பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தும்பிகளின் பகல் கனவு

ராஜபக்சே ஈழநாடு கொடுத்தாலும் கொடுக்கலாம் இந்த சைமன் தும்பிகளின் பகல் கனவு ஒரு நாளும் நடக்காது முழு விவசாய நாடு என எதுவும் எங்கும் சாத்தியமில்லை முதலில் அதை பரிசோதித்து கையினை சுட்டது சோவியத் யூனியன், முழு விவசாயம் நாட்டுக்கு உதவாது என்றபின்பே தொழில்துறைக்கு திரும்பினார்கள் அடுத்து திருந்தியவன் சீனத்து மாவோ, கலாசார புரட்சி என நகர்புறத்தில் இருந்தவர்களை கிராமத்துக்கு விரட்டி அடித்து விவசாயம் பார்க்க வைத்தான் ஆனால் நாடு நாசமாயிற்று, அதன் பின் விவசாயம் முழு […]

தோத்தாலும் ஜெயிச்சாலும்

அந்த குமரி அனந்தனின் பேச்சுக்கு 1960களில் அப்படி ஒரு மவுசு இருந்தது இலக்கியமும் தமிழும் அவரின் நாவில் அப்படி கொட்டியது, சந்தேகமில்லை அண்ணாவுக்கு சரி நிகராக அவரை காங்கிரஸ் நிறுத்தியது காமராஜரின் வலகரமாகவே அவர் இருந்தார் மாற்று கட்சியாயினும் கலைஞரும் ராமசந்திரனும் அவரை கொண்டாடினர், கலைஞருக்கு அவர் மேல் தனி மரியாதை இருந்தது காமராஜருக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிய அனந்தன் ஒரு கட்டத்தில் ஒதுங்கியே விட்டார் இப்பொழுது ஏன் அந்த கதை, விஷயம் இருக்கின்றது அதற்குள் […]

பலத்த ஆச்சரியங்களை கொடுக்கின்றது

தமிழக தேர்தல் களம் பலத்த ஆச்சரியங்களை கொடுக்கின்றது முன்பெல்லாம் வாக்கு செலுத்த இவ்வளவு ஆர்வமும் கூட்டமும் வராது, கட்சிகாரர்கள் உழைப்பை பொறுத்தே கூட்டம் வரும் இப்பொழுது அப்படி அல்ல மக்கள் விழித்துவிட்டார்கள் எங்கெல்லாம் இருந்தோ தேர்தலுக்கு அலறி அடித்து வருகின்றார்கள் 3 நாள் விடுமுறை அல்ல விஷயம், வெறுப்பு வேறு எங்கோ இருக்கின்றது ஜல்லிகட்டுக்கு பொங்கிய தமிழகம் போல ஏதோ பெரும் வன்மத்தில் களமிறங்குகின்றார்கள் அலை அலையாக மக்கள் படையெடுப்பதை பார்த்தால் மிகபெரும் மவுனபுரட்சிக்கு தமிழகம் தயாராவது […]

எடப்பாடியார் காசு கொடுத்துதான் பழம் வாங்கினார்

எடப்பாடியார் காசு கொடுத்துதான் பழம் வாங்கினார் : அதிமுகவினர் சத்தியம் இதை நம்பித்தான் தீர வேண்டும் காசு கொடுத்து நீதிபதி குமாரசாமி முதல் குப்பத்து சுப்பன் வோட்டுவரை வாங்கும் கட்சிக்காரர்கள் அவர்கள் இன்னும் யார் யாரையோ காசுகொடுத்து வாங்கியவர்கள். அதுவும் தேர்தல் நேரத்தில் வோட்டுக்கு மிக சரியாக காசு கொடுப்பார்கள், வோட்டுக்கே கொடுக்கும் பொழுது வாழை பழத்திற்கு கொடுக்கமாட்டார்களா? அதனால் பழனிச்சாமி பழத்திற்கு காசு கொடுத்தது சந்தேகத்திற்குஅப்பாற்பட்டது.

பின்னே எதற்கு உங்களுக்கு வோட்டு?

இந்திய ராணுவம் பாகிஸ்தானுக்கு எதிராக நடத்திய பதிலடியை தங்களின் மிகபெரிய சாதனையாக சொன்னார் மோடி கவனியுங்கள் மொத்தமாக ஆண்டது 5 வருடம்,அந்த 5ம் வருட முடிவில்தான் இந்த தாக்குதல் நடந்தது ஆக 4.75 வருடம் சும்மா இருதோம் ஒன்றையும் சாதிக்கவில்லை என்கின்றார் மோடி பாகிஸ்தான் மேல் தாக்குதல் நடத்துவதில் என்ன சாதனை என்பதுதான் புரியவில்லை உத்தரவு கொடுத்தால் ராணுவம் அதுவாக தாக்கும், இது எல்லா பிரதமரும் நினைத்தால் செய்ய கூடிய சாதாரண விஷயம், இதில் என்ன சாதனை? […]

ஹேலோ டிரம்ப் ஜி

“ஹேலோ டிரம்ப் ஜி ஐ எம் நாட் டிரம்ப் ஜி, ஐ எம் டொனால்ட் ட்ரம்ப், கால் மி மிஸ்டர் டிரம்ப் அய்யா மன்னிக்கனுமுங்க ,இங்க தேர்தல் நடக்குதுங்க‌ அதுக்கென்ன மேன்? சைனா ஏதும் பிராப்ளம் பண்ணுதா? சொல்லு 4 கப்பல் அங்கதான் சுத்துது இல்லீங்க அய்யா, உங்கள ஜெயிக்க வைக்கிறதுக்கு ரஷ்ய உளவுதுறை ஏதோ செஞ்சிச்சின்னு செய்தி வந்துங்க‌ ஆமா ஆனால் எல்லாம் முடிஞ்சிட்டு ஐ எம் பிரீ நவ் அதாங்க, அப்படி என்னை தோற்கடிக்க […]

குடவோலை முறை

பாரம்பரியம் தமிழர் கலாச்சாரம் என மேடை தோறும் தொண்டை கிழிய கத்தும் சைமானிய இம்சைகள் தேர்தல் என்றால் மட்டும் வெள்ளையன் பாணிக்கு வருகின்றன‌ தமிழன் என்றால் குடவோலை முறைப்படி, சோழர் காலத்தில் நடந்தது போல குடத்துக்குள் ஓலைபோட்டு அல்லவா தேர்தல் நடத்த வேண்டும் மானமுள்ள தமிழ்பிள்ளைகள் அதனைத்தான் செய்ய வேண்டும் பின்பு ஏன் இந்த கூரைபெட்டி (வோட்டு பாக்ஸ்)? அடுத்த தேர்தலுக்காவது அவர்கள் அருண்மொழிதேவனின் குடவோலை முறைக்கு திரும்பட்டும்

இப்போதைக்கு ஓயாது..

ஆளாளுக்கு சண்டை செய்வோம் என வாக்குசாவடி நோக்கி ஓடுகின்றார்கள் இது எல்லோருக்கும் கொடுக்கபடும் வாய்ப்பு, இதில் என்ன சண்டையினை கண்டார்களோ தெரியாது சண்டை செய்வோம் என பாகிஸ்தான் பார்டருக்கோ சீன எல்லைக்கோ அட ராஜபக்சே திருப்பதி வரும்பொழுதோ ஒருவனும் செல்வதாக தெரியவில்லை அவன் வோட்டை அவன் செலுத்துவது எப்படி சண்டை? இதற்கெல்லாம் காரணம் யார் தெரியுமா? கலைஞர் கருணாநிதி “இதோ போர்களம் வா உடன்பிறப்பே, குத்தீட்டி வீசு, கேடயமாய் நில், வாளை சுழற்று எதிரி படையினை நாசமாக்கு, […]

அதிகாரி ‘சஸ்பெண்ட்’

பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் சோதனை; அதிகாரி ‘சஸ்பெண்ட்’ அதாவது மோடி பயணித்த ஹெலிகாப்டரை பாதுகாப்பு நிமித்தம் ஒரு அதிகாரி சோதித்திருக்கின்றார், “யாரை கேட்டு அதை தொட்டாய்” என சஸ்பென்ட் செய்துவிட்டார்கள் அந்த அதிகாரி தன் கடமையினை செய்தார் ஏழை தாயின் மகனும், மிக பிற்படுத்தபட்ட ஏழை செல்லும் ஹெலிகாப்டரில் என்ன இருக்கிறதென்று இவரை சஸ்பென்ட் செய்தார்கள்? இந்திரா காந்தியின் காரை தூக்கிய கிரண்பேடி இவர்களுக்கு வீராங்கனையாம் ஆனால் மோடி செல்லும் ஹெலிகாப்டரை சோதித்தால் சஸ்பென்டாம்

சுவாரஸ்யம்

தும்பிகள், முன்னாள் தும்பிகள் வரிசையில் சங்கிகளுடன் மல்லுகட்டுவதும் ஜாலியாகத்தான் இருக்கின்றது இந்த மூவரில் தும்பிகளுக்கு எல்லாமே திராவிட சதி, இந்திய சதி, கலைஞர் சதி கூடுதலாக சிங்களமும் உலகமும் சேர்ந்து அவர்களை அடக்க செய்யும் சதி முன்னாள் தும்பிகள் அதாவது திமுகவினர் கொஞ்சம் பரவாயில்லை கொஞ்சம் யோசிப்பார்கள், ஆனால் அவர்களுக்கு எல்லாமே பிராமண சதி, ஆர்.எஸ்.எஸ் சதி இந்த சங்கிகள் இருக்கின்றதே அதுதான் சுவாரஸ்யம் அவர்களுக்கு எல்லாமே கிறிஸ்தவ மிஷினரி மற்றும் போப்பாண்டவர் சதி கூடுதலாக பாகிஸ்தானும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications