பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

எது “பொட்டைதனமான அரசியல்”?

எது “பொட்டைதனமான அரசியல்”? தாய்குலங்களின் வாக்குக்காக அம்மா அம்மா என அன்றொருவர் அலறிகொண்டிருந்த அந்த அரசியல்.. இரு பெண்களை முன்னிறுத்தி பின்னிருந்து நடராசன் என்பவர் 25 ஆண்டுகளாக செய்த அந்த அரசியல் எல்லா சர்ச்சையிலும் மகா ரகசியமாக திமுகவினை முன்னிறுத்திவிட்டு பின்னால் பதுங்கிகொண்டு ஒன்றுமே தெரியா கன்னிபோல வலம் வந்த அந்த அரசியல்.. ஒரு கொள்கையுமில்லா கட்சியாக, திட்டமே இல்லா ஆட்சியாக வலம் வந்த அந்த அரசியல்.. “பொட்டதனமான அரசியல்” என்பது அவர்களுக்கு புதிதே அல்ல.. இதில் […]

போர் ஆமாம் போர்..

நாம் தமிழர் தும்பிகள், திராவிட இம்சைகளை அடுத்து அடுத்த சுற்று சண்டை சங்கிகளோடு தொடங்கிவிட்டது.. போர் ஆமாம் போர்.. ஒரு மனிதனுக்குத்தான் எவ்வளவு சோதனை? எங்கிருந்துதான் இந்த வயலில் மட்டும் இவ்வளவு களைகள் முளைக்கின்றன என தெரியவில்லை, இங்கு மட்டும் களைகளாக பெருகிகொண்டே இருக்கின்றன‌ என்ன செய்வது? களைகள் பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை. திருவையாறும் அந்த “கரை நாடக” இசையும் பிராமணருக்கு மட்டுமானது அல்ல, அல்லவே அல்ல. அதற்கு முன்பே அந்த இசை இருந்தது, நாயக்க மன்னர்களின் […]

விழித்துவிட்டார்கள் என்பது தெரிகின்றது

சவுதி அரேபியா புதிய திட்டத்தை அறிவித்திருப்பது உலக அரங்கில் சலசலப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது மற்ற நாடுகளை போல் அல்லாமல் எண்ணெய் ஆசியில் ஒரே இரவில் பணக்கார நாடு எனும் அந்தஸ்தை எட்டியது சவுதி உலகின் மிகபெரும் எண்ணெய் வளநாடு என்ற போதிலும் பணக்கார நிலையினை தக்கவைக்க அதற்கு இன்னும் வலுவான நிதி தேவை பல வகைகளில் அது தன் வருமானத்தை அதிகரித்தது, குறிப்பாக அந்நிய நாட்டு தொழிலாளர்களையும் தொழிலதிபர்களையும் அது குறிவைத்தது நேற்று அந்நிய நாட்டவர் 1.5 கோடி […]

மைக்கேல் ஜாக்சன்

அது தெருவோரமாக ஆடிகொண்டிருந்த கருப்பர் இசை குடும்பம், அந்த குடும்பத்தின் 7ம் பிள்ளை ஜாக்சன் அந்த சகோதரர்கள் நடத்திய இசைகுழுவில் நடனமாடி தன் வாழ்வினை தொடக்கினார் அவர் மின்னல் வேக அசைவுகளும் , சவால் நிறைந்த ஆட்டங்களும் அவருக்கு தனி புகழ் தேடிகொடுத்தன‌ பாடல் எழுதி, அதற்கு இசையமைத்து, பாடலுக்கு ஏற்றாற் போல் நடனம் ஆடுவது, இடை இடையே நடிப்பு என அனைத்தும் கலந்த ‘பாப்’ புதிய நடனத்தை அவர் படைத்தார் சொந்தமாக பாடல், இசை என […]

இவை எல்லாம் நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல‌

வடக்கே இஸ்லாமியருக்கு எதிரான சில வன்முறைகள் தொடங்கிவிட்டதாக தெரிகின்றது ஜெய் ஸ்ரீராம் என்ற கோஷத்துடன் இஸ்லாமிய மதராசாக்களை நோக்கி சில விரும்பதகாத சம்பவங்கள் நடப்பதாக பல செய்திகள் தெரிவிக்கின்றன‌ இவை எல்லாம் நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல‌ ஆச்சரியமாக எதிர்கட்சிகளான முலாயம் சிங், மாயாவதி ராகுல் என யாரும் இதை எல்லாம் கண்டிக்கவில்லை என்பதுதான் மகா சோகம் இவைகளை ஆரம்பத்திலே கிள்ளிவிடுவது நல்லது, இன்னொரு பெரும் சிக்கலில் நாடு வீழ்ந்தால் பாகிஸ்தான் போல இந்தியா நிலையும் பாதாளத்தில் […]

பார்வதிபுரம் குப்பைகளை விட அமேசானில் ஒன்றும் அதிகம் அல்ல..

