பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

இது புரியாமல் உண்டு செத்துவிட்டார் ஜெயலலிதா

“தொழீஇ அட, உண்ணார்; தோழர் இல் துஞ்சார்; வழீஇப் பிறர் பொருளை வவ்வார்; கெழீஇக் கலந்த பின் கீழ் காணார்; காணாய், மடவாய்! புலந்தபின், போற்றார், புலை..” அடுத்தவரை சுரண்டுதல், பொய் சொல்லுதல் , வஞ்சகம் செய்தல் என மிக மோசமான குணத்தை ஒருவரிடம் கண்டுவிட்டால் ,நல்லோர் அவர்கள் சமைத்த உணவை கூட உண்ணமாட்டார்கள் இது புரியாமல் உண்டு செத்துவிட்டார் ஜெயலலிதா…

கொடியவர்களிடம் சிக்கமாட்டார்கள்

“சிலம்பிக்குத் தன் சினை கூற்றம்; நீள் கோடுவிலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம் படாமாவிற்குக் கூற்றம் ஆம்; ஞெண்டிற்குத் தன் பார்ப்பு; நாவிற்கு நன்று அல் வசை..” சிலந்திப் பூச்சிக்கு அதன் முட்டையும், மிருகங்களுக்கு அவற்றின் நீண்ட கொம்புகளும், கவரிமானுக்கு அதன் மயிரும், நண்டுக்கு அதன் குஞ்சுகளும், மனிதனுக்கு அவன் நாவும் எமனாகும் அதாவது ஒரு உயிருக்கு எதெல்லாம் பலமும் அழகும் கொடுக்குமோ அதுவே அவர்களுக்கு ஆபத்துமாகும், அவைகளுக்கு ஆபத்து என்பது எங்கிருந்தும் வருவதல்ல, தன்னுள்ளே இருப்பதே இதை […]

நிம்மதியாக வாழ்வான்

“அறம் நட்டான் நல்-நெறிக்கண் நிற்க, அடங்காப் புறம் நட்டான் புல்-நெறி போகாது! – புறம் நட்டான் கண்டு எடுத்து கள், களவு, சூது, கருத்தினால், பண்டு எடுத்துக் காட்டும், பயின்று.” அதாவது அறவழி நடப்பவன் தீவழி புகான், கெட்ட வழிக்கு சென்று தன்னை அழிக்கமாட்டான் மேலாக ஒருவன் செல்ல கூடாத வழிக்கு சென்றால் என்னாவான் என்பதை உலகிற்கு போதிக்கும் மிகபெரும் எடுத்துகாட்டாக நிம்மதியாக வாழ்வான்..

கமலஹாசனுக்கு புரிந்தால் நல்லது

“வான் குரீஇக் கூடு, அரக்கு, வால் உலண்டு, நூல் புழுக்கோல், தேன் புரிந்தது, யார்க்கும் செயல் ஆகா; – தாம் புரீஇ, வல்லவர் வாய்ப்பன என்னார்; ஓரோ ஒருவர்க்கு ஒல்காது, ஓரொன்று படும்.” தூக்கணாங்குருவி கூடும், எறும்புகளால் உருவாக்கபடும் அரக்கும், புழுக்களால் உருவாக்கபடும் பட்டு நூலும், சிலவகை புழுக்கள் கட்டும் கூடும், தேனிக்கள் சேகரித்து கட்டும் தேன் கூடும் வேறு யாராலும் கட்டமுடியாதவை எல்லாம் கற்ற எந்த ஞானியும் அதை உருவாக்கிவிட முடியாது இது கமலஹாசனுக்கு புரிந்தால் […]

அழியா புகழுடைய காரல் மார்க்ஸ்

உலகத்தை புரட்டி போட்டவர்களில் அழியா புகழுடையவர் காரல் மார்க்ஸ், உலகம் கண்ட வரலாற்று மனிதர்களில் அவருக்கான இடம் எக்காலமும் அழியாதது அவர் ஒரு யூதர், ஆனால் கிறிஸ்தவ யூதர். நமக்கெல்லாம் ஹிட்லர் யூதரை ஒழித்தது தெரியும். ஆனால் இயேசுவிற்கு பின்னால் ரோமர் யூதரை போட்டு சாத்தினார்கள், ரோமின் அரசராக போப் வந்த பின் ஐரோப்பா எங்கு அடிக்கடி போட்டு அடித்தார்கள் அப்படி அடிதாங்கமுடியாமல் கிறிஸ்தவத்திற்கு மாறிய சில யூதர்கள் உண்டு, காரல் மார்க்ஸின் முன்னோர் ஜெர்மனில் அப்படி […]

வருந்தி அழைத்தாலும் வரவும் வராது

“பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,மூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்குஉரையாமைச் செல்லும் உணர்வு” அதாவது பூக்காமலே காய்க்கும் சில மரங்கள் உண்டு பலா மரங்கள் போன்றவை அந்த ரகம், அப்படி சில அறிவாளிகள் வயதால் இளையவராலும் மூத்தவர்களுக்கு சமமாக அறியபடுவர் பாத்திகட்டி கவனமாக வளர்க்கபடும் செடிகளை விட, தானாக முளைத்து வந்து அதிகபலன் கொடுக்கும் செடிகளும் உண்டு அப்படி ஒரு சிலருக்கு பிறவியிலே மகா அறிவு உண்டு , […]

விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன்

கடந்த நூற்றாண்டை புரட்டிபோட்ட விஞ்ஞானிகளில் முதன்மையானவர் ஐன்ஸ்டீன் மற்ற விஞ்ஞானிகளை விட இவர் மகா வித்தியாசமானவர், அதாவது விஞ்ஞானிகள் என்றால் ஆய்வகத்தில் அமர்ந்திருக்கவேண்டும் , ஒரு மாதிரி தாடி வைத்திருக்கவேண்டும், எப்பொழுதும் சீரியசாக இருக்கவேண்டும், பிப்பெட் குழாய், வேதிபொருள் அல்லது உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆர் போல இருட்டுக்குள் வியர்வை வழிய வழிய ஏதோ கிறுக்கி கொண்டிருக்கவேண்டும் என்பதெல்லாம் அல்ல‌ மாறாக ஒரு பேப்பர் ஒரு பென்சில் போதும், அவர் போக்கில் சமன்பாடுகளை எழுதிகொண்டே இருப்பார். ஏதாவது […]

மாற்றத்திற்கான அறிகுறிகள்

கலைஞர் இருந்திருந்தால் இந்நேரம் ராகுல் கேள்விகளை தமிழில் கேட்கின்றேன் என அவர் அருகிலே இருந்திருப்பார் கூட்டத்து கவனமோ இல்லை தமிழக கவனமோ ராகுலை நோக்கி செல்லாதவாறு அட்டகாச வித்தைகாட்டியிருப்பார் தமிழகத்தில் யார் வளரவேண்டும், எப்படி வளரவேண்டும் என்பதை கடந்த 60 ஆண்டுகாலம் தன் கையிலே வைத்திருந்தவர் அவர் ஜெயா இருந்திருந்தால் இந்நேரம் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி முதல்வர் என்ன பாடுபடுவாரோ தெரியாது பெரும் பிம்பங்கள் உடைந்தபின் பல தேசிய அடையாளங்கள் இங்கு உதிக்க ஆரம்பிக்கின்றன‌ இவை எல்லாம் […]

காலம் மாறி போச்சி

“இனி தமிழ்நாடு போய் எம்ஜிஆர் சிவாஜின்னு பேசாதீக்க ஜி, காலம் மாறி போச்சி அச்சா? பின்னே ராகுல் சும்மா காலேஜ் ஸ்டூன்ட் மாதிரி போய் கலக்குறார், இனி நிறைய காலேஜ்ல கூப்பிடுவாங்க போல‌ ஹே ராம் .. நாம என்ன செய்றது? அதனால இனி ஒவ்வொரு தமிழ்நாட்டு காலேஜுக்கும் போய் பேசுங்க‌ அவங்க GobackModi சொல்வாங்களே மேன்? அட காலேஜுக்கு மோடி வர்றார்னா கிளாஸ் நடக்காது, அதுனால ஸ்டூடன்ட் அடிக்கடி உங்கள கூப்பிடுவாங்க நல்ல ஐடியா ஜி, […]

இன்றைய துளிகள் 13/03/2019

இந்த நிகழ்சிக்கு ஏற்பாடு செய்தவன் நிச்சயம் ரெஸ்டாரன்ட் முதலாளியாகத்தான் இருப்பான் இவ்வளவுக்கும் பெரியாருக்கு சமைத்து கொடுத்து காத்தவர் மணியம்மை என்பது குறிப்பிடதக்கது (அப்பொழுதும் படுக்கை அறையினை உடைப்போம் என சொல்வில்லை , அது ஏன் என நாம் கேட்க கூடாது ) சென்னை வந்துவிட்டு தலைவிக்கு எந்த தொகுதி என அறிவிக்காமல் கொஞ்சமும் பொறுப்பின்றி கல்லூரி மாணவிகளிடம் அரட்டை அடிக்கும் ராகுல்காந்தியினை சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு, ஓரளவு வரைக்கும்தான் நாங்கள் பொறுமை […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications