இதுதான் புதிய இந்துத்வா…

கோயில் அர்ச்சகர்கள் ஆகம விதிபடியே நியமிக்கபடவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் வரை சென்று போராடுகின்றார்கள் , வெற்றியும் கிடைக்கின்றது

இதுதான் முறையான அனுமதி இந்துமதம் காக்கபட்டது என ஆர்பரிக்கின்றார்கள்,

ஆகமவிதி தெரியாத ஒருவன் எப்படி சாமி சிலைக்கு பூஜை செய்யமுடியும் என ஏராளமான கேள்விகள் கேட்பார்கள்.

ஆனால் பள்ளிபடிப்பு முடிக்காத ஒருவன் “அத்தனைக்கும் ஆசைபடு” (அத்தனைக்கும் ஆசைபட்டால் அவன் ஆட்டோ சங்கர் வகையறா அல்லவா?) என சொல்லி தன்னை சாமியார் என்கின்றான், பெரும் ஆசிரமம் தொடங்குகின்றன்

அதில் பெரும் சிவன் சிலையினை வைத்து அட்டகாசம் செய்கின்றான்

தன்னை குரு என சொல்லுங்கள் என கட்டளையிட்டுகொண்டும் இருக்கின்றான்.

ஆகம விதிப்படி இது தவறு அல்லவா? இவர் எப்படி குருவாக முடியும்? இவர் எப்படி சிவன் பூசாரியாக முடியும் என கேட்டால்..

இல்லை இல்லை இதுவும் சரி என்கின்றார்கள்

ஏதும் புரிகின்றதா?

புரியாது இதுதான் புதிய இந்துத்வா


கொசுறு

ஓட்டுக்கு பணம் கொடுத்தால் 3 ஆண்டு சிறை- மசோதாவை உடனே நிறைவேற்றுக! ராமதாஸ் வலியுறுத்தல்

ஆமாம் அய்யா, கண்டிப்பாக நிறைவேற்றவேண்டும்,

கூடவே சாதி பெயரை சொல்லி வாக்கு கேட்டால் 6 ஆண்டு சிறை எனும் வரியினையும் சேர்த்துகொள்ளவேண்டும்