள் எல்லாம் கடும் விலை வீழ்ச்சியில் எங்கே விற்பது என தடுமாறி நிற்கின்றன
பாதிவிலை என்ன? கால்வாசி விலைக்கும் விற்கவும் அவர்கள் தயார்
இந்தியாவில் இன்றுள்ள கச்சா எண்ணெய் விலைவாசியில் பெட்ரோலை லிட்டருக்கு 30 ரூபாய்க்கு விற்கலாம், ஆனால் விற்கமாட்டார்கள்
அதே கொள்ளை விலையில் விற்றுகொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இன்னும் பெட்ரோல் விலையினை ஏற்றினால் அதனை விற்கும் அரபுநாடுகளே வாய்விட்டு சிரிக்கும் என்பதால் இப்படி யோசித்திருக்கின்றார்கள்
பெட்ரோல் விலையினை கூட்டுவதை விட, பெட்ரோலுக்கான வாட் வரியினை கூட்டினால் என்ன? யாரும் கேட்டால் வாட் வரியினை கூட்டினோம் என சொல்லலாம்
வாட் வரியினை கூட்டினால் பெட்ரோல் விலை தானாக கூடிவிடும் போதாதா? என அவர்கள் மூளையில் விளக்கெரிந்திருக்கின்றது
இதோ உயர்த்திவிட்டார்கள்
என்ன ஆட்சியோ தெரியவில்லை, உலகெல்லாம் சல்லி விலையில் கிடைக்கும் பொருள் இங்கு மட்டும் பெரும் விலையில் உயர்ந்துகொண்டே போகின்றது, மக்களின் பணம் பிடுங்கபடுகின்றது
வங்கிகள் வேறு சர்வீஸ் சார்ஜ் என பிடுங்குகின்றன
இந்நாட்டில் பல பிடுங்கிகள் இருப்பார்கள் போலிருக்கின்றது
இப்படி ஏன் அப்பட்ட பெட்ரோல் கொள்ளை என கேட்டால் உனக்கு நாட்டுபற்று இல்லையா என்பார்கள்
பெட்ரோல் விலை குறைக்க எவ்வளவோ வாய்ப்பிருந்தும், பெட்ரோல் விலை குறைத்தால் விலைவாசி குறையும் என தெரிந்திடுந்தும், மக்கள் கையில் 5 பைசா இல்லாமல் பிடுங்கிவிடும் அரசாங்கத்தின் செயல் நாட்டுபற்றுள்ளது என நம்புபவர்கள் நாட்டுபற்றாளர்கள்
அதாவது முட்டாள்களின் இன்னொரு பெயர் இந்நாட்டில் நாட்டுப்பற்றாளர்கள் என இந்த ஆட்சியில் அறிவிக்கபட்டிருக்கின்றது