பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

யாருக்கு வாக்கு?

இந்த தேர்தல் களத்தில் தமிழகத்தில் காங்கிரசுக்கு வாக்களித்தால் திமுகவுக்குத்தான் லாபம் பாஜகவுக்கு வாக்களித்தால் அதிமுகவுக்குத்தான் லாபம் இரண்டுமே சரியில்லை, ஒன்று ஊழல் இன்னொன்று ஊழலுக்கு காத்திருப்பது அவ்வளவுதான் விஷயம் மீதி இருப்பவர்களை கவனித்தால் இந்தியாவினை விட்டே கிளம்ப சொல்லும் மனம் இதில் எங்கிருந்து வாக்கு செலுத்துவது? அகில இந்திய அளவில் தேசிய பாதுகாப்பு என கருதினால் பாஜகதான் தேர்வு, மிக நல்ல பாதுகாப்பினை கட்டி எழுப்ப பாடுபடுகின்றார்கள் ஆனால் மற்ற விஷயங்களில் கடும் சறுக்கல். ராமர் கோவில் […]

அதைபற்றியா கவலைபடும்

இந்த நாம் தமிழர் தும்பிகள் முகநூலிலும் இணையத்திலும் தேர்தல் நடத்துகின்றன‌ அதில் யார் வாக்களிப்பார் என்றால் அவர்களும் அவர்களின் அடிப்பொடிகளும் , தமிழன் அல்லாதவனுக்கு வாக்கே கிடையாது அதில் இரண்டாம் இடம், முதலிடத்தில் பாதி என சொல்லிகொண்டு ஆனந்தமாகின்றன‌ வாக்களித்தவன் யாரென பார்த்தால் ஒருத்தனும் இந்தியனே அல்ல‌ எல்லாம் வெளிநாட்டு ஈழதமிழனும் இந்திய குடியுரிமை இல்லாதவனுமே ஆனால் தும்பிகள் அதைபற்றியா கவலைபடும் “யார் வோட்டு போட்டா என்னடா? , தமிழன் தமிழனுக்கு வோட்டு போட்டானா இல்லியா? வென்றோமா […]

ராசா நீ இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்தே

ராசா நீ இவ்வளவு நாளும் எங்கய்யா இருந்தே எப்போ இருந்து கேக்குறீங்க? இல்லய்யா, விவசாயிக்கு இவ்வளவு அக்கறைபடுறியே இவ்வளவு நாளும் உன்ன காணோமேப்பா முதல்ல காலேஜில பெயில் ஆயிட்டே இருந்தேன் நீ பாஸ் ஆகியிருந்தாதான் ஆச்சரியம் , சினிமாவுக்கு எப்பப்பா போனே? அதுவா நான் முதல்ல 1990ல அப்பா பாரதிராஜாகிட்ட அசிஸ்டென்ட்டா இருந்தேன் அப்புறம் 1996ல இருந்து 2003 வரைக்கும் சினிமா எடுத்தேன், சல்லி பைசா தேறல‌ அட நாதாரிபயல, நீ விவசாயமே பாக்கலியா, சரி மேலே […]

வள்ளுவர் கோட்டம்

தமிழரின் மிகபெரும் அறிவு அடையாளம் திருகுறள், எல்லா தமிழரை போலவே கலைஞரும் அதனை நிரம்ப நேசித்தார், வழிபட்டார் திருகுறளை எல்லோரும் கொண்டாடினார்கள். திருகுறள் கழகங்கள் எல்லாம் இருந்தது, கலைஞரும் அதில் கரைந்தார் திருகுறளுக்கு அவர் உரையும் எழுதினார். அரசு பேருந்து எல்லாம் திருவள்ளுவரின் குறள் வந்தது வள்ளுவன் பெயரில் போக்குவரத்து கழகம் எல்லாம் வந்தது, வள்ளுவனுக்கு சிலை எல்லாம் அமைத்தார் கலைஞர் அப்படிபட்ட கலைஞர் சென்னையில் பெரும் கோட்டம் ஒன்று கட்டினார். தேர் தோரண வாயில் அரங்கம் […]

ஜூலியன் அசாஞ்ச்சே

இந்த ஜூலியன் அசாஞ்ச்சே எப்படி கைது செய்யபட்டார் என்பதுதான் சுவாரஸ்யம் அமெரிக்காவுடன் உரசலில் இருந்த அன்னாருக்கு ஈக்வெடார் நாடு அடைக்கலம் வழங்கி லண்டனில் இருந்த ஈக்வெடார் தூதரகத்தில் அடைக்கலம் வழங்கி இருந்தது இது சுயநல உலகம், ஒருவரால் பயனில்லை என்றால் யாரும் யாரையும் தேடமாட்டார்கள் அப்படி ஈக்வெடார் அதிபருக்கும் ஏதோ அசாஞ்சேயிடம் தேவைபட்டிருக்கின்றது, அரசியல்வாதி என்றால் அப்படித்தான் இதனால் அசாஞ்ச்சே அடிக்கடி ஈக்வெடார் ஜனாதிபதியிடம் பேசியிருகின்றார் இந்த ஈக்வெடார் அதிபர் தமிழிசை போல வெள்ளைமனம் படைத்தவர் போல, […]

பாகிஸ்தான் பாஜகவுக்கு மிக பெரும் அனுகூலமான விஷயம்

இந்த பாகிஸ்தான் என்பது அமெரிக்காவுக்கு மிக நன்மையான விஷயமோ இல்லையோ பாஜகவுக்கு மிக பெரும் அனுகூலமான விஷயம் ராமருக்கு பின் அவர்களுக்கு பிடித்தமான விஷயம் பாகிஸ்தான் 1947 முதல் பாகிஸ்தானிய எல்லை மாறவே இல்லை, அதுவும் 1972ல் அதன் கிழக்கு எல்லையினை இந்தியா திருத்தி எழுதியது அதுவும் காங்கிரஸ் ஆட்சி இங்கு பாகிஸ்தானால் வரகூடிய ஆபத்துக்களை தடுக்க வலுவான அஸ்திவாரம் அன்றே போடபட்டாயிறு , ஏவுகனை முதல் அணுகுண்டு வரை செய்தாயிற்று பாதுகாப்புக்கான கருவிகளை கோர ராணுவமும் […]

வருத்தம் தெரிவித்த சீமான்

நடிகர் ராகவா லாரன்ஸ் சர்ச்சை: வருத்தம் தெரிவித்த சீமான் அதாவது தும்பிகள் லாரன்ஸை தொடர்ந்து வம்பிழுக்க, லாரன்ஸ் தானும் அரசியலுக்கு வரவா? சைமன் தயாரா என கேட்டுவிட்டார் லாரன்ஸ் தன் அடுத்தபடமான ” காஞ்சனா 3″ படத்திற்கும் அதன் விளம்பரத்திற்கும் தும்பிகளைத்தான் நம்பி இருக்கின்றார் என்பதை உணர்ந்த சைமன் அவசரமாக வருத்தம் தெரிவித்துவிட்டார் ஏண்டா தும்பிகளா? லாரன்ஸுக்கு கூடவா உங்கள் அண்ணன் அஞ்சுவார்? “டேய் இந்த ஓவியா , டாப்சி, லெட்சுமிராய் கூட ஆடிட்டு இந்த பக்கம் […]

இது என்ன தெரிகின்றதா?

இது என்ன தெரிகின்றதா? இலங்கையில் சிங்கள புத்தாண்டை ஒட்டி இலங்கை ராணுவத்தினர் இந்து ஆலயங்களுக்கு சென்றிருக்கின்றனர் அங்கிருந்த தமிழ்பெண்கள் அவர்களுக்கு குங்குமம் பூசி ஆரத்தி எடுத்து வரவேற்றிருக்கின்றனர் எந்த ராணுவத்தை ஈழதமிழ்பெண்கள் வரவேற்றிருக்கின்றனர்? அங்கிள் சைமன் சொன்னபடி 2 லட்சம் தமிழரை கொன்று பல்லாயிரம் தமிழச்சிகளை மானபங்க படுத்திய ராணுவத்தைத்தான் இப்படி வரவேற்றிருக்கின்றனர் சைமன் குற்றசாட்டெல்லாம் எவ்வளவு பெரும் பொய் என்பதை உணருங்கள் இவர்கள் கட்டிவிடும் கதை எல்லாம் உண்மை என்றால் இப்படி எல்லாம் நடக்குமா? இந்த […]

கடந்த நூற்றாண்டின் ஒப்பற்ற கலைஞன்

ஆயிரம் புத்தகங்களை எழுதுவதை விட பல்லாயிரம் வார்த்தைளைவிட வலிமையானதும் நிலைத்து நிற்பதும் காட்சி படுத்துதல் எனும் அழுத்தம். அது கொடுக்கும் அழுத்தத்தை வேறு எதுவாலும் கொடுக்க முடியாது அந்த மனிதன் இடத்தில் யார் இருந்தாலும் ஒன்று சமுக விரோதி ஆகியிருப்பார்கள் இல்லை அழிந்து போயிருப்பார்கள் ஆனால் வலி எல்லாம் தாங்கி வளர்ந்து நின்றான் அவன். வளர்ச்சி என்றால் அபார வளர்ச்சி, இன்றும் மனிததன்மையுள்ள மானிடநேயமிக்க கலைஞனுக்கு அவனே எடுத்துகாட்டு. ஆயிரம் எழுத்தாளர்கள் எழுதவேண்டிய காரியத்தை , தொழிலாளி […]

தென்னகத்திற்கு பல நன்மைகள் கிடைக்கட்டும்

கனிமொழி டிவிட்டரில் பனங்காட்டு படத்தை வைத்துவிட்டார், பெரியார் படத்தை எடுத்துவிட்டார் என்பதெல்லாம் புகாரே அல்ல‌ அம்மணி இப்பொழுது தூத்துகுடி பக்கம் மிக பெரும் போராட்டத்தை நடத்துகின்றது, நிச்சயம் வெல்வார் பனைமரம் என்பது தமிழக குறிப்பாக தென் தமிழக அடையாளம் இதுவரை தென்னகம் மிக முக்கிய அரசியல்வாதியினை பெறவில்லை, தென்னகத்தின் மந்த நிலைக்கும் பின்னடைவுக்கும் அதுவும் காரணம் கனிமொழி தென் தமிழகத்தின் மாபெரும் அரசியல் அடையாளமாக உருவானால் அது வாழ்த்துகுரியது அவர் அப்படி பெரும் பிம்பமாக உருவாகி வரட்டும், […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications