பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிக்கல் தீர்ந்துவிடும்

அவன் கருப்பனாக இருக்கட்டும், ஆப்ரிக்க வம்சமாக இருக்கட்டும் ஆனால் மனிதன், எல்லோரையும் போன்ற மனிதன். அவன் சுதா ரகுநாதனின் மகளை திருமணம் செய்வதில் யாருக்கு என்ன சிக்கல் என்றுதான் தெரியவில்லை சுதா ரகுநாதன் பத்ம விருது வாங்கியவராம், இந்த மும்மூர்த்திகள் எனப்படும் திருவையாறு கோஷ்டியில் தலமை பாடகியாம் மகளின் திருமணத்தை அங்கீகரித்தார் என்பதற்காக அவர் பத்ம விருதை திருப்பி கொடுக்க வேண்டுமாம், திருவையாறு சந்நிதியில் பாட கூடாதாம். நவீன தீண்டாமை என்பது இதுதான். அவன் இந்துமதம் தழுவுகின்றான் […]

கலைஞர் செய்த மிக முக்கியமான நல்ல விஷயம்

கலைஞர் செய்த மிக முக்கியமான நல்ல விஷயம் பல உண்டென்றாலும் அவரின் மிக சிறந்த நடவடிக்கை என்பது மாவட்டங்களின் பெயர்களிலிருந்தும், போக்குவரத்து கழகங்கள் பெயரிலும் இருந்த தலைவர்கள் பெயரை நீக்கியது முதலில் எல்லாம் நன்றாகத்தான் இருந்தது, சிக்கல் 1990க்கு பின் சாதிய சங்கங்களும் கட்சிகளும் அழிச்சாட்டியம் செய்ய ஆரம்பித்தபின் வந்தது பெரும் தலைவர்கள் சாதிய அடையாளமாக பார்க்கபட்டு, சாதி தலைவர்கள் பெயரில் மாவட்டம் வேண்டும், போக்குவரத்து கழகம் வேண்டும் என கோரிக்கை வலுத்தது அது போராட்டமுமானது யோசித்த […]

மகா அச்சமூட்டும் விஷயம்

கன்னியாகுமரியில் அந்த கொடுமை நிகழ்ந்திருக்கின்றது அவள் 11ம் வகுப்பு மாணவி, வகுப்பறையில் கணித ஆசிரியர் திட்டியிருக்கின்றார், பின் அமர சொல்லியிருக்கின்றார் அமர்ந்த மாணவி அப்படியே இறந்திருக்கின்றாள், ஆனால் அது தெரியாமல் வகுப்பு ஓடியிருக்கின்றது 1மணி நேரம் கழித்தே வகுப்பு கலையும் பொழுது அவள் இறந்த நிலையில் இருந்திருப்பது தெரிகின்றது இதெல்லாம் மகா அச்சமூட்டும் விஷயம் மாரடைப்பால் அவள் இறந்திருக்கலாம் அதுதான் வாய்ப்பு கல்வி சுமையும், அது கொடுக்கும் அழுத்தமும் வெறும் 16 வயது மாணவிக்கே மாரடைப்பு கொடுக்கும் […]

இன்றைய துளிகள் 24/06/2019

பத்திரமாக பாகிஸ்தானில் போய் இறங்க ஒருவழியினை நேற்று செய்துவிட்டது பாகிஸ்தான் அணி இந்திய அணியும் இப்பொழுது அதே சிக்கலில்தான் இருக்கின்றது என்பது கோலி அணிக்கான எச்சரிக்கை.. எப்படி? திமுகவினர் “தமிழ் வாழ்க” என்றதும் தமிழன்னை தன் சேலையினை தேடி ஓடினாளே அப்படியா? ராசா… கொப்பன் சொத்துக்களோடு உன்னையும் ஏலத்தில் விடுவார்களா? உன்னை ஏலம் எடுத்து செய்ய வேண்டியதை செய்ய தமிழகம் காத்திருக்கின்றது. தமிழகத்துக்கு ஒரு “பெரியம்மா ” ரெடி விஜய் டிவியின் பிக் பாஸில் இந்த பாத்திமா […]

மு.க ஸ்டாலினிடம் மட்டும் பம்முகின்றார்கள்

பிரேமலதாவிடம் வம்பிழுக்கின்றார்கள், ராமதாஸிடம் கிடுக்குபிடி கேள்வி கேட்கின்றார்கள் தமிழிசை எப்பொழுதும் நிருபர்களுக்கு அல்வா மாதிரி, விடமாட்டார்கள் தமிழக மீடியாக்களும் நிருபர்களும் எல்லா அரசியல்வாதிகளிடமும் கிடுக்குபிடி கேள்விகளை கேட்டு அவர்களை கோபபடுத்துவதி பார்ப்பதில் கில்லாடிகள் ஆனால் மு.க ஸ்டாலினிடம் மட்டும் பம்முகின்றார்கள். நிச்சயம் அவர் கலைஞர் போல அல்ல, 3 கேள்விகள் வசமாக கேட்டாலே மடங்கிவிடுவார் சில கேள்விகளை எழுப்பினால் பிரேமலதா, ராமதாஸை விட மிக கடுமையாக சிக்கிகொள்வார் ஆனால் அவரிடம் கடினமான கேள்விகள் ஏதும் எழுப்பபடவில்லை ஏன் […]

ஆனால் யோசிப்பார்களா என்பதுதான் விஷயம்

யாகங்களும் பிரார்த்தனைகளும் தேவைதான் ஆனால் கூடவே விஞ்ஞானத்தையும் பின்பற்றுவது தவறல்ல‌ தமிழகத்தில் வறட்சி நிலவுகின்றது, ஆனால் மேகங்கள் கூடுகின்றன சில இடங்களில் லேசாக பெய்கின்றது சில இடத்தில் அதுவுமில்லை டோனி மைதானத்தில் சும்மா நிற்பது போல் நிற்கின்றது மேகங்கள் இல்லா இடத்தில் ஒன்றும் செய்யமுடியாது, ஆனால் மேகங்கள் கூடிவிட்டால் வேதியல் பொடிகளை விமானம் மூல தூவி செயற்கை மழை பெய்ய வைக்கலாம் முடியுமா என்றால் நிச்சயம் முடியும் ஆனால் அரசு ஏனோ அதை பரிசீலிக்கவில்லை அவர்கள் அணுகுமுறை […]

அவரை நினைவுகூர்வதில் பெரும் மகிழ்ச்சி

தமிழுக்கு அவ்வப்போது அற்புத கவிஞர்கள் வருவார்கள், காலம் அந்த கொடையினை வழங்கும் அவர்களிடம் தமிழ் பொங்கும், அருவியாய் கொட்டும், வர்ணணைகளும் உவமையும் வார்த்தைகளும் காவேரி வெள்ளமாய் கொட்டும், குற்றால அருவியாய் வழிந்தோடும் எதையுமே அழகாகவும் உருக்கமாகவும் பொருத்தமாகவும் அவர்களால் பாட முடியும் அப்படி வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின்தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் பொருந்தும். மூன்று தமிழும் அவரிட‌ம் கொஞ்சியது கடவுள், காதல், இயற்கை, மதம், தத்துவம், அரசியல் பாசம், காதல், கடமை, […]

வாழ்க நீ எம்மான்

அந்த கண்ணதாசன் எவ்வளவு எழுதினாலும் அவனின் காதல் பாடல்கள், பெண்களின் மனதையும் அழகையும் நளினத்தையும் சொல்லும் பாடல்கள், காதல் தவிப்பினை சொல்லும் பாடல்களின் அழகே தனி. ஆயிரம் ரோஜா தோட்டங்களில் மொகலாயரின் ரோஜா தோட்டம் தனித்து நிற்பது போலவும், ஆயிரம் ஆலயங்களில் தஞ்சை ஆலயம் தனித்து நிற்பது போன்றதுமான வரிகள் அவை. காதலின் ஒவ்வொரு படிநிலைக்கும் எழுதினான் அவன். அது காதல் பூக்கும் தருணமாகட்டும், வெளிபடுத்தும் இடமாகட்டும், அதிலே கலந்து உருகுமிடமாகட்டும், அது வெற்றி என்றால் கொண்டாடும் […]

வலுவான எதிர்காலம் கொண்டவனை அறிவுடை சமூகம் விடாது

சுதா ரகுநாதன் எனும் பிரமணாள் கருப்பு ஆப்ரிக்க குடும்பத்துடன் சம்பந்தம் செய்ய போகின்றார் என்பது சிலருக்கு விவாதமாம் இதில் என்ன ஆச்சரியம்? பிரமாணர் பொதுவாக ஆச்சாரங்களை விட வருங்கால பாதுகாப்பினை பெரிதாக எண்ணுபவர்கள், அறிவுடை சமூகத்தின் இயல்பு அது யூத இனம் பல இடங்களில் அதைத்தான் செய்தது இந்த பிராமணர் தங்களுக்கு தோதான இடங்களில் , நல்ல எதிர்காலமுள்ள இடங்களில் கொஞ்சமும் ஆச்சாரம் அது இது என எதுவும் எக்காலமும் பார்த்ததில்லை உதாரணம் கலைஞர் கருணாநிதி வீட்டிலே […]

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றுமே சரியில்லை

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி என்றுமே சரியில்லை, இதில் பங்கேற்ற யாரும் தனிதனியாக பேசினாலே தாங்காது, இவர்களை மொத்தமாக பேசவைத்தால் என்ன ஆகும்? ஒரு சுவாரஸ்யமுமில்லை, செயற்கை தனம் நன்றாக தெரிகின்றது இந்நிகழ்ச்சி சுவாரஸ்யமாக என்ன செய்யலாம்? துறைவாரியாக அனுப்பலாம் இலக்கிய பிக்பாஸ் யார்? என இந்த ஜெயமோகன், மனுஷ்ய புத்திரன், சாரு நிவேதிதா, இன்னபிற அல்ட்ராசிட்டி 15 பேரை உள்ளே தள்ளினால் எப்படி இருக்கும்? அரசியல் பிக்பாஸ் யார் தெரியுமா? என ஸ்டாலின், எடப்பாடி,தமிழிசை, சீமான், எச்.ராசா, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications