அந்த வரலாற்று இடத்தை அவருக்குத்தான் கொடுக்கவேண்டும்
இளையராஜா இசை அமைக்க வந்து 40 ஆண்டுகள் ஆகின்றன, இந்த 40 ஆண்டுகளும் அவர் எங்கு இசை அமைப்பார் என்றால் பிரசாத் ஸ்டூடியோவில்தான் இசை அமைப்பார், அந்த ஏ.எல் பிரசாத் என்பவர் தான் பயன்படுத்திய அறையினையே கொடுத்திருந்தார் இளையராஜாவின் சாகா வரம்பெற்ற பாடல்கள் இங்கிருந்துதான் உதயமாயின, அப்பாடலின் கருவறை அது கர்ப்பகிரகமும் அது, இசையின் சன்னதி அது அப்படிபட்ட ஸ்டூடியோவில் இதுகாலமும் சிக்கல் இல்லை. பிரசாத் ஸ்டூடியோ நிதிசிக்கலில் சிக்கியபின் இளையராஜாவிடன் வாடகை கேட்டிருகின்றார்கள், அவரும் என்ன […]