பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தமிழகத்து மனிதநேயம்

யாரென்றே தெரியாத இந்து பெண்ணின் மடியில் இஸ்லாமிய பெண்ணொருவர் சாய்ந்திருக்கும் இந்த படம் இணையமெங்கும் சுற்றி வருகின்றது தமிழகத்து மனிதநேயம் இப்படியானது என உரக்க சொல்கின்றது இப்படம் இதற்கு பெரியாரும் அவரின் பேச்சும் சிந்தனையுமே காரணம் என எவனாவது திராவிட குஞ்சு சொன்னால் அவனை உடனே அடித்து விரட்டுங்கள் இங்கு இஸ்லாமும் இந்தும் மட்டுமல்ல கிறிஸ்தவம் போன்ற எல்லா மதமும் இங்கு சகோதரத்துவமாகவே அந்நாளில் இருந்தே பழகி வருகின்றன‌ ஒருகாலமும் மத துவேஷத்திற்கு இம்மண் இடம் கொடுக்காது […]

வன்மையாக கண்டிக்கின்றோம்

இந்த இலங்கை ராணுவதளபதியின் பேச்சை வன்மையாக கண்டிக்கின்றோம் அந்த தளபதி தங்களின் கையாலாகாத தனத்தையும் இன்னும் பல விஷயங்களை மறைக்கவும் கொழும்பு தாக்குதல் தீவிரவாதிகள் இந்தியாவில் பயிற்சி எடுத்ததாக பேட்டி அளித்திருக்கின்றார் இது வன்மையாக கண்டிக்கதக்கது இலங்கையில் பாகிஸ்தானின் நடமாட்டட்த்தையும் அங்கு ஐஎஸ் இயக்கத்தின் ஆட்கள் வந்து செல்வதையும் எத்தனையோ முறை சொல்லி எச்சரித்த நாடு இந்தியா அப்பொழுதெல்லாம் அலட்சியம் செய்துவிட்டு, நன்றாக பலகாரம் தின்றுவிட்டு இப்பொழுது விபரீத விலை கொடுத்தபின் தீவிரவாதிகள் இந்தியாவில் பயிற்சி பெற்றார்கள […]

காரல் மார்க்ஸ்

“உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள் அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி […]

இஸ்லாமிய பெண் எழுத்தாளர்

பொதுவாக இஸ்லாமிய சமூகத்தில் பெண் எழுத்தாளர்கள் குறைவு அதுவும் பெண்ணியம் பேசுபவர்கள் மிக குறைவு ஆனால் அந்த பெண்மணி முதலிலே வித்தியாசமாக நோக்கபட்டார், அவரின் கவிதைகள் ஒருவித அணலை ஏற்படுத்தின‌ அந்த அணல் பின்னாளில் அவர் அந்த நாவலை எழுதும்பொழுது உலகை அதிர வைத்தது அந்நாவல் “அர்த்த ஜாமத்து கதைகள்” , இஸ்லாமிய பெண்களின் நிலை பற்றி முகத்தில் அறைந்த புத்தகம் அது பெரும் அதிர்வுகளை மனதில் கொடுக்கும் வலி நிறைந்த நாவல், கொஞ்சம் பொறுமையுடன் நுண்ணிய […]

அதுதானே கிறிஸ்துவ வழி

இந்த கிறிஸ்தவ வழிபாட்டில் சில திருத்தங்களை செய்யவேண்டியிருகின்றது இந்த திருப்பலி என்பது என்ன? யூத வழிபாட்டில் முன்பு ஒரு ஆட்டை வெட்டி பலிகொடுப்பார்கள் அதன் பின்பு அனைவரும் அதை அப்பத்தோடு உண்பார்கள் பலி என்பது அதுதான், ஆடு பெரும்பான்மை எனினும் மாடும் சில நேரம் உண்டு. பாஸ்கா எனும் விழாவில் அது உண்டு கிறிஸ்துவும் இதை தன் கடைசி விருந்தில் கொடுத்திருக்கின்றார், அப்பமும் ஒயினும் ஆட்டுகறியுமாக பங்கு வைத்திருக்கின்றார் கிறிஸ்தவம் தோன்றும்பொழுது கிறிஸ்து நினைவாக அவர் கடைசியாக […]

மர்ம நபரான லாட்டரி மார்டின்

மறுபடியும் வெளிச்சத்திற்கு வருகின்றார் அந்த மர்ம நபரான லாட்டரி மார்டின் மிகபெரும் சர்ச்சை நபரான அவரை தமிழகத்தில் வலுக்க காலூன்ற வைத்த பெருமை கலைஞர் கருணாநிதி என்பவரையே சாரும் ஆம் அன்னார் கலைஞரின் சில கதைகளை படமாக தயாரிக்க உதவினார், அதன் பிரதிபலனாக இங்கு மிக சுதந்திரமாக உலாவ அனுமதிக்கபட்டார் மார்ட்டின் ஆம் திராவிடம் இப்படிபட்ட பல சாதனைகளை செய்திருக்கின்றது இவ்வளவுக்கும் மார்ட்டின் என்பவர் பர்மா அகதியாக வடகிழக்கு மாநிலத்த்தில் வாழ்க்கையினை தொடங்கியவர், முழு தமிழரும் அல்ல‌ […]

ஏ பரிதாபத்துகுரிய லங்கா புரியே

ஏ பரிதாபத்துகுரிய லங்கா புரியே கோழிகுஞ்சு பருந்து கூட்டத்துக்கு அஞ்சி அலறி பதுங்குவதை போல நீ படபடபடப்புடன் பதறுகின்றாய். உலகின் கைவிடபட்ட கடைசி நோயாளி கூட உன்னை விட பாக்கியாவானே.. எப்படி இருந்த லங்காபுரி நீ? ராவணன் உன்னை உலகின் மிகசிறந்த நாடாக வைத்திருந்தான் அசோகர் காலத்தில் நீ தங்க விகாரை எல்லாம் வைத்திருந்தாய், அதன் தொடர்ச்சியே சோழனின் படையெடுப்பு 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு நிகரான தேசமாய் இருந்தாய் , உன் கல்வி என்ன? செல்வம் என்ன? […]

இயற்கை விவசாயமே தீர்வு

இந்தியாவின் மக்கள் தொகைக்கும் இன்னும் பல காரணங்களுக்காகவும் இப்போதைக்கு இயற்கை விவசாயம் சாத்தியமில்லை எனினும் அது பலன் இல்லாதது என சொல்ல முடியாது 70 வருடங்களுக்கு முன்பு இன்றைய நவீன விவசாயமில்லை, இரண்டாம் உலகபோரும் அது கொடுத்த பஞ்சமும் இவ்வுலகை ரசாயண விவசாயம் பக்கம் திருப்பின, குறிப்பாக மக்கள் தொகை மிகுந்த இந்தியாவில் அது அவசியமானது. இன்று அதுவே இந்தியாவின் பசியினை போக்குகின்றது, அதே நேரம் உலக நிலைப்பாட்டையும் ஒப்பிட்டு பார்க்கலாம் ஒவ்வொரு நாடும் தன் மக்கள் […]

மறுபடியும் பரபரப்பினை கிளப்புகின்றார்

மறுபடியும் பரபரப்பினை கிளப்புகின்றார் வடகொரிய வெள்ளை தக்காளி வடகொரியா ஏவுகனை எதிர்ப்பு சோதனையினை செய்ததாக குற்றம் சாட்டுகின்றது தென்கொரியா அதாவது குறிப்பிட்ட ஏவுகனை வடகொரிய எல்லைக்குள் வரும்பொழுது அதை அந்நாடு வீழ்த்திற்றாம் இதை சொல்லி அவர்கள் இன்னும் பலம்பெறுகின்றார்கள் என அலறுகின்றது தென்கொரியா அமெரிக்காவுடன் பேச்சு தோல்வியில் முடிந்து, வடகொரிய அதிபர் அண்ணாமலை ரஜினியாக சவால்விட்டு வந்தபின்பு நடக்கும் முதல் அதிரடி இது இந்த நுட்பம் எப்படி வடகொரியாவுக்கு கிடைத்தது? இதை எல்லாம் ஏன் அவர்கள் முன்பே […]

யார் கொடுத்திருப்பார்கள்?

இலங்கையில் தவுபிக் ஜமாத் தீவிரவாதிகளின் நடமாட்டம் யாழ்பாணத்திலும் இருக்க்கின்றது என்ற தகவலை அடுத்து வட இலங்கையினை முற்றுகையிட்டிருக்கின்றது இலங்கை ராணுவம் காரணம் அங்கிருந்து இந்தியா தப்புவது என்பது எளிது இதனால் ஒரு இடம் விடாமல் தேடியிருகின்றார்கள், யாழ்பாணம் கல்லூரியும் அதன் விடுதியும் தப்பவில்லை அங்கு ஒருவன் கண்ணிவெடி துப்பாக்கி தோட்டா வெடிபொருள் சகிதம் சிக்கியிருக்கின்றான், அவன் அறையில் பிரபாகரனின் படமும் இருந்திருக்கின்றது போதாதா? அணில் வேட்டைக்கு சென்று முயல் சிக்கிய கதையாக அவனை கொத்தி சென்றிருக்கின்றது இலங்கை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications