பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நெல்சன் மண்டேலா

அந்த தென் ஆப்ரிக்கா, பெரும் கண்டமான‌ ஆப்ரிக்காவின் தெற்கு பகுதிநாடு, ஆனால் மிக மிக வளமான நாடு, வைரத்திற்கும் தங்கத்திற்கும் இன்னும் பல வகையான பொருளுக்கும் பெயர்பெற்ற நாடு, வளம் இருந்தால் அங்கு யார் இருப்பார்? அதுவும் மக்கள் அறியாமையில் இருந்தால் யார் இருப்பார்? எல்லாம் வேட்டையாட ஒரு வல்லரசு இருக்கும், அப்படி 19ம் நூற்றாண்டில் அதை ஆக்கிரமித்த நாடு பிரிட்டன் 19ம் நூற்றாண்டிலே பிரிட்டன் அன்றே பிடித்து வைத்திருந்தது, உலகெல்லாம் இருந்து தமிழர் உட்பட தொழிலாளர்களை […]

வேத வியாசர்

““இங்கிருப்பதே எங்கும் இருக்கும்… இங்கில்லாதது எங்கும் இல்லை” என்பதுதான் சனாதான தர்மத்தினை விளக்கும் ஒரே வரி, அந்த அளவு எல்லாம் கொண்டது இந்த தர்மம் அதன் இயல்பில் இன்று வியாச பவுர்ணிமா கொண்டாடபடுகின்றது குரு பூர்ணிமா அன்று வியாசரை ஏன் கொண்டாட வேண்டும் என்றால் ஒவ்வொரு இந்துஸ்தானியும் அந்த மூலரிஷியினை ஏன் வணங்கி பணியவேண்டும் என்றால், ஏன் அந்த பவுர்ணமியினை வியாச பவுர்ணமி என தேசம் காலம் காலமாக கொண்டாடுகின்றது என்றால் அந்த காரணங்கள் வலுவானவை இந்துமதத்தின் […]

03. அமர்நீதி நாயனார்

“அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்” சுந்தரமூர்த்தி நாயனார் மெல்லிய இதழ்களோடு கூடிய மெல்லிய முல்லை மலர் மாலையைச் சூடிய அமர்நீதி நாயனார்க்கு அடியேன் என்கின்றார் சுந்தரமூர்த்தி நாயனார் யார் இந்த அமர்நீதி? அக்கால‌ சோழவளநாடு எல்லா வகையிலும் செழிப்பாய் இருந்தது, காவேரி நிலத்தை இருபோகம் விளையச் செய்து விளைச்சலில் பலன் கொடுத்தது, இன்னொரு வகையிலும் சோழநாட்டுக்குப் பணம் கொட்டியது . அது வியாபார சமூகத்தின் உழைப்பு. அன்று எந்த நாட்டிலும் இல்லாத செல்வம் சோழநாட்டில் கொட்டிக் கிடக்க […]

மானிட சாதியின் தனி மனிதன்… அடால்ஃப் ஹிட்லர்

பல்லாயிரம் பேர் அனுதினமும் வந்து பிறக்கும், இறக்கும் உலகில் ஒரு சிலரின் கர்மா வரலாற்றை மாற்றிவிடுகின்றது, கோடியில் ஒருவருக்கு அந்த வரம் கிடைக்கின்றது மானிட இனத்தின் பல பலவீனங்களாலும் அதன் லவுகீக மயக்கங்களாலும் போர்களே உலக வரலாற்றை மாற்றும், போரும் அதுகொடுக்கும் விளைவும் பயமும் அந்த ஆபத்தை களைவிக்க செய்யும் முயற்சிகளும் தயாரிப்பும் விஷத்துக்கு விஷமே முறிவு என்பது போல் பல திருப்பங்களை கொடுக்கும் அது மானிட இனத்தால் புரிந்துகொள்ளமுடியா சூட்சுமாம் புராணகாலத்தில் அசுரர்களை ஆடவிட்டு அந்த […]

கோபால்சாமி துரைச்சாமி நாயுடு (ஜி.டி நாயுடு)

இந்த பிரபஞ்சம் எனும் பெரும் சக்தி உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒருவனுக்கு விஷேஷித்த சக்திகளை அவ்வப்போது தருகின்றது, வெகு அபூர்வமாக அப்படி சிலருக்கு அந்த ஆர்வம் பிறப்பிலே வருகின்றது சாதாரண மனித சிந்தனையில் இருந்து விலகி வித்தியாசமான சிந்தனையினால் அவர்கள் பலவித கருவிகளை, எந்திரங்களை உலகுக்கு தருகின்றார்கள், அவர்களை விஞ்ஞானிகள் என்கின்றது உலகம் ஆழ கவனித்தால் மானிட குலம் சில கடின உழைப்பையும் சிரமத்தையும் தவிர்க்க, வேலையினையும் வாழ்வினையும் எளிதாக்க ஆண்டவன் கொடுக்கும் வாய்ப்பு அது ஆனால் […]

சாவித்திரி – காரடையான் நோன்பு

அந்த பாரததித்தில் அசுபதி என்றொரு மன்னன் இருந்தான், அவனுக்கு வாரிசு என ஒரு மகள் இருந்தாள், அழகிலும் அறிவிலும் சிறந்தவளான அவளுக்கு புனிதமான பெயரான சாவித்திரி எனும் பெயர் சூட்டினான், ஆம் சரஸ்வதியின் இன்னொரு பெயர் சாவித்திரி, எது உன்னதமும் உயர்ந்ததும் ஆசீர்வாதமுமானதோ அதற்கு சூட்டும் பெயர் சாவித்திரி அந்த சாவித்திரிக்கு திருமண வயதும் வந்தது, அக்கால இந்து சம்பிரதாயம் பெண்கள் தன் கணவனை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளித்தது, தன் பாதுகாவலர் ஆலோசகரான பெரியவரகள் சூழ […]

ஸ்ரீ அன்னை

இந்துமதம் சொல்வதெல்லாம் உண்மை என்பதும், அது சொல்லும் முன் ஜென்மம், கர்மா என்பதெல்லாம் முழுக்க நிஜம் என்றும் உலகுக்கு நிரூபிக்கவே சில பிறப்புகள் வருகின்றன‌ உரிய நேரத்தில் உரிய தொடர்புகள் கிடைக்கும்பொழுது அவை அந்த உண்மையினை பட்டவர்த்தனமாக சொல்கின்றன, எந்த பகுத்தறிவாளனும் பெரும் விஞ்ஞானியும் கூட அதனை மறுக்கமுடியாதபடி அவை விஸ்வரூப சாட்சியாய் நிற்கின்றன‌ காலம் காலமாக நடப்பது இந்த பிரபஞ்சத்தின் விளையாட்டு பகவானின் அருளாட்சி இது, அது இந்துமதத்துக்கு சோதனை வரும்பொழுதெல்லாம் அடிக்கடி நடக்கும் திருவிளையாட்டு. […]

அண்ணாமலையின் இரண்டாம் இலங்கை விஜயம்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இரண்டாம் இலங்கை விஜயத்தை எப்படி பார்க்கின்றீர்கள் என எம்மிடம் கேட்டால் விஷயம் மிக மிக ஆழமானது துரதிருஷ்ட வசமாக இதுபற்றி தமிழக ஊடகம் சொல்லவில்லை, முன்பு சோ.ராமசாமி காலத்தில் மிக சரியாக ஈழவிவகாரங்களை சொன்ன துக்ளக் பத்திரிகையும் சொல்லவில்லை ஏன் தமிழக பாஜக செய்திகளே சொல்லவில்லை இதையெல்லாம் சொல்லவேண்டிய தமிழக பாஜகவின் ஐடி பிரிவும் வார் ரூம் வானரங்களும் உள்கட்சியில் சண்டையிடுவதெல்லாம் பாஜகவின் சாபம் அல்லது நோய் விஷயம் அவ்வளவு முக்கியமானது, […]

பெரோஸ் காந்தி

அந்த குடும்பம் நேரு குடும்பம் அல்லவா? பின் நேரு பெயரை சொல்லாமல் காந்தி என மாற்றி கொண்டது ஏன் எனும் விவாதம் பாராளுமன்றம் வரை சென்றுவிட்டது ஆங்காங்கே எப்படி வந்தது காந்தி பெயர் என ஏகபட்ட விவாதங்கள், நாமும் நம் பங்கிற்கு சில விஷயங்களை சொல்லி வைப்போம் இந்திராவின் கணவரும், இன்றைய ராகுலில் தாத்தாவுமான அந்த பெரோஸ் காந்தி, காங்கிரஸ்காரர்களால் மட்டுமல்ல மொத்த இந்தியாவுமே மறந்துவிட்ட நபர் அவர், அப்படி ஒருவர் அரசியலில் இருந்த அடையாளம் கூட […]

அமெரிக்க காந்தி

என்னதான் கிறிஸ்தவம் சமத்துவம் என பேசினாலும், அந்த கிறிஸ்தவ மேல்மட்டம் கத்தோலிக்கம் மற்றும் பிரிவினை என பலவாறு பிரிந்து சீர்திருத்தம் செய்தாலும் கிறிஸ்த்தவம் வெறும் அரசியல் அது ஒரு மதம் அல்ல என்பதும், கிறிஸ்தவ பெயரால் செய்யபடுவதெல்லாம் ஆட்சி, சம்பாத்தியம் மற்றபடி சமத்துவம் அங்கு இல்லை என்பதும் ஐரோப்பியரின் இனவெறியால் அறியபடும் ஐரோப்பியருக்கு 15ம் நூற்றாண்டில் இருந்துதான் அந்த அரைபயித்தியம் பிடிக்க ஆரம்பித்தது என்றல்ல, ஐரோப்பா தவிர ஏதும் அறியாமல் உள்ளே சண்டையிட்டுகொண்டிருந்த கூட்டம் வறுமையில் இருந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications