பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஆரியர் Vs பூரியர்

ஆரியர் என்றால் பிராமணர்கள், ஆரியம் என்றால் இனதுவேஷம் என சொல்லும் திராவிட கோஷ்டி எக்காலமும் உண்டு ஆரியர் என்றால் உயந்தோர் என பொருள், அது ஞானத்திலும் அறிவிலும் சிறந்தோரையும் வீரத்திலும் சிறந்தோரையும் சொல்ல பயன்பட்ட சொல் சங்க இலக்கியம் இருவகை ஆரியர்களை சொல்கின்றது, முதலாவது இயமலையில் ஆரியர்கள் இருந்தார்கள் என ரிஷிகளை சொல்கின்றது இரண்டாவது வகை ஆரிய படை என்பது, அக்கால மன்னர்களிடம் இருந்த மிக சிறந்த தளபதிகள் வீரர்கள் அடங்கிய படை மிக உயந்த படை […]

தமிழக ஊடகங்களிலும் டிவிக்களிலும் ஒரு விஷயத்தை நீங்கள் அவதானிக்கலாம் அது கேரளாவில் ….

தமிழக ஊடகங்களிலும் டிவிக்களிலும் ஒரு விஷயத்தை நீங்கள் அவதானிக்கலாம் அது கேரளாவில் நடந்த அந்த இரு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் இந்தியாவில் மட்டுமல்ல உலகிலே பெரும் அதிர்ச்சியினை அது ஏற்படுத்தியுள்ளது அந்த சம்பவம், இப்படியும் காட்டுமிராண்டிதனம் உண்டா அதுவும் கல்வி அறிவு மிகுந்ததாக நம்பபட்ம் கேரளாவில் உண்டா என்பதுதான் அதிர்ச்சியிலும் பெரும் அதிர்ச்சி இந்த சம்பவத்தின் தொடக்கம் லாட்டரி விற்பானியில் தொடங்குகின்றது, லாட்டரி விற்கும் தொழிலை எர்ணாகுளம் பக்கம் செய்தவர் ரஷீத் எனும் முகமது ஷபி […]

பழமொழி நானூறு : 08

“நல்லார் நலத்தை உணரின் அவரினும்நல்லார் உணர்ப பிறர் உணரார் -நல்லமயில் ஆடும் மா மலை வெற்ப மற்று என்றும்அயிலாலே போழ்ப அயில்” ( அயில் என்றால் இரும்பு என பொருள், மேலைநாட்டுக்கு இந்த வார்த்தை அயஸ் என்றாக மாறி சென்று பின் அயர்ண் என்றானது ) மயில்கள் ஆடும் மலைநாட்டை சேர்ந்த ஒருவனுக்கு புலவர் இப்பாடலில் போதிக்கின்றார் அழகான மயில்கள் ஆடும் நாட்டை சேர்ந்தவனே, இரும்பை இன்னிரு வலுவான‌ இரும்பால்தான் பிளக்க முடியும் அல்லது கூராக்க முடியும் […]

ஒளவையரின் ஞானகுறள்/ திருஅருட்பால் / அதிகாரம் 170 – பிறப்பறுதல் / குறள் : 10

“சிந்த யாங்காரஞ் செறிபுல னற்றக்கால்முந்தியே யாகுமாம் வீடு” அதாவது “சிந்தை ஆங்காரம் செறிபுலம் அற்றக்கால் முந்தியே ஆகுமாம் வீடு” அகங்காரமான எண்ணங்களை ஐம்புலன்களிலும் இருந்து விடுவித்தால், ஐம்புலன்கள் வழி உலக மயக்கங்ளில் வீழாமல் அந்த புலன்களின் உணர்ச்சியினை அடக்கினால் வீடுபேறு அடையலாம் என்பது பொருள் ஐம்புலன்களையும் அடக்கி, புலன்களின் உணர்ச்சியில் இருந்து மனதை வீடு பேறு எனும் முக்தி கிடைக்கும் என்பது குறளின் பொருள்

நாச்சியார் திருமொழி : 24

அன்று தோழியரோடு சுனை எனும் மலையில் இருக்கும் தடாகத்துக்கு குளிக்க சென்றிருந்தாள் ஆண்டாள், அங்கும் அவளின் துணிகள் காணாமல் போயின, அதை கண்ணனே எடுத்திருக்க வேண்டும் எனும் ஆத்திரத்தில் பாடுகின்றாள் ஆண்டாள் “பரக்க விழித்தெங்கும் நோக்கிப்பலர்குடைந் தாடும் சுனையில்அரக்கநில் லாகண்ணநீர்கள்அலமரு கின்றவா பாராய்இரக்கமே லொன்று மிலாதாய்இலங்கை யழித்த பிரானேகுரக்கர சாவதறிந்தோம்குருந்திடைக் கூறை பணியாய்” ( அதாவது அரக்க பரக்க நான் கு திசைகளிலும் கண்களை ஓடவிட்டு (யாருமில்லாததை உறுதி செய்துகொண்டு),சுனையில் முங்கிக் குளிக்கும் போது, கண்களில் கண்ணீர் […]

இந்தி எதிர்ப்பு என அங்கிள் சைமன்

இந்தி எதிர்ப்பு என அங்கிள் சைமன் சொல்வதுதான் உலகின் மிகசிறந்த காமெடிகளில் ஒன்று அவரின் அண்ணனும் இன்று சைமனை வெளிநாட்டு காரில் தும்பிகள் புடைசூழ வரசெய்தவருமான அந்த அந்நிய தீவின் புலிதலைவரும் அவரின் மக்களும் இலங்கை தேசிய மொழியான சிங்களத்தை கற்றிருந்தனர் புலிகளின் ஆரம்பகால தாக்குதலெல்லாம் சிங்கள மொழியில்தான் நடந்தன , இலங்கை ராணுவத்தை அப்படித்தான் குழப்பினார்கள் அதற்கு மேல் அந்த புலியினர் இந்தியாவில் பயிற்சிபெற்ற காலங்களில் இந்தியும் கற்றிருந்தனர், பின்னாளில் இந்திய ராணுவத்துடனான மோதலில் அதுதான் […]

400 ஆண்டுகளாக அனாதை இந்துக்களாக

தமிழகத்தில் ஏன் இவ்வளவு இந்து துவேஷம் ஆளாளுக்கு இந்து துவேஷமும் இந்து பாரம்பரியம் மேல் இவ்வளவு தாக்குதலும் என்றால் விஷயம் இல்லாமல் இல்லை பிரிட்டிஷார் இந்த பாரத நாட்டை ஆளதொடங்கியபொழுது , மிக சிறிய எண்ணிக்கை கொண்ட அவர்களால் இந்த மாபெரும் நாட்டை ஆள்வதற்கு இங்கு சிக்கலும் மோதலும் அவசியம் என கண்டார்கள், வட இந்தியாவில் ஆப்கானிய வம்சாவழிக்கும் இந்துக்களுக்கும் உள்ள பிரச்சினை நீருபூத்த நெருப்பாக இருந்தது அதனால் அங்கு அவர்கள் ஆட்சி நிலைக்க வழியாயிற்று தென்னிந்தியாவில் […]

அண்ணே ஒரு உதவிண்ணே

அண்ணே ஒரு உதவிண்ணே என்னடா உபி, சங்கிட்ட உனக்கு என்ன உதவி? அண்ணே எங்க தலைவர் நிம்மதியா தூங்கணும், நாங்கெல்லாம் கட்சிக்கு பெருமை தேடி தரணும் அதுக்கு என்னெண்ணே செய்யணும், ஒண்ணுமே புரியமாட்டேங்குது அப்ப பாஜக பக்கம் வந்திரு போதும் அண்ணே அவரு நெஞ்சே வெடிச்சிரும்ணே, வேற ஏதாவது சொல்லுங்கண்ணே மக்களுக்கு என்ன செஞ்சிருக்க? தேர்தல்னா அள்ளி கொடுப்போம்ணே, அப்புறம் தூக்கி போட்டு மிதிப்போம்ணே அவ்வளவதாம்ணே தெரியும் உனக்கு மக்கள்கிட்ட நல்ல பெயர் வேண்டும் அப்படித்தான? ஆமாண்ணே […]

பழமொழி நானூறு : 07

“புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்புலம் மிக்கவர்க்கே புலனாம்-நலம் மிக்கபூம் புனல் ஊர் பொது மக்கட்கு ஆகாதேபாம்பு அறியும் பாம்பின கால்” புலவர் ஒருவனுக்கு போதனை சொல்வதாக அமைகின்றது இப்பாடல் புலவர் சொல்கின்றார் நல்ல நீர்மிக்க ஊரை கொண்டவனே, அறிவு மிக்கவரை அறிவு மிக்கவரேதான் கண்டு கொள்ளமுடியும் எல்லா மக்களாலும் கண்டுகொள்ள முடியாது ஒரு பாம்பு எப்படி நகர்கின்றது ஓடுகின்றது என்பது இன்னொரு பாம்புக்குத்தான் தெரியும் மற்றவர்களுக்கு தெரியாது, அப்படி கற்ற அறிவாளிகளை, பெரும் ஞானஸ்தன்களை இன்னொரு அறிவாளிதான் […]

தாமரையின் உளரல்

தமிழ், தமிழர் என அந்நிய தீவில் இருந்து தமிழர்களை நாடு நாடாக ஓட செய்த அந்த அவலம் இங்கு வேண்டாம், அப்படி உங்களுக்கு இந்நாடு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் தொப்புள்கொடி உறவுகள் போல தானாக வெளியேறலாம் அங்கு இப்படித்தான் தமிழ் தமிழ்தேசியம் என சொல்லி வெறியேற்றி கடைசியில் தமிழீழம் நாடு கடந்ததும் பல்லாயிரகணக்கான மக்கள் செத்ததும்தான் மிச்சம், வேறு என்ன கிழித்தார்கள்? தமிழ் தமிழர் அங்கு நடந்த அழிவெல்லாம் இங்கும் நடக்கவேண்டும் என்பதெல்லாம் அபத்தம், தமிழன் […]