பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அய்யன் கோவில்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஒரு சுடலைமாடன் ஆலயம் உண்டு, அய்யன் கோவில் என அதற்கு பெயர் ஆடிமாதம் அந்த கோவிலில் கொடை கொடுப்பார்கள், ஏராளமான ஆடுகள் பலியிடபடும் சாமியாடி ரத்தம் குடிப்பது யாரென்றால் ஒரு பிராமண குடும்பம். சுடலை என்பவர் தென்பகுதி கேரளா தொடங்கி தாமிரபரணி வரை அரசாட்சி செய்யும் ஒரு தெய்வம். அதெல்லாம் அவரின் பேட்டை அக்காலத்தில் வள்ளியூர் அக்ரஹார வீதி வீடு பிராமண குடும்பம் ஒன்றின் நடுவீட்டில் வந்து அமர்ந்தாராம் சுடலை, அவர்கள் “நாங்கல்லாம் […]

விஷயம் மறுபடியும் பற்றி எரிகின்றது

சில வாரங்களுக்கு முன்பு அமீரக துறைமுகத்தில் 4 கப்பல்கள் தாக்கபட்டது நினைவிருக்கலாம் அப்படியே இப்பொழுதும் இரு கப்பல்கள் அந்த ஏரியாவில் தாக்கபட்டிருக்கின்றன‌ அவற்றை தாக்கியது ஈரான் என வழக்கம் போல கிளம்புகின்றது அமெரிக்கா இல்லை இது எங்கள் மேலான தாக்குதலுக்கு அவர்களே செய்யும் தந்திரம் என்கின்றது ஈரான் கப்பல்கள் தாக்கபட்ட விதத்தை பார்த்தால் அவை கப்பலை மூழ்கடிக்கும் எண்ணத்தில் அடித்த அடி அல்ல, மாறாக எச்சரிக்கை செய்ய அடிக்கபட்ட அடி என்கின்றார்கள் விஷயம் மறுபடியும் பற்றி எரிகின்றது […]

இதற்கு முதல் காரணம் மாமன்னன் ராஜராஜ சோழன்

வழக்கமான வீடியோவாகத்தான் அதை வெளியிட்டோம், சொல்ல போனால் முன்பொருமுறை எப்பொழுதோ ரஞ்சித் என்பவர் சர்ச்சை செய்யும்பொழுது எடுக்கபட்ட வீடியோ அது அதை வெறும் 150 பேர்தான் பார்த்தார்கள், இனி ரஞ்சித்தை தொட கூடாது என விட்டுவிட்டோம் அன்று நண்பர் அழைத்தார், ரஞ்சித் ஏற்படுத்தியிருக்கும் சர்ச்சை பற்றி பேசசொன்னார் நிதானமாத்தான் பேச தொடங்கினேன், ஆனால் ஆயிரத்தில் ஒருவன் கார்த்தி போல எனக்குள் என்னமோ ஆயிற்று அதை உணரமுடிந்தது ஆனால் கட்டுபடுத்தமுடியவில்லை, ஏதோ பேசினேன், யாரோ உடலுக்குள் புகுந்து பேச […]

பை பை யுவராஜ் சிங்

உலக கோப்பை கிரிக்கெட் நடந்துகொண்டிருக்கும் பொழுதே அந்த அறிவிப்பும் வந்துவிட்டது யுவராஜ்சிங் தன் ஓய்வினை அறிவித்துவிட்டார், மனமார அல்ல மாறாக மனம் வெறுத்துத்தான் அறிவித்திருக்கின்றார் அற்புதமான கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர் , 2001க்கு பின்னரான இந்திய கிரிக்கெட்டை அவர்தான் தாங்கினார் பஞ்சாப் ஆட்டக்காரருக்கான ஒரு விளையாட்டு வெறி அவருக்கு இயல்பாய் வந்தது, எத்தனையோ ஆட்டங்களில் அவரால் இந்தியா வென்றது அட்டகாசமான பீல்டர் அவர், எவ்வளவோ அருமையான மின்னல்வேக பீல்டிங்கில் அசத்தியிருக்கின்றார் 2011 உலக கோப்பையின் யுவராஜ்சிங்கினை மறக்க […]

Happy Birthday தங்க மகனே

அன்றொரு நாள் அவர் தந்தையின் நினைவுகளில் மூழ்கியிருந்தார் அப்பா, அவரென்றால் அவருக்கு பாசம் அதிகம். “அவரை ரொம்ப பிடிக்குமாப்பா? ஆமா, நான் கடைசி பையன்லா அதனால ரொம்ப பாசமா இருப்பாரு அவர் இல்லண்ணதும் எப்படி தாங்கிட்டீங்க? அவர் இல்லாத உலகத்துல எதுக்கு வாழனும்னுதான் தோணிச்சி, ஆனா உங்க அம்மாவும் அவ கையில நீனும் இருந்தியா, அதனாலதான் இவ்வளவு நாள் இருக்கேன். .” மகனை நோக்கும் பொழுதெல்லாம் அவர் சொன்ன வார்த்தைகள் மனதுக்குள் ஒலித்துவிட்டே செல்லும் இன்று அவனுக்கு […]

புனித அந்தோணியார்

இன்று கத்தோலிக்க திருச்சபை ஒரு பெரும் புனிதரின் திருவிழாவினை கொண்டாடுகின்றது, புனிதர்கள் என்றால் இயேசுவின் பெயரில் சம்பாதித்து கல்லூரியும், பங்களாவும், எஸ்டேட்டும் சேர்த்தவர்கள் அல்ல‌ மாறாக கிறிஸ்துவிற்காக துறவு வாழ்க்கை வாழ்ந்து அவருக்காக உயிரையும் விட்டவர்களை, புனிதர்கள் என திருச்சபை ஏற்றிருக்கின்றது. அப்படி கிட்டதட்ட 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து புனிதரானவர் புனித அந்தோணியார், ஐரோப்பாவில் ஏகபட்ட அந்தோணி உண்டு, காட்டில் இருந்த அந்தோணி, எகிப்தில் இருந்த அந்தோணி என ஏராளம், இவர் இத்தாலியின் பதுவாவில் வசித்ததால் […]

தென்கிழக்கு ஆசியாவினை ஆண்ட கடல்ராசனும் அந்த ராஜராஜ சோழனே

எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன் கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன் ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும். அந்த ராஜ ராஜன் இதில்தான் […]

போங்கடா நீங்களும் உங்க புரட்சி புண்ணாக்கும்

அமெரிக்க பண்ணைகளுக்கு உழைக்க சென்றதுதான் கருப்பு ஆப்ரிக்க இனம், அவர்பட்ட அடிமைதனமும் கொடுமையும் ஏராளம் பின்னாளில் கருப்பர் சந்ததி ஒபாமா அங்கு அதிபரானார், இன்று கருப்பருக்கு வாழ்வியல் வசதிக்கு அங்கு குறைவில்லை மலேசிய ரப்பர் தோட்டங்களுக்கு உழைக்கத்தான் சென்றனர் தமிழர், இன்று ஆட்சியில் பங்குவரை கிடைத்திருக்கின்றது பிஜூ, தென்னாப்ரிக்கா, மொரிஷியஸ், ரியூனியன் ஐலண்ட், கயானா, மேற்கு இந்திய தீவு என ஏகபட்ட நாடுகளுக்கு அடிமையாகவும் ஒடுக்கபட்டவனாகவும் கொண்டு செல்லபட்ட இனங்களில் தமிழ் இனமும் ஒன்று அது அங்கெல்லாம் […]

மங்கம்மாள்

தென் தமிழகத்தை பாண்டிய மன்னனின் வீழ்ச்சிக்கு பின் ஆளவந்தது நாயக்கம் வம்சம் அதில் விஸ்வநாத நாயக்கன் தொடங்கி, திருமலை நாயக்கன் மஹாலை எல்லாம் கட்டிய பின் அந்த தலைமுறையில் வந்தவன் சொக்கநாத நாயக்கன், அவன் மனைவிதான் மங்கம்மா அவள் ராணுவதளபதியின் மகளாய் இருந்ததால் வீரம் இயல்பாய் இருந்தது. அரசகுடும்பத்தை சாராதவளாயினும் மங்கம்மாளை திருமணம் செய்தான் மன்னன் சொக்கநாத நாயக்கன் இறக்கும்பொழுது அவன் மகனுக்கு சிறிய வயது என்பதால் மங்கம்மா ஆட்சிபொறுப்பாளர் ஆனார் ராணி அல்ல மாறாக ஆட்சி […]

ராஜராஜ சோழன் நான்

ஆளாளுக்கு “ராஜராஜ சோழன் நான்” என பாட ஆரம்பித்தாயிற்று இந்த ரஞ்சித் என்பவனுக்கு சொந்தமாக யோசிக்க தெரியாது, யாராவது கொளுத்தி போட்டால் அதை நம்பி கத்துவான் அப்படி அவனுக்கு முன்பே ராஜராஜனின் பிம்பத்தை உடைக்க கிளம்பியது பெரியார் கோஷ்டி, குறிப்பாக அந்த தோசை மதிமாறன் ஏன் இவர்களுக்கு ராஜராஜன் மேல் குறி? கடவுள் பக்தி மிக்க, கடவுளுக்கு பெரும் ஆலயம் அமைத்து வழிபட்ட தமிழ் மன்னனை இவர்களுக்கு பிடித்தால்தான் ஆச்சரியம், பிடிக்காவிட்டால் ஒன்றுமில்லை மதிமாறன் எனும் மடையன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications