பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அவரவர் உணவு அவரவர் உரிமை

“வயவாள் எறிந்து வில்லின் நீக்கிப்பயநிரை தழீஇய கடுங்கண் மழவர்அம்புசேட் படுத்து வன்புலத் துய்த்தெனத்தெய்வஞ் சேர்ந்த பராரை வேம்பிற்கொழுப்பா எறிந்து குருதி துஉய்ப்புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறைக்களிறுபுறம் உரிஞ்சிய கருங்கால் இலவத்துஅரலை வெண்காழ் ஆலியில் தாஅம்காடுமிக நெடிய என்னார் கோடியர்..” இந்த சங்க‌ பாடலின் பொருள் என்னவென்றால், தெய்வம் சேர்ந்த பரு அறை வேம்பின் – தெய்வம் தங்கிய பரிய அரையினையுடைய வேப்ப மரத்தடியில், கொழுப்பு ஆ எறிந்து – கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து, குருதி துஉய் – […]

எல்லா உணவும் மனிதனுக்காக படைக்கபட்டவை

யூதருக்கும் அரேபியருக்கும் ஒரே மாதிரியான அடையாளம் இருந்தது, அதாவது அவர்களும் மீசை தாடி, குல்லா ஜெருசலேம் நோக்கி தொழுதல், சுன்னத் என ஏக ஒற்றுமைகள் இருந்தன‌ யார் இஸ்லாமியர், யார் யூதன் என கண்டுபிடிக்கமுடியா அளவு சிக்கல் இருந்த நேரம், இஸ்லாமியரை அடையாளபடுத்த புதுவழி கண்டார்கள் விஷயம் ஒன்றுமில்லை, மீசையும் தாடியும் வைத்தால் யூதன், மீசையின்றி தாடி மட்டும் வைத்தால் இஸ்லாமியன் ஜெருசலேம் நோக்கி தொழுதால் யூதன், மெக்கா நோக்கி தொழுதால் இஸ்லாமியன் சிக்கல் தீர்ந்து இன்றுவரை […]

இதெல்லாம் திராவிட நியாயங்களாம்

இந்த இட ஒதுக்கீட்டிற்கு எதிராக பொங்குபவர்கள் யாரென்றால் திக, திமுக, திருமா இன்னபிற‌ இங்கே இட ஒதுக்கீடு வேண்டுமாம், தாழ கிடப்பவர்கள் மேலே வர வேண்டுமாம் இதைத்தான் இலங்கையில் இலங்கை அரசும் சொன்னது, ஈழதமிழர் கல்வியில் காலம் காலமாக ஆதிக்கம் செலுத்துகின்றனர், பெரும்பான்மை சிங்கள சமூகம் தாழகிடக்கின்றது, அவர்கள் மேல் எழும்ப இட ஒதுக்கீடு அவசியம் அதை சொன்னவன் தர்மபாலா, சிங்களருக்கு அவன் தெய்வம் தமிழகத்தில் அவன் இனவெறியன் ஆனால் இங்கு அதே இட ஒதுக்கீட்டை சொன்ன […]

இன்னமும் கேளுங்கள்

10% இட ஒதுக்கீட்டை எதிர்ப்போம் திராவிட , அம்பேத்கரிய‌ கோஷ்டிகள் அட 10% என்ன? 100% கூட நீங்களே எடுத்துகொள்ளுங்கள், ஆனால் பிரபல வக்கீல், டாகடர் இன்னபிற ஆலோசகர்கள் என பிராமணர்கள்தான் வந்து நிற்பார்கள் கடைசியில் கட்சி வழக்கோ, கட்சி தலைவரின் உடல்நலமோ, இல்லை கட்சியின் சொத்து கணக்குக்கான ஆடிட்டிங் எனப்படும் தணிக்கைக்கு எல்லாம் பிரமாண வக்கீல், டாக்டர், ஆடிட்டர் வித்தகரிடமே வந்து நிற்கின்றார்கள் 60 ஆண்டுகால இட ஒதுக்கீட்டில் ஒரு நிபுணரை கூட உருவாக்க முடியவில்லை […]

அன்று கற்றவர்கள் இருந்த அவை

இந்த வைகோ பாராளுமன்றம் சென்றால் கிழித்தெறிந்துவிடுவார், பைபிளில் வரும் சாம்சன் போல மாளிகையின் தூணை எல்லாம் பிடுங்கிவிடுவார் என ஏகபட்ட ஒப்பாரிகள் உண்மையில் வைகோ அங்கு சென்றால் என்ன செய்வார்? ஓரு புல்லும் புடுங்கமாட்டார். இந்திராவின் காலத்தில் வைகோ பேசினார் என்றால் அவரை பேசவிட இந்திராவுக்கு அவசியம் இருந்தது. ஈழவிவகாரத்தினை பாராளுமன்றத்தில் பேசுகின்றோம் என இலங்கைக்கு கண்சிமிட்டும் அவசியம் இருந்தது, அதற்கு மேல் திமுகவினை உடைக்கும் அரசியலும் இருந்தது ஏகபட்ட திட்டங்களுடனே வைகோ பேசவைக்கபட்டார், காலம் அப்படி […]

அந்த குறுகிய இந்திய பயணம் நன்றாகவே முடிந்தது

அந்த குறுகிய இந்திய பயணம் நன்றாகவே முடிந்தது, தந்தையின் முதலாம் ஆண்டு என்பது வாழ்வில் எவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டோம் என்பதை உணர்த்தியது தொட்டில் கட்டி ஆட்டிய தந்தைக்கு கல்லறை கட்டும் அளவு வாழ்வில் பாதியினை கடந்தாகிவிட்டது, காலம் யாருக்கு காத்திருக்கும், சூரியனை நிறுத்தி வைக்க நாம் என்ன நித்தி சாமியா? அவர் மறைந்து ஒரு வருடம் ஆகிவிட்டாலும், அந்த நாளில் மனம் கலங்கத்தான் செய்தது, சம்பிரதாய பிரார்த்தனைகள் மற்றும் இதர விஷயங்கள் செய்தாலும் மனம் நிறையவில்லை […]

தமிழக மக்கள் கையில்தான் இருக்கின்றது

வட இந்தியன் இங்கே வந்து குவிந்துவிட்டானாம், அதனால் ஒரே ரேஷன் கார்டு என்பது இங்கு சிக்கலாகிவிடுமாம். அவனுக்கும் சென்றுவிடுமாம் பெருந்தன்மைக்கு பெயர் போன தமிழினம் சொல்லும் மிக மட்டமான காரணம் இது மும்பையில் ஏகபட்ட தமிழர் உண்டு, மராட்டிய அரசின் நியாயவிலை கடைகளை கூட அவர்கள் எடுத்து நடத்திய காலங்கள் உண்டு தமிழன் இந்தியா எங்கும் செல்லலாம், எல்லா மாநிலத்திலும் வாழலாம் சம்பாதிக்கலாம் பீகாரிலும் ஒரிசாவிலும் பல்கலை கழகமே நடத்தலாம், சிவ் நாடார் போன்றவர்கள் பெரும் கணிணி […]

ஐ.என்.எஸ் விராட் கப்பல் ஓய்வுபெற்று உடைக்கபட போகின்றது

உலகின் மிக பழமையான விமான தாங்கி கப்பல் எனும் பெருமையினை வைத்திருந்த ஐ.என்.எஸ் விராட் கப்பல் ஓய்வுபெற்று உடைக்கபட போகின்றது இந்திய கப்பல்படையில் ஐ.என்.எஸ் விக்ராந்த்க்குபின் பெயர் பெற்ற கப்பல் அது, பல்வேறு நடவடிக்கைகளுக்கு அது பயன்பட்டது 1970களில் இருந்து 2013வரை அது இந்தியாவுக்கு அரணாய் நின்றது, அமைதிபடை காலங்களில் அது வங்ககடலில் நின்றது, ஆனால் முழு வீச்சில் களமிறங்கவில்லை சிக்னல்களை கண்காணிக்கும் பணியினை செய்தது, தாக்குதலை செய்யவில்லை, அது தாக்கியிருந்தால் புலிகூட்டம் ஒரு நொடி தாங்கியிருக்காது […]

நெல்லை கட்டாலங்குள மாவீரன் அவன்

அந்த‌ இந்தியா முகலாய வம்சத்தின் கடைசி காலங்களில் வித்தியாசமாக இருந்தது, அதாவது மொகலாய வம்சம் வீழ ஆரம்பித்த பின் ஆளாளுக்கு தங்கள் பகுதி அரசரானார்கள் புலிகள் இருந்த வரை வேலையாளாகவும் அவர்களுக்கு பின்னால் அந்த ஐரோப்பிய சொத்துக்களை அமுக்கியவர்கள் தொழிலதிபர்கள் ஆனது போலவும், இன்னும் 4 வருடம் கழித்து அதிமுகவில் 130 அணி உருவாக போக போவது போலவும் இருந்ந்தது நிலை தமிழகதிலும் நாயக்க ஆட்சிக்கு பின் வந்த‌ ஆர்க்காடு நவாபிடமிருந்து பலர் விடுதலை பெற்றதாக சொல்லிகொண்டார்கள், […]

விவகாரம் இன்னும் பல ஆண்டுகளுக்கு இழுக்கலாம்

அடக்க முடியாத யானையினை பட்டினி போட்டு வழிக்கு கொண்டுவருவார்கள், மானிட இனம் ஆதியில் இருந்தே செய்யும் தந்திரம் அது வீழ்த்தமுடியாத பலசாலியாக இருப்பவனை , அவனின் பலவீனம் பார்த்து அடிப்பது ஒரு வகை என்றால் அவனை பலமிழக்க வைத்து அடிப்பது இன்னொரு வகை ஈரானில் அதைத்தான் அமெரிக்கா செய்ய துடிக்கின்றது, அதுவும் கடந்த 10 ஆண்டுகளாக ஏகபட்ட தடைகள் எனினும் ஈரானை அவர்களால் முற்றிலும் அடக்க முடியவில்லை, அந்நாடும் வழிக்கு வருவதாக தெரியவில்லை அமெரிக்கா முரண்டு பிடிக்க, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications