பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தலைவலி தரும் தொகுதிகளா?

தனக்கு தலைவலி தரும் தொகுதிகளை திமுக தரப்பு காங்கிரசுக்கு தள்ளிவிடும் வாய்ப்பு பிரகாசமாக தெரிகின்றது, உத்தேச தொகுதி பட்டியலும் அப்படித்தான் வருகின்றன‌ நெல்லை, மதுரை போன்றவற்றை திமுக தவிர்க்க நினைக்கின்றது, அவற்றை காங்கிரசுக்கு கொடுக்க முடிவு செய்திருக்கின்றது கன்னியாகுமரி தொகுதி நிச்சயம் காங்கிரசுக்கு என்கின்றார்கள், அது உண்மையானால் பொன்னாரை வீழ்த்த தலைவி குஷ்புவினை நிறுத்தலாம் என்னதான் பொன்னார் வலுவாக இருந்தாலும் காங்கிரசுக்கான வோட்டு வங்கி அத்தொகுதