பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவனுகளும் அவனுக சித்தாந்தமும்..

தமிழின் காலம் அகத்தியர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, அகத்திய சித்தன் ஒரு சிவனடியார் இமயமலையில் இருந்து வந்தவர் அவரின் சீடரான தொல்காப்பியரும் சிவனடியார், அவர்தான் தமிழக இலக்கணத்தை முதலில் எழுதினார் இப்படியாக தொடங்குகின்றது தமிழ்மொழியின் வரலாறு, அது பின் எப்படி வருகின்றது? தன்னைபாட “முத்தைத் தரு…” என அருணகிரி நாதருக்கு உத்தரவிடுகின்றான் முருகன், சிவபெருமானோ “கொங்குதேர் வாழ்க்கை” என தருமிக்கு பாடலே எழுதுகின்றான் ’உலகெலாமுணர்ந்து…’ சேக்கிழாருக்கு அடியெடுத்துக் கொடுத்ததும் அந்த ஈசனே.. இந்த மாணிக்கவாசகருக்கு நரியினை பரியாக்கி […]

சில்க் ஸ்மிதாவின் அழியா இடம்

பேசும்படங்கள் வந்தபொழுது தமிழக சினிமாவின் முதல் கவர்ச்சி கன்னி தவமணி தேவி (அவர் இலங்கை தமிழச்சி) அவரை குறிப்பிடும்பொழுது அக்கால சில்க் ஸ்மிதா என சொல்லும்பொழுதே புரியும் தமிழ்சினிமாவில் சில்க் ஸ்மிதாவின் அழியா இடம். ஆந்திராவின் ஏழை குடும்பத்தில் பிறந்தவர், பலவகை தோல்விகளுக்கு பின், திருமண தோல்விக்கும் பின்னர்தான் ஒப்பனை கலைஞராக சினிமாவிற்கு வந்தவர், பின் நடிகை ஆனார். அவரை சினிமாவிற்கு கொண்டுவந்தது யார் என ஆளாளுக்கு தன்னை காட்டுவார்கள். வைரத்தை கண்டெடுத்து யார்? என்பதா முக்கியம், […]

இந்த திராவிட குஞ்சுகள் கொஞ்சம் பல்டி அடிக்கின்றன‌

இந்த திராவிட குஞ்சுகள் கொஞ்சம் பல்டி அடிக்கின்றன‌ கீழடி ஏதோ உலக நாகரிகத்தின் தொடக்கம் என கிளம்பிய அவற்றுக்கு அவை வெறும் 2600 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது என்றவுடன், நாம் தமிழரின் மதம் இந்து என்பதை மறுக்கவில்லை ஆனால் பிராமணன் உள்ளே வந்து பல கொடுமைகளை செய்து தமிழரை மடைமாற்றிவிட்டான் அதைத்தான் சாடுகின்றோம் சொன்னோம் என அதிரடி ஜிம்னாஸ்டிக் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் அவர்கள் வாதபடி பிராமணன் வந்தவனாகவே இருக்கட்டும், ஆனால் பிராமணன் வந்து இந்துக்களை இந்துக்களாக வைத்து […]

அந்நாட்டில் நதிகள் கிடையாது, பெரும் விவசாய நிலங்கள் கிடையாது ஆனால் துறைமுகங்கள் உண்டு இந்த சூயஸ்கால்வாய், வாஸ்கோடகாமாவின் சாகச பயணத்துக்கு முன்பு ஐரோப்பிய கப்பல்கள் மத்திய தரைகடலின் அப்பக்கம் நிற்கும் இந்திய சீன கப்பல்கள் செங்கடல் அல்லது ஜெட்டா பக்கம் நிற்கும் தரைவழியாக சரக்குகள் அங்குமிங்கும் செல்லும் அங்கிருந்து குதிரை, வான்கோழி என பல வந்தாலும் குதிரை தனி இடம் பிடித்தது, அவை அரபு குதிரைகள் அல்ல மாறாக ஐரோப்பாவில் வளர்க்கபட்டு அரேபிய சந்தைக்கு வந்து இந்தியா […]

காலங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றன‌

காலங்கள் எப்படி எல்லாம் மாறுகின்றன‌ இந்தியருக்கு ஆளதெரியாது என்றது வெள்ளை சமூகம், காந்தியினை அரை நிர்வாண பக்கிரி என்றது. நேரு சோஷலிசம், பஞ்சசீல கொள்கை ,அணிசேரா நாடு என திரிந்தபொழுது அவரை அப்பாவிகளின் வரிசையில் வைத்து வஞ்சம் தீர்த்தது இந்திரா அவர்களுக்கு சூனியக்காரியானார் மன்மோகன் சிங் என்பவரை அவர்கள் மதித்தாலும் இவரிடம் பேசுவதை விட சோனியாவிடம் பேசினால் நல்லது என்ற முடிவில் இருந்தார்கள், மன்மோகனும் அதை தயக்கமின்றி ஏற்றார். 1990க்கு பின் வெள்ளமென முறையற்றவெளிநாட்டு பணம் பாய […]

நாங்குநேரி இடைதேர்தல்

நாங்குநேரி இடைதேர்தல் தேதி அறிவிக்கபட்டபின் சுவாரஸ்யமாகின்றது, விக்கிரவாண்டி உட்பட இரு தொகுதிகளுக்கு அடுத்தமாதம் தேர்தல் இதில் நான்குநேரியில் அமமுக நிற்கும் என எதிர்பார்க்கபட்ட நிலையில் தினகரன் விலகிவிட்டார், இதனால் வள்ளியூர் சந்தை பக்கம் perumal pandian என்பவனும் அவனின் கூட்டாளிகளும் கதறி கதறி அழுதுவிட்டு வள்ளியூர் தெப்பகுளம் பக்கம் மல்லாக்ககிடப்பதாக செய்திகள் சொல்கின்றன‌ சின்னம்மா வரட்டும் அப்புறம் இருக்கு என அவர்கள் அவர்களுக்கே ஆறுதலும் சொல்லிகொள்கின்றார்களாம் அத்தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கபட்டால் நயினார் நாகேந்திரன் நிற்கலாம் என்றார்கள், அவர் […]

ராமர்பாலம் பொய்யாம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ராமர்பாலம் பொய்யாம், அது தானாய் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் அமைந்ததாம் இந்த உலகில் எத்தனையோ லட்சம் தீவுகள் உண்டு , உதிர்த்துவிட்ட முத்து மாலையாக அல்லது பிய்த்து போட்ட பிரட் துண்டாக அவை கடலில் சிதறி கிடக்கும் இதில் ஒரு தீவில் இருந்து இன்னொரு தீவுக்கு எங்குமே பாலம் இல்லை, அப்படி ஒரு அமைப்பு எங்குமே இல்லை எத்தனையோ நெருக்கமான தீவுகளுக்கு இடையில் உலகில் எங்குமே அமையாத பாலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே […]

இந்த பிகில் படம் எப்பொழுது வரும் என தெரியவில்லை

இந்த பிகில் படம் எப்பொழுது வரும் என தெரியவில்லை, கால்பந்து விளையாட்டு கதை என்பது தெரிகின்றது இப்படம் வரும்பொழுது அவரை அழைத்துவரலாம், அவர் கால்பந்து கடவுள் ஆம் ஒரு கலை அல்லது விளையாட்டினை நேசிப்பவன் இன்னொருவன் அதை முறையாக செய்தால் கொண்டாடுவான் அவனே அதை கொலை செய்தால் விடமாட்டான் இந்த சிந்துபைரவி சிவகுமார், சலங்கை ஒலி கமலஹாசன் எல்லாம் அவ்வகை ஏன் நடிப்பு எனும் புனிதமான கலையினை ராம்சந்திரன் கொலையாய் கொல்வதை கண்டுதான் துப்பாக்கி எடுத்தார் ராதா, […]

இவர்களுக்கு என்னதான் சிக்கல்?

இவர்களுக்கு என்னதான் சிக்கல்? ஆதியில் மனிதன் கடவுளை தேடவில்லை, அட ஆதாம் ஏவாளே கடவுள் என்பவரை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் தன் போக்கில்தான் இருந்தார்கள், அவர்தான் தேடி தேடி வந்தார் விஞ்ஞானமும் அதை சொல்கின்றது மனிதன் சிந்திக்க ஆரம்பிக்க நெடுநாள் ஆயிற்று, காடுகள் மலைகளை விட்டு ஆற்றங்கரையில் நிலையாக வசிக்க ஆரம்பித்தபின்பே சிந்தனை தழைத்தபின்பே அவன் கடவுளை தேடினான் ஆற்றங்கரையில் எல்லாம் நாகரீகமும் மதமும் தோன்றிய தத்துவம் இதுதான் எல்லா இனங்களுக்கும் மொழி இருப்பது போல் மதங்களும் உண்டு, […]

திராவிட‌ நாடக கம்பெனி பிராமண சூது ஆதிக்கம்

காந்தியினை தலைவராக பிராமணரும் ஏற்றனர் அவர் பிராமணர் இல்லை, காமராஜரை காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகக்கவும் பிரதமராக்கவும் பிராமணருக்கு தயக்கம் இல்லை, தயக்கம் காமராஜரிடம் இருந்தது அப்துல்கலாமை ஜாதி பார்க்காமல் ஏற்று கொண்டவர் பிராமணர்கள் கண்ணதாசனையும், இளையராஜாவினையும் மதிக்கா பிராமணர் இல்லை அவர்கள் இவ்வளவுக்கும் அவ்விருவரும் பிராமணர் இல்லை யேசுதாஸ் பிராமணருமல்ல ஒரு கிறிஸ்தவர் ஆனால் அவரை அரவணைத்து புகழ்மிக்க பாடல்களை எல்லாம் பாடவைத்து புனிதமான சந்நிதியில் அக்குரலை ஒலிக்க வைத்து கொண்டாடியது பிராமண சமூகம் எம்.எஸ் சுப்புலட்சுமி […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications