பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜெயகாந்தன்

“சமுதாயம் சார்ந்த எழுத்தென்றால் என்னவென்று இவன் எழுதுவதிலிருந்து உலகம் கற்றுகொள்ளட்டும்” என இறைவன் சொல்லி அனுப்பிய அற்புத எழுத்தாளர் ஜெயகாந்தன். அது மகா உண்மையும் கூட, தமிழ் எழுத்துலகிற்கு தலைகீழ் திருப்பம் கொடுத்தவர்களில் புதுமைபித்தன் போல முன்வரிசையில் நிற்பவர் ஜெயகாந்தன். தொடக்ககல்வி மட்டுமே உண்டு, 20 வயதிற்குள் அவர் கிட்டதட்ட 50 தொழில்களை செய்திருப்பார், இறுதியாக கம்யூனிஸ்ட் கட்சிக்குள் வந்தார், அது என்னவோ தெரியவில்லை, இறுக்கமான பொதுநல கொள்கையால் அற்புதமான கலைஞர்களை அக்கால கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கிற்று, […]

என்னது வினோதமுடிவா?

என்னது வினோதமுடிவா? இன்றைக்கு பழன்ச்சாமி மோடியிடம் நிற்கும் நிலை, இல்லை இல்லை அதைவிட மோசமான நிலையில் இருந்தார் ராமசந்திரன் அவரை அப்படி மிரட்டி உருட்டி வைத்திருந்தது டெல்லி, அது ம்ம் என்றாலும் “அய்யய்யோ நான் உங்கள் அடிமை கருணாநிதி ஒழிக” என காலில் விழுந்து கிடந்தார் ராமசந்திரன் அதிமுக கண்ட தன்மான தலைவி ஜெயா ஒருவர்தான், ஆம் அவர் ஒருத்திக்குத்தான் அந்த கட்சியில் தைரியமும் மானமும் இருந்தது அப்படி டெல்லிக்கு அஞ்சி தான் அழுவது தெரிய கூடாது […]

நாகூர் ஹனிபா

இந்துக்களின் பக்தி பாடல்களை சீர்காழி கோவிந்த ராஜன் குரலில் கேட்பது ஒரு அழகு, ஜேசுதாஸின் குரலில் கேட்டால் தெய்வீகம் இஸ்லாமியருக்கு அப்படி ஒரு பாடகர் இருந்தார் அவர் பெயர் நாகூர் ஹனிபா பொதுவாக இஸ்லாமிய இசையும் பாடல்களும் அரபு சாயலில் இருப்பதால் பெரும்பாலும் உச்சஸ்தானி ராகங்கள் நமக்கு இசை தெரியாது உச்சஸ்தானி, இந்துஸ்தானி, கிர்கிஸ்தானி ஆப்கானி எல்லாம் தெரியாது ஆனால் பொதுவாக அப்பாடல்கள் தொடக்கமே எட்டுகட்டையில்தான் வரும் அதை பாடுவது சிரமம் அதை உருக்கமாக பாடுவது இன்னும் […]

உடன்பிறப்பே

“உடன்பிறப்பே திராவிட திருநாடாம் தமிழகத்தில் புகமுடியாதவர்கள், தமிழர் தன்மான கோட்டையாம் பெரியார் மண்ணாம் இந்த எக்கு கோட்டையில் புகமுடியாதவர்கள் சுரங்கம் தோண்டி நம் காலடிக்கு வரபார்க்கின்றார்கள் விடலாமா? அம்மையார் கட்சி அவர்கள் அடிமைகட்சி ஆனபின் அதிகார பாசறையின் குத்தீட்டிகளை நம்மேல் பாய்ச்சி நம்மை பயமுறுத்துகின்றார்கள் வீணர்கள் உடன்பிறப்பே, கழக கண்மணி துரைமுருகன் வீட்டில் பணசுரங்கம் இருந்ததாம், பல்லாயிரம் கோடி இருந்ததாம் அதை எல்லாம் தமிழகம் நம்புமாம் நம்புமா? நம்ப முடியுமா? நம்பவிட விட்டுவிடத்தான் முடியுமா? சொல் உடன்பிறப்பே […]

ஆம் இதுவும் “நெஞ்சுக்கு நீதி”

அடுத்த தேர்தலில் யார் வருவார் என தெரியாது, அது அவசியமுமில்லை ஆனால் இந்த ஆட்சி ரஷ்யவிடமிருந்து வாங்கிய எஸ் 400 சிஸ்டமும், அமெரிக்காவிடம் ஒப்பந்தம் செய்திருக்கும் எப் 21 ரக விமானமும் தேச பாதுகாப்பினை வலுபடுத்தும் அசாட் ரக ஏவுகனைகள் செயற்கைகோளுக்கு பாதுகாப்பு வழங்கும் இன்னும் நவீன எமிசாட் போன்றவை சிறந்த உளவுதகவலை தரும் இந்த அரசில் வெளிவராத விஷயம் இந்தியாவின் ஏவுகனை எதிர்ப்பு ஏவுகனை விவகாரம் ஓசைபடாமல் அதை வெற்றிகரமாக செய்தது இந்தியா, ஆனால் இன்னும் […]

நான் சங்கியாக இருக்கட்டும்

நான் சங்கியாக இருக்கட்டும், பெரும் பணம் வாங்கிகொண்டு காவியாக மாறியிருக்கட்டும் உங்கள் அறிவு எங்கே போனது? 1960களின் மிக் விமானங்கள் வேண்டாம் என ராணுவம் கதறியபொழுது காங்கிரஸ் அரசு அதை மாற்றிகொடுக்காதது ஏன்? இந்திய விமானபடை நவீனமாவக்கம் செய்ய அவர்கள் தயங்கியது ஏன்? 2012ல் செயற்கை கோள் எதிர்ப்பு ஏவுகனைக்கு அனுமதி கொடுக்காதது ஏன்? ரபேல் விமானம் விரைந்து வருவதை ஏன் சர்ச்சை செய்து தடுத்தார்கள்? தன் இரண்டாம் பதவிகாலத்தில்தான் ரபேலுக்கு வேண்டா வெறுப்பாக ஒப்பந்தம் செய்தது […]

தனிபெரும் இயக்குனரான அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

தமிழ்சினிமாவில் நிறைய குப்பை இயக்குனர்கள் வருவார்கள், அவர்கள் மத்தியில் சினிமாவினை புரட்டிபோடும் இயக்குனர்கள் எப்பொழுதாவதுதான் வருவார்கள் அவரின் இயற்பெயர் அலெக்ஸாண்டர், தன் ஆசிரியர் ஒருவரின் பெயரான மகேந்திரன் எனும் பெயரை சூட்டிகொண்டு சினிமாவுக்கு வந்தார் வசனகர்த்தாவாகத்தான் அறிமுகமானார் சிவாஜியின் தங்கபதக்கம் உட்பட பல படங்களுக்கு அவர்தான் வசனம் சினிமா என்பது தமிழக நாடக வடிவின் அடையாளம், நாடகத்திற்கு மிக முக்கிய மூலம் கதை அந்த கதை அமைய ஒரு இயக்குநர் நல்ல வாசிப்பாளனாக இருக்க வேண்டும், அவனின் […]

ஏன் அப்படி இருந்தார்கள்?

இந்திய ராணுவம் குறிப்பாக அந்த விமானபடையின் நிலமையினை பார்த்தால் ஒன்று புரிகின்றது இந்த மன்மோகன்சிங் அரசு பெரும்பாலும் புதிய விமானங்களை வாங்கவோ அதை பலபடுத்தவோ கொஞ்சமும் அக்கறைகாட்டவில்லை 2006களிலே நவீன விமானங்களை வாங்க வேண்டியவர்கள் அமைதி காத்திருக்கின்றார்கள், விமானபடை புத்தாக்கம் தள்ளிபோடபட்டிருக்கின்றது (இதே காலகட்டத்தில் அதாவது காங்கிரஸ் அரசின் காலகட்டத்தில் இந்தியராணுவத்துக்குள்ளே சில முணுமுணுப்புகள் வந்தது நிஜம் ) இந்திய விமானபடை இடைவிடாமல் வைத்த கோரிக்கைபடி கடைசியில் ரபேலை வாங்குவோம் என்றவர்கள் அதையும் இழுத்தடித்து ஆட்சியும் இழந்து […]

எப்படி இருந்தவர் கலைஞர்?

எப்படி இருந்தவர் கலைஞர்? சிலம்பு செல்வர் ம.பொ.சி தனக்கே உரித்தான சிலப்பதிகார அறிவில் “மங்கல அணி” என்ற வரியில் கண்ணகி தாலி என சொல்லிவிட்டார் அது மங்கல வாத்தியங்கள் இசைக்கும் அணியே தவிர தாலி என்பதல்ல என பலத்த ஆதாரங்களுடன் வாதிட்டார் கலைஞர் அவர் நடத்திய இலக்கிய சுவாரஸ்ய போரில் அதெல்லாம் கால கல்வெட்டுகள் அவரின் இலக்கிய அறிவு அப்படி இருந்தது, பூம்புகார் படத்து வசனமெல்லாம் பராசக்தி ரகம் அவரின் மொத்த புகழையும் கெடுக்க அவர் மகன் […]

தேர்தல் துளிகள் 02/04/2019 (1)

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல : முக ஸ்டாலின் தேர்தல் முடியும் வரை என்ற வார்த்தையினை சேர்க்க மறந்துவிட்டார் ஆக தேர்தல் முடியும் வரை திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல ************ ஜெயலலிதா வீட்டில் கைபற்றப்ட்டால் அது பிரமாண்டமான நடவடிக்கை, ஊழல் ஒழிப்பு இன்னும் பலர் வீட்டில் கைபற்றபட்டால் அது செய்ய வேண்டிய நடவடிக்கை, இன்னும் கடுமையாக வேண்டும் ஆனால் துரைமுருகன் வீட்டில் கைவைத்தால் அது பழிவாங்கும் நடவடிக்கை, அதை தமிழகம் நம்பவே கூடாது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications