பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஹிட்லரின் வாழ்க்கையில் இந்த நவம்பர் 8 முக்கியமான நாள்

ஹிட்லரின் வாழ்க்கையில் இந்த நவம்பர் 8 முக்கியமான நாள் இன்றுதான் மிகபெரிய கொலைமுயற்சியில் இருந்து தப்பினார், அல்லது விதி அவர் பயங்கர ஆட்டம் போட ஒத்துழைத்தது. ஒருமனிதன் தன் கர்மபலனை அனுபவிக்காமல் சாகமாட்டான் அல்லது குறித்தகாலம் வரும்வரை அவனை கொல்லமுடியாது என்பது அதுதான் அது 1939ம் ஆண்டு, அன்று பிரிட்டன் வல்லரசு. அமெரிக்கா கனடா போன்ற செழிப்பான நாடு , ரஷ்யா கம்யூனிச கோட்பாடுகளை பரிசோதித்துகொண்டிருந்தது ஹிட்லர் உலகை மிரட்ட தொடங்கியிருந்தார், அவரை கண்டு ஐரோப்பா அச்சபட்ட […]

இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர்

இந்திய அரசியலில் அவர் நிச்சயம் புரட்சியாளர், ஒரு மாபெரும் திருப்பத்தை இந்நாட்டுக்கு கொடுத்தவர், சீனாவின் மாவோ அல்லது டென் பிங் சாயல் அவரில் உண்டு. ஜெர்மனியின் பிஸ்மார்க் சாயலும் உண்டு லால் கிருஷ்ண் அத்வாணி, கராச்சியில் பிறந்தவர் தேசபிரிவினையில் டெல்லி வந்தவர். ஆர்.எஸ்.எஸின் அணைப்பில் வளர்ந்தவர். நிச்சயம் தேசபற்றாளர் இந்நாட்டின் ஒவ்வொரு நிலையினையும் பார்த்தே வளர்ந்தார், சரியான விஷயங்களை அவர் பாராட்டவும் தயங்கவில்லை நாட்டுக்கு கெடுதலான விஷயங்களை அவர் கண்டிக்கவும் தயங்கவில்லை நாடு ஒன்றே அவரின் மூச்சானது, […]

கருப்பு காக்கைகள் கத்திகொண்டே இருக்கட்டும்

அட போங்கடா, கருப்பு பண ஒழிப்புக்கு பின்பே பாஜக மாபெரும் வெற்றியில் இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்தது தேசத்தில் நல்லோரும் நாட்டுபற்றுள்ளோரும் அதிகம் என்பதற்கும், கருப்பு பண ஒழிப்பை தேசம் வரவேற்றிருக்கின்றது என்பதற்கும் வேறு சான்று தேவையா என்ன? கத்தும் கருப்பு காக்கைகள் கத்திகொண்டே இருக்கட்டும்

ஒரு மிக உல்லாசமான தலைமுறை உருவாகிவிட்டது

ஒரு மிக உல்லாசமான தலைமுறை உருவாகிவிட்டது, இந்த தலைமுறைக்கு சுயநலமும் தன் நலமும் மட்டும் முக்கியம், நாட்டை பற்றி கொஞ்சமும் கவலை இல்லை இந்நாடு சுதந்திர போராட்டத்தில் அவ்வளவு இழந்தது, ஒவ்வொரு தலைவனும் அவன் குடும்பமும் பொதுமக்களும் இழந்தது கொஞ்சமல்ல‌ சுதந்திரத்துக்கு பின்னும் எவ்வளவோ கஷ்டபட்டார்கள், ஆனால் நாடென்றால் அள்ளிகொடுத்தார்கள் பாகிஸ்தான், சீனபோரில் ஒவ்வொரு குடும்பமும் கொடுத்தது கொஞ்சமல்ல, அரைவேளை உணவுக்கு வழியில்லா குடும்பமும் முடிந்ததை கொடுத்தது வைகை அணை கட்ட ஊரையே காலி செய்த குடும்பங்கள் […]

தேசத்துக்கான கிகிச்சை நடந்த நாள்

கறுப்பு பண ஒழிப்பு என ஆளாளுக்கு பலர் விமர்சித்தாலும் அதன் பின்புதான் இந்நாட்டின் உண்மையான பொருளாதாரம் விளங்க தொடங்கிற்று வெற்று பிம்பத்திலும் ஊதிபெருக்கபட்ட பொருளாதார தோற்றத்திலும் இருந்த மாயையில் இருந்த இந்தியாவினை இந்நாளே தோலுரித்து காட்டிற்று இந்த நாளுக்கு முன்புவரை வங்கிகளின் உண்மை நிலை தெரியாது, பொருளாதார தூண்களான பெரும் முதலைகளின் உண்மை நிலை தெரியாது யாருக்கு எவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது எனவும் தெரியாது, தொண்டு நிறுவணங்களின் முண்டுக்குள் இருந்த பணம் தெரியாது கருப்பு பண […]

ஏதோ சொல்லவருகின்றார் மய்யத்து தலைவர்

கமல் குடும்ப விழாவில் பூஜாகுமார் கலந்துகொண்டார் என்கின்றது செய்தி ஆக தமிழ்கூறும் நல்லுலகத்துக்கு ஏதோ சொல்லவருகின்றார் மய்யத்து தலைவர் சரிகாவினை திருமணம் செய்தபொழுது வாழ்த்து வாங்க சிவாஜியிடம் சென்றார் கமலஹாசன், அப்பொழுது சிவாஜி இப்படி சொன்னார் என்றன செய்திகள் “அய்யா ராசா.. நல்லா இருப்பா நல்லா இரு. ஆனா இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு இந்த பக்கம் வராதேப்பா… அம்புட்டுதான் சொல்லுவேன்” அதையே வாணிகணபதி எனும் கமலின் முதல் மனைவி இப்படி சொன்னார், அதாவது சிம்ரனோடு கமலஹாசன் கிசுகிசுக்கபட்ட […]

மதசாயம் பூசுவதை எதிர்க்கின்றோம் போராளிகள்

திருகுறள் தமிழர் அடையாளம் என்பதால் அதற்கு மதசாயம் பூசுவதை எதிர்க்கின்றோம் போராளிகள் அடேய், கல்லணை முதல் தஞ்சைபெரியகோவில் தொடங்கி மதுரை மீனாட்சி அம்மன் ஆலயம் எல்லாமே தமிழர் அடையாளம்தான் தொல்காப்பியத்தில் இருந்து பாரதிவரை எல்லாமே தமிழர் அடையாளம்தான், கம்பனும் வள்ளுவனும் இளங்கோவும் தமிழர் அடையாளமே ஏதடா இங்கு தமிழர் அடையாளம் அல்லாதது? தேவாரம் திருவாசகம் முதல் எல்லாமே தமிழர் அடையாளமே.. அவ்வைக்கு ஆரல்வாய்மொழி பக்கம் கோவில் உண்டு, கம்பனுக்கு தேரெழுந்தூர் பக்கம் உண்டு அப்படியே வள்ளுவனுக்கும் மயிலாப்பூரில் […]

சங்கம் மூடபடுகின்றது

நம் நண்பர்களின் வாக்குகள் அந்த குஷ்பு சங்கத்தை மூடு என பெரும்பான்மையாக சொல்லியிருப்பதால் , இந்த ஐப்பசி ஏகாதசியில் சங்கம் மூடபடுகின்றது எனினும் சங்கம் மூடபட்டாலும் நாம் எதற்காக குஷ்புவின் ரசிகன் ஆனோமோ அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன‌ காரணங்கள் அப்படியே இருக்கும் பொழுது கொள்கையினை கைவிடலாமா என கேட்பீர்களானால் அன்றைய சீமான் அண்ணாதுரை என்ன சொன்னார் என நினைத்து பாருங்கள் “திராவிட நாடு கோரிக்கையினை கைவிடுகின்றோம் ஆனால் அதற்கான காரணங்கள் அப்படியே உள்ளன” அய்யா காரணம் […]

இது இந்தியா முழுக்க பரவட்டும்

இனிமேல் வாரணாசி ரயில்வே ஸ்டேஷனில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் பயணிகளின் வசதிக்காக அறிவிப்புகள் செய்யப்படும் என அறிவிப்பு வந்தாயிற்று இது வட இந்தியா முழுக்க சாலை அறிவிப்புக்கள், பெயர் பலகைகளில் வந்தால் இங்கு அதாவது தமிழ்நாட்டில் ஒரு பயல் தார்சட்டி தூக்கமுடியும்? இது இந்தியா முழுக்க பரவட்டும், புனிதமான காசியில் இருந்து தொடங்கட்டும்

பஞ்சமி நிலங்கள் குறித்து அதிமுக வாய் திறக்கவில்லை

முரசொலி பஞ்சமி நிலங்கள் குறித்து அதிமுக வாய் திறக்கவில்லை, திறக்கவும் திறக்காது கோயில் நிலங்களை ஆக்கிரமித்தவர்களுக்கு பட்டா வழங்குவது குறித்து திமுக மூச்சு கூட விடவில்லை அது விடவும் விடாது நாம் முன்பே சொன்னபடி இங்கு இவர்களுக்கு இடையில் ரகசிய இழை எக்காலமும் இப்படி ஓடும், ஒருவித புரிந்துணர்விலே இருப்பார்கள் இரு கட்சியும் ஒழியாமல் இங்கு மாற்றமில்லை என்பதுதான் நிஜம் திமுக ஒரு போராளி பூனை வேடம் போடும், அதை காட்டி அதிமுக அரசியல் செய்யும் லாபம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications