காளிதாசனின் மேகதூதம் : 10
ஒன்பதாம் பத்து ஸ்லோகங்கள் “மேகமே, என் வீட்டில் அந்த குளத்தின் கரையில் இந்திர நீல கற்கலால் அமைந்த ஒரு குன்றை காண்பாய், அது நானும் என் காதலியும் அமர்ந்து விளையாட உருவாக்கபட்டது, அந்த நீல நிறத்தில் இருக்கும் அந்த குன்றினை சுற்றி தங்க வாழைமரங்கள் அமைக்கபட்டிருக்கும் நடுவில் நீலநிறமும் சுற்றிலும் தங்க நிறமும் கொண்டிருக்கும் அக்குன்று, கருநீல நிறமான உன்னை சுற்றி மின்னல் வெட்டும் அந்த அழகான காட்சியினை கொண்டிருக்கும், உன் அழகினை அந்த குன்றில் காண்பாய் […]