பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வள்ளுவனை முதலில் அடையாளபடுத்தியது வெள்ளையன் எல்லீஸ்

உண்மையில் வள்ளுவனின் வரலாறு முழுதாக கிடைக்கவே இல்லை, அவனுக்கு வாசுகி என்றொரு மனைவி இருந்தாள் அவள் கீழே விழுந்த‌ சோற்றுபருக்கையினை ஊசியால் குத்தி கழுவினாள் என்பதெல்லாம் கட்டுகதை ஆதாரமில்லை முழுவரலாறும் கிடைக்கவில்லை என்பததால்தான் வள்ளுவனின் புனிதபிம்பம் அப்படியே இருக்கின்றது, இல்லாவிட்டால் எல்லா கவிஞனுக்கும் உள்ள பலவீனம் போலவே வள்ளுவனின் இன்னொரு பக்கமும் வந்திருக்கும் வள்ளுவனை ஆய்வு செய்தவர்கள் பல்வாறு கருத்து கூறினார்கள் வ‌ள்ளுவநாட்டை சேர்ந்தவர் என்றும் சிலர் சொன்னார்கள், வள்ளுவ நாடு என்பது நாஞ்சில் நாட்டிற்கு அடுத்து […]

வள்ளுவரை பற்றி பற்றி எவ்விதமான துல்லிய குறிப்புகளுமில்லை

குறள் என்பது இலக்கண வடிவம், யாரும் எழுதலாம் என்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட சான்றோர் எழுதி தொகுத்த நூல் என்ற அனுமானமும் உண்டு வள்ளுவரை பற்றி பற்றி எவ்விதமான துல்லிய குறிப்புகளுமில்லை, ஓலைசுவடியில் குறள் இருந்தது பெற்றோம் அவ்வளவே. இதில் காணாமல் போனது, கரையான் அரித்தது எவ்வளவோ மிக சில பண்டைய இலக்கியங்களில் வள்ளுவனின் குறள் என வந்திருப்பதால்தான் குறளை எழுதியது அவர் என்ற முடிவுக்கே வந்தார்கள் வள்ளுவன் மனைவி வாசுகி என்பதெல்லாம் ஆதாரமில்லா புனைவுகள் அவர் சமணர், […]

வள்ளுவன் இந்து என எப்பொழுதோ உறுதியாயிற்று

இயேசு எங்காவது தான் ஒரு யூதன் எனவும், ஜகோவாவின் மதம் எனவும் சொன்னாரா? இல்லை காரணம் அந்த யூதேயாவில் அது சிக்கல் இல்லை, இயேசு யூதேயாவினை தாண்டியதுமில்லை அரிஸ்டாட்டில் எங்காவது தான் கிரேக்கமதத்தான் என சொன்னாரா இல்லை, காரணம் அவர் கிரேக்கத்தை தாண்டியதில்லை ஹோமர் எனும் பெரும் கிரேக்க புலவனுக்கு தான் கிரேக்க மொழி மற்றும் மதத்தான் என நிறுவ அவசியமே இல்லாதவாறு இலியட்டும் ஒடிசியும் நிற்கின்றது காளிதாசனுக்கு தான் இந்து எனவும் சமஸ்கிருத வித்வான் எனவும் […]

என்ன அநியாயம் இது?

சென்னை எம்ஜிஆர் நகரில் குடிபோதையில் தன் இரண்டு மாத குழந்தையை கொன்ற தந்தையும் மற்றும் அதை மறைக்க முயன்ற தாயும் கைது என்ன அநியாயம் இது? இதற்கு கைதா? தண்டனையா? அந்த தந்தைக்கு கைநிறைய பணம் கொடுத்து உன் மனைவிக்கு என்ன அரசு வேலை வேண்டும் என கேட்பதல்லவா தர்மம் எங்கே திருமா? சொல்லுங்கள் இவருக்கு 1 கோடி கொடுக்க வேண்டுமா இல்லை ஒரு டோல்கேட்டையே எழுதி வைத்துவிடலாமா?

என்ன நடக்குமோ தெரியவில்லை

விக்ரம் என்றொரு பழைய கமலஹாசன் படத்தில் ஒரு ராஜா இருப்பார், ஆனால் சத்தியராஜ் அந்த ராஜாவினை ஆட்டி வைத்துகொண்டிருப்பார் அப்படி டிரம்பும் விக்ரம் படத்து அம்ஜத்கானாக மாறிவிட்டார், சிரியாவில் இருந்து வெளியேறுகின்றோம் என அவர் சிலதினங்களுக்கு முன்பு சொன்னதை அவர் மண்டையில் தட்டி மறுத்து சொல்ல வைத்திருக்கின்றது ஒரு சக்தி சிரியாவில் இருந்து அமெரிக்கா வெளியேறாது அது வடக்கில் ஈராக்கிய ஒட்டிய எண்ணெய் வயல்களுக்கு காவல் இருக்கும் என சொல்லிவிட்டது அமெரிக்கா டிரம்பினை ஏதோ ஒரு சக்தி […]

கோவில் சொத்தை தொட்டவனும் கெட்டான் எடுத்தவனும் கெட்டான்

சென்னை கோட்டையில் இருப்பதால் அமைச்சர்கள் அக்கோட்டை நிலத்தை பட்டா போடமுடியாது, கோவில் நிலங்களை அங்கு குடியிருப்போருக்கு கொடுக்க அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாதுஆலயம் என்பது தனிபட்ட விவகாரம், அதற்கு அறநிலையதுறை என்றொரு அராஜக துறையினை அமைத்ததே மாபெரும் தவறுஇங்கு மசூதிகளும் வேளாங்கண்ணி போன்ற ஆலயங்களும் அவரவரிடம் இருப்பது போலவே இந்து ஆலயங்களையும் அவற்றின் சொத்துக்களையும் ஆலய நிர்வாகத்திடமே விட்டுவிட வேண்டும்அரசுக்குத்தான் அறிவில்லை என்றால் ஆலய சொத்துக்களை பட்டா போட வரிசையில் நிற்பவருக்குமா யோசனை இல்லைசிவன் சொத்து குல […]

தமிழக தினம்

கிட்டதட்ட 630 நாடுகளை பிடித்து வெள்ளையன் உருவாக்கியது பிரிட்டிஷ் இந்தியா, இரு வகையாக ஆண்டுகொண்டிருந்தான் ஒன்று வெள்ளையன் ஆளுநர், இன்னொன்று வைஸ்ராய்களின் மேலாண்மையினை ஏற்றுகொண்ட உள்ளூர் மன்னர்களால் சமஸ்தானம் என அழைக்கபட்டது, உச்ச அதிகாரம் வெள்ளையனுக்கே. மெட்ராஸ் ஸ்டேட் எனப்பட்ட பகுதிக்கு கவர்ணர் உண்டு, மைசூர், ஐதரபாத், திருவாங்க்கூர் எல்லாம் சமஸ்தான வகையறா மன்னர்தான் உண்டு, அதாது இவை 4ம் கலந்துதான் பெரியார் சொன்ன திராவிட நாடு பிரிட்டன் அரசு கிழக்கிந்திய கம்பெனியிடமிருந்து இந்தியாவினை கையகபடுத்திய பின், […]

இந்திய ஜெர்மன் உறவில் இது புது அத்தியாயம்

உலகில் மகா சக்திவாய்ந்த நாடு ஜெர்மன், பெரும் ராணுவபலம் இல்லை எனினும் மிக வலுவான பொருளாதார சக்தி அது. என்ன இருந்தாலும் ஹிட்லரின் பூமி அல்லவா? அதனால் அந்நாடு வலுவான ராணுவம் அமைத்துவிட கூடாது என்பதில் பல நாடுகளுக்கு கடும் ஆசை ஜெர்மனும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் அதன் போக்கில் வளர்ந்து நிற்கின்றது, இன்று ஐரோப்பாவினை ஆட்டிவைக்கும் தேசம் அதுதான். பிரிட்டன் எல்லாம் பிடி இழந்தாயிற்று எலக்ட்ரானிக்ஸ் நுட்பத்தில் யாரும் இருக்கலாம் ஆனால் மிக கடுமையான விஷயமான […]

மக்கள் நலமும் அரசுக்கு வரியும் மகா முக்கியம்

விஜய் சேதுபதி மான்டி எனப்படும் பலசரக்கு மளிகைக்கான ஆப்ஸ் விளம்பரத்துக்கு வந்ததை கண்டிக்கின்றார்கள், இதெல்லாம் வியாபாரிகளை ஒழித்துவிடும் இவர் படத்தை ஆண்லைனில் ஓடவிடுவாரா என ஏக இம்சைகள் இவர்கள் எந்த காலத்தில் இருக்கின்றார்கள் என்பதே தெரியவில்லை, காலத்தோடு ஓடாத எதுவும் நிலைக்காது, மாட்டு உழவுகள் டிராக்டர் முன் நிற்காது பழைய பாகவதர் கால படங்களை இனி எடுக்க முடியாது ஏன் பிலிம் கம்பெனியே மூடபட்டு டிஜிட்டல் உலகமாகிவிட்டது அந்த பிலிம் கம்பெனி தொழிலாளர் கதி என்ன? இந்த […]

எடியூரப்பா அழிச்சாட்டியம் செய்வதில் எமக்கு உடன்பாடில்லை

திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாடமாட்டோம் என எடியூரப்பா அழிச்சாட்டியம் செய்வதில் எமக்கு உடன்பாடில்லைநிச்சயம் திப்பு சுல்தான் மைசூர் மன்னனின் பரம்பரை அல்ல, இடையில் அந்த அரசை ஹைதர் அலி கைபற்றுகின்றான், அவன் வாரிசாக திப்பு அமர்கின்றான்ஆனால் மிகபெரும் பொற்காலமாக அவன் காலம் திகழ்ந்திருக்கின்றது இன்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு இணையான செல்வம் அவன் ஆட்சியில் இருந்திருகின்றது, ஆட்டோமான் அரசுக்கு பின் உலகில் நோக்கபடும் இஸ்லாமிய அரசனாக அவன் இருந்திருக்கின்றான்நெப்போலியன் தேடிய மாவீரனும் திப்புவேதிப்புவின் வாள்முதல் அவன் படையில் பயன்படுத்திய […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications