ராதாரவிக்கு கண்டனம் ….

சக்கர நாற்காலியில் கலைஞர் அமர்ந்ததும் நடக்க முடியாதவன் நாடாள நினைக்கலாமா? என அதிமுகவினர் கேட்டபோது அமைதி காத்தவன் எல்லாம் இப்பொழுது ராதாரவிக்கு கண்டனம் தெரிவிக்கின்றானாம்.

நடக்க முடியாதவன் என சொல்வது கிட்டதட்ட மாற்றுதிறனாளியினை குறிப்பதில்லையா?

ஸ்டாலினும், கனிமொழியும் இந்த ரீதியில் கேள்வி கேட்காமல் மன்னிப்பு கேட்டுகொண்டிருக்கின்றனர்

கலைஞருக்கே உரித்தான வாதத்ததுடன் கூடிய போராட்ட குணத்தினை திமுக வாரிசுகள் இழந்துவருகின்றது….

“எவண்டா அவன் மன்னிப்பு கேட்க சொல்றது, என் மனசுக்கு நியாயம்ணு தோணுறத‌ பேசுவேன், அவ்வளவுதான்.

ஏதோ கடவுள்னு சொல்வாங்களே, அவன் வந்தாலும் மன்னிப்பு என கேட்கமுடியாது…” என சொன்னவர் எம்.ஆர் ராதா

ராதாரவிக்கும் அந்த தைரியம் இல்லை

இப்பொழுதெல்லாம் தாய் எட்டடி பாய்ந்தால் குட்டிகள் 2 அடி கூட பாய்வதில்லை