அங்கிள் சைமன், எங்கே சென்று தொலைந்தீர் அய்யா?

Image may contain: 2 people, people sitting and indoor

இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சூடு – தமிழக மீனவர் ஒருவர் பலி. படகினையும் இழுத்து சென்றனர்

அங்கிள் சைமன், எங்கே சென்று தொலைந்தீர் அய்யா?

முன்பு வந்தேறி முதல்வரால்தான் எல்லாம் சிக்கல் என்றீர்கள், இதோ பச்சை தமிழன் முதல்வராகி இருக்கின்றான். வந்தேறி முதல்வர் காலத்திலாவது படகினை விட்டுவிடுவார்கள் இலங்கையர்.

இதோ பச்சை தமிழன் பழனிச்சாமி ஆட்சியில் தமிழ் மீணவனை சுட்டுவிட்டு, படகினையும் கொண்டுசெல்கின்றான் சிங்களன்

முன்பு கலைஞர் கடிதம் எழுதினால் எப்படி எல்லாம் கொதிதீர்கள்?, இதோ பச்சை தமிழன் பழனிச்சாமியும் அதே கடிதத்தினை வரிகள் மாறாமல் எழுதுகின்றார்,

நீங்களோ அமைதியாய் இருக்கின்றீர்கள்

கலைஞர் என்றால் பொங்கிய நீங்கள், பழனிசாமியினை சீண்டி கூட பேசவில்லை அய்யா?? கருணாநிதி என்றால் மட்டும்தான் உங்களிடம் தமிழன் உணர்வு பொங்குமா?

உங்கள் ஈழ அபிமானி தமிழன் நடராஜனின் மறைமுக ஆட்சியில் இப்படி ஒரு கொடுமை நடக்கும்பொழுது எப்படி நீங்கள் அமைதி காக்கலாம்,

அதுவும் பழ.நெடுமாறன் ஆசிபெற்ற சசிகலா ஆட்சி நடக்கும் பொழுது எப்படி அமைதி காக்கலாம்??

உங்கள் வெண்கல தொண்டையெங்கே, புடைக்கும் நரம்பெங்கே, தெறிக்கும் அணல் எங்கே?

எங்கே ..எங்கே?…எங்கே?

தமிழன் ஆளும்பொழுது சிங்கள மீணவனை தொட்டால் இங்கிருக்கும் சிங்களவனை விடவே மாட்டேன் என நீங்கள் விட்ட சவால் என்ன ஆனது?

உங்கள் பேச்சினை கேட்டு தமிழ்முதல்வரையும் வைத்தாகிவிட்டது, இன்னும் பிரச்சினை தீரவில்லை

இனி ஜப்பானிய முதல்வரை வைத்துவிடலாமா அங்கிள்?

(அங்கு தமிழக மீணவர்களை விரட்ட சொல்லி, இலங்கை கடற்படையினை அழைப்பதே ஈழமீணவர்கள் என்பது இன்னொரு விஷயம், தமிழர் வாழ பிறப்பெடுத்த அங்கிள் சைமன் இதனை பற்றி எல்லாம் பேசமாட்டார்)