பிறந்து 8 நாள் ஆன குழந்தையினை காப்பாற்றினார் மோடி
பிறந்து 8 நாள் ஆன குழந்தையினை காப்பாற்றினார் மோடி
அசாமில் பிறந்தது அக்குழந்தை, 8 நாட்கள்தான் ஆனது நுரையீரல் பிரச்சினை காரணமாக டெல்லிக்கு அவசரமாக கொண்டு சென்றாலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டிராபிக்கில் சிக்கும் ஆபத்து இருந்தது.
மோடியின் முயற்சியால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தபட்டு ஆம்புலன்ஸ் விரைவாக சென்றது.
பிரதமரின் இந்த துரித நடவடிக்கையால் அக்குழந்தை காப்பாற்றபட்டிருக்கின்றது.
இந்நாட்டின் ஒரு உயிரினை மோடி காப்பாற்றி இருக்கின்றார், இதனை முன் உதாரணமாக கொண்டு அவரின் அமைச்சர்களும் அவர்களின் கீழான அதிகாரிகளும் சேவை செய்தால் இந்நாடு எவ்வளவு நன்றாக இருக்கும்?
அக்குழந்தையினை காப்பாற்றிய மோடிக்கு தேசம் நன்றி சொல்கின்றது, பெற்றோர் கண்ணீருடன் நன்றி சொல்கின்றனர்
நமக்கு என்ன தயக்கம்? நாமும் மிகுந்த நன்றியினை தெரிவிப்போம், வாழ்த்துக்கள் மோடி
ரயில் ஏன் எரிந்தது என யாரும் கேட்க கூடாது? ரயில் எரிந்ததால் எரியட்டும் , குஜராத் எப்படி எரியலாம் என்பதுதான் அவர்கள் வாதம்
ரயிலில் செத்தவர்கள் மனிதர்களே இல்லை, அதனால் ஏற்பட்ட கலவரத்தில் செத்தவர்கள்தான் மனிதர்கள்
இன்றும் குஜராத் கலவரம் என்றுதான் பேசுவார்களே ஒழிய, ரயில் எரிப்பு பற்றி எல்லாம் பேசமாட்டார்கள்
நாமும் பேச கூடாது.