அந்த இம்சை பிடித்த மழைபாடல், வெண்முரசு இம்சைகளை விட அமேசானில் ஒன்றும் குப்பைகள் சேரவில்லை விஷ்ணுபுர வாசக சதுர ஜால்ராக்கள் , மகாகவி தேவதச்சன் கவிதைகள் போன்றவற்றைவிட அந்த அமேசானில் குப்பைகள் இல்லை இவர் சொல்வதுதான் இலக்கியம், இவர் சொல்வதுதான் கவிதை, இவர் சொல்வதுதான் பாரதம், இவர் சொல்வதுதான் குப்பை அழிச்சாட்டியத்தின் உச்சத்திற்கு சென்றுகொண்டிருக்கின்றார் ஜெயமோகன் அந்த சிங்கப்பூர் சூரியகலாவும், அந்த மாவுகடைக்காரனும் நிச்சயம் இந்த ஆண்டின் பத்ம‌ஸ்ரீ விருதுக்கு தகுதியானவர்கள் ஏன் பரம்வீர்சக்ரா எனும் வீரதீரத்திற்கான […]

வெண்டக்காய் உடலுக்கு மிக நல்லது, ரஷ்யாவிலிருந்து திரும்பிய ஆதிலட்சுமி தகவல்

சோ ராமசாமி தன் போக்கில் எமர்ஜென்ஸியினை கலாய்த்துகொண்டிருந்தார், பத்திரிகை தடை இருந்த காலத்திலும் மகா ரகசியமாக ஆனால் ஆர்வமாக அவரின் துக்ளக் தேடபட்டு மக்களால் வாங்கபட்டது அதுவும் அத்வாணி, வாஜ்பாய் கைதுசெய்யபட்டபின் சோ ராமசாமியின் தாக்கம் அதிகமாக இருந்தது கலைஞரோ அட்டகாசமாக ஆடிகொண்டிருந்தார். ஸ்டாலின் உட்பட எல்லோரும் சிறைபட்டிருந்தனர். அந்த மிசா சட்டபடி கைது செய்யபட்டோர் எங்கிருக்கின்றனர், இருக்கின்றார்களா இல்லையா என்பது கூட தெரிவிக்கபடாது திமுக சார்பாக கைது செய்யபட்டோர் விவரம் கலைஞரிடம் இருந்தது ஆனால் முரசொலியில் […]

இனி ஒரு மிசா வந்தால் தமிழகத்தில் எதிர்க்க அப்படி தலைவன் உண்டு என நினைக்கின்றீர்கள்?

மிசா காலங்களை பற்றி எல்லோரும் எழுதிகொண்டிருக்கின்றார்கள் இந்திய ஜனநாயகத்து கருப்பு நாட்கள் அவை, சஞ்சய் மீதான சர்ச்சை, தன் மீதான தீர்ப்பு இவைகளை திசை திருப்ப இந்திரா அதனை செய்தார் என்பதில் மாற்றுகருத்து இல்லை இந்திய நாட்டிற்கு ஆபத்து வந்ததாகவும், அதனால் மிசா அறிவிக்க பட்டதாகவும் சொன்னார் இந்திரா முதல் எதிர்ப்பு கலைஞரிடமிருந்துதான் வந்தது, “ஆபத்து வந்தது நாட்டிற்கா? இந்திரா காந்தி வீட்டிற்கா?” என கேட்டது அவர்தான், அது இந்தியா முழுக்க எதிரொலித்தது காமராஜரை கலைஞர் அப்படி […]

நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும்

வெளிநாடுகளில் இருக்கும் சிலைகளை இந்தியா கொண்டுவர குறிப்பாக தமிழகம் கொண்டுவர என்ன நடவடிக்கையினை இந்தியா எடுத்தது என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருகின்றார் கனிமொழி அதில் தமிழகத்தின் 32 சிலைகள் விரைவில் கொண்டுவரபடும் எனவும் அவை அடையாளம் காணபட்டிருக்கின்றது எனவும் பதிலளித்துவிட்டது மத்திய அரசு நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்ட வேண்டும் தமிழக பொக்கிஷங்களை காக்க கேள்வி எழுப்பிய கனிமொழிக்கு வாழ்த்துக்கள், இன்னும் அவரிடம் இருந்து அதிகம் தமிழ்நாடு எதிர்பார்க்கின்றது கனிமொழி வெற்றிபெற உதவிய அக்கா தமிழிசைக்கும் […]

அது என்ன ? Macha Look?

அது என்ன ? Macha Look? இனி சாக்கடை அள்ளுதல் முதல் ஜல்லிகட்டு வரை பிராமண இளைஞர்களை எதிர்பார்க்கலாம் போல.. மடித்து கட்டிய லுங்கியும், வாயில் கட்டை பீடியோடும் வலம் வருவார்கள்.. தெருவில் சண்டை என்றால் பூனூலை கையில் சுற்றியபடி இனி தெறிக்கவிட போகின்றார்கள்..

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications