பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தேர்தல் என ஒன்று வந்துவிட்டால்

தேர்தல் என ஒன்று வந்துவிட்டால் கன்னியாகுமரியில் கிறிஸ்தவர்கள் இருப்பதும், அதைவிட முக்கியமாக அவர்களுக்கு கால் இருப்பதும் பொன்னாருக்கு சரியாக தெரிந்துவிடுகின்றது

வாழையடி வாழை

மக்களோடு மக்களாக வந்து நின்றவர்கள் ராஜிவும் கலைஞரும் ஆம் எளிய மக்களோடு மக்களாக அவர்களை சாலையில் பார்க்கலாம், அவர்களோடு நடப்பார்கள் அவர்களோடு பயணிப்பார்கள், மக்களில் ஒருவராகவே மாறுவார்கள் ஜெயா போன்ற அரசியல்வாதிகளோ இல்லை அவரின் அரசியல் வாரிசுகளோ அப்படி அல்ல, அங்கொரு ராஜ பாணி தோன்றும் ராஜிவுக்கு பின் ராகுலும், கலைஞருக்கு பின் ஸ்டாலினும் அதே பாணியில் வந்திருப்பது மிக்க ஆறுதல் வாழையடி வாழையாக வருவது என்பது இதுதா

மிகப்பெரிய சவால்

ஒருவேளை தேர்தலில் பாஜக தோற்றுவிட்டால், ஆட்சி மாறிவிட்டால் ஒரு நபரை காப்பது என்பது மிகபெரிய சவால் ஆம், அவர் பெயர் கிரண்பேடி. பாண்டிச்சேரியில் ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி கொண்டிருகின்றார் பரமசிவன் கழுத்து பாம்பாக அவர் ஆட, பல்லை கடித்து பார்த்து கொண்டிருகின்றார் நாராயணசாமி சிவன் கழுத்திலிருந்து அந்த பாம்பு இறங்கினால் தீர்ந்தது விஷயம்.. இந்தியாவில் எந்த மூலைக்கு கிரண்பேடி சென்றாலும் நாராயணாசாமி விடமாட்டார், அவ்வளவு கோபம் இருக்கின்றது ஆட்சிமாறினால் பாகிஸ்தான் ஒன்றே கிரண்பேடிக்கு பாதுகாப்பான இடமாக இருக்கலாம்

எளிய விவசாயி

இந்த விவசாயத்தினை பெரும் இலாபமான தொழிலாக செய்யும் ஒரே கட்சி அதிமுக ஒன்றுதான் அன்று ஐதரபாத் தோட்டத்தின் விவசாய வருமானத்திலே சொத்துக்களை குவித்தேன் என சொன்னவர் ஜெயலலிதா இன்று ஓபிஎஸ் மகனுக்கு ஒரே வருடத்தில் பல கோடிகள் சம்பாதிக்க முடிகின்றது மற்ற எந்த கட்சியாலும் இது முடியாது, காரணம் அவர்கள் எல்லாம் புரட்சி தலைவனின் “விவசாயி” படம் பார்க்கவில்லை என்பதன்றி வேறு காரணம் இருக்க முடியாது சில மாதங்களுக்கு முன்பு ஒபிஎஸ் தன் கிணற்றில் இருந்து குடிதண்ணீர் […]

கண்டிக்கதக்கது

இந்த தேர்தலில் நடக்கும் மிகபெரும் ஜனநாயக படுகொலை டிடிவி தினகரனுக்கு சின்னம் மறுப்பது நிச்சயம் இது கண்டிக்கதக்கது அவரை பார்த்து அப்படி அஞ்சி சாகின்றது ஆளும் தரப்பு என்பது மட்டும் புரிகின்றது, பயமில்லை என்றால் குக்கரோ கோழிகூடோ கொடுக்க எவ்வளவு நேரமாகும்? தினகரன் நல்லவரா? கெட்டவரா? என்பது அல்ல விஷயம். ஜனநாயக முறையில் போட்டியிட வருகின்றார் தமாகாவுக்கு சைக்கிள் சின்னமெல்லாம் உடனே கொடுக்கும் தேர்தல் ஆணையம் தினகரனை இழுத்தடிப்பது நிச்சயம் ஜனநாயக படுகொலை இன்னும் பலத்த இடைஞ்சல்களை […]

தேர்தல் துளிகள் 26/03/2019

உடல்நலக்குறைவால் இன்றைய பிரசாரத்தை ரத்து செய்தார் முதல்வர் ராமசந்திரன், ஜெயா என அந்த கட்சி முதல்வர்களுக்கு இந்த உடல்நலகுறைவு என்பது வழக்கமான ஒன்று அந்த சென்டிமென்டுக்கு பழனிச்சாமியும் தப்பவில்லை என்பதுதான் ஆச்சரியம் தஞ்சை கோவில் சென்டிமென்டை விட பயங்கரமானது அதிமுக முதல்வர் பதவி.. அரசியல் என கருதி இந்த ஹிர்திக் பட்டேல், கன்னையா குமார் போன்றவர்களை வளர்த்து விடுகின்றது காங்கிரஸ் கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் இவை எல்லாம் பின்னாளில் பெரும் சீரழிவிலே முடியும், நாட்டுக்கு இவர்களால் பெரும் […]

சிரித்தாவது மகிழும்..

ஏம்பா கமலஹாசா உமக்கு நடிக்க தெரியுமேயன்றி ஒரு நல்ல படம் கூட இயக்க தெரியாது நீர் இயக்கிய அல்லது தலையிட்ட படங்களை எல்லாம் பாரும், அதெல்லாம் குப்பைமேட்டில் கிடக்கும், காரணம் உங்களது அதிமேதாவிதனம் நிச்சயம் நீர் அறிவாளி, மிகபெரும் அறிவாளி ஆனால் சாமான்யமக்களோடு ஒட்டமுடியாத அறிவு வீணாகவே போகும் எப்படி நீர் இயக்கிய படமெல்லாம் உமக்கு மட்டும் புரிந்து பெட்டிக்குள் முடங்கியதோஅப்படியே உமது கட்சியும் முடங்கி கொண்டிருக்கின்றது இங்கு இருப்பது சாமான்ய மக்கள், இவர்களுக்கு தேவை முட்டாள் […]

ஆண்டவன் தீர்ப்பு

ஸ்டாலின் ஒரு நாளும் கலைஞராக முடியாது, அப்படியே ராதாரவியும் ஒருநாளும் எம்.ஆர் ராதா ஆகமுடியாது ராதா எத்தனையோ சர்ச்சை பேச்சுகளை பேசினார், எத்தனையோ நடிகைகளை பற்றி பகிரங்கமாக பேசிவிட்டு வந்தவர் அவர் நடிகை என்ன? நடிகர்களையே அவர் பேசிய பேச்சு கொஞ்சமல்ல‌ ஆனால் எந்த பேச்சையும் அவர் மழுப்பவில்லை , பின் வாங்கவில்லை, ஏன் ராமசந்திரனை சுட்டுவிட்டே “சுட்டாச்சி சுட்டாச்சி” என அசால்ட்டாக வந்தவர் வாரிசுகள் என்பது மரங்களுக்கும் விலங்குகளுக்கும் மீன்களுக்கும் அவைகளை போல துளியும் மாறாமல் அமையலாம் […]

நல்ல பிராமணாள் எல்லாம் என்னோட வாங்கோ

நேக்கு மந்திரிசபையிலும் அவாள் இடம் கொடுக்கல்லை.. தேர்தல்ல கூட சீட் இல்லே சொல்லிட்டாள், அவா போற போக்க பார்த்தா என்ன‌ அடுத்தமுறை ராஜ்யசபா எம்பியா கூட ஆக்கமாட்டாள் போல இருக்கு கட்சியோட அடுத்த தலைவர்னு என்னத்தானே ச்சொல்லணும்? அப்படி ச்சொல்லாதவாளோட என்ன அனுசரிப்பு? அடுத்த பிரதம்ர்னு என்னத்தான சொல்லணும்? என்ன அத்வாணிமாதிரி ஆக்க பாக்குறாளா? அதான் ச்சொல்றேன், நானொரு பிராமணன், காவல்காரனெல்லாம் ஆகமாட்டன், நல்ல பிராமணாள் எல்லாம் என்னோட வாங்கோ..”

இலங்கையில் பறக்கும் தட்டுகளும் அந்நிய கிரகத்தாரும்

இலங்கையில் கொஞ்சநாளாக பறக்கும் தட்டுகளும் அந்நிய கிரகத்தாரும் வந்து போவதாக பல செய்திகள் உண்டு அவை கட்டுகதை என ஒருசாராரும், திருடர்கள் பரப்பிவிடும் கதை என ஒருசாராரும் இல்லை உண்மையிலே அந்நிய கிரக சக்திகள் நடமாட்டம் என ஒரு சிலரும் சொல்லிகொண்டிருக்கின்றனர் 2 அடி உயர விசித்திர உருவங்கள் அடிக்கடி அங்கு இரவு தென்படுமாம், சாடுமாம், ஓடுமாம், கதவை தட்டுமாம் இன்னும் ஏகபட்ட அட்டகாசங்கள் செய்யுமாம் ஆனால் எதுவும் அவை பேசுவதில்லையாம், உற்று பார்க்குமாம் அப்படியே ஓடிவிடுமாம் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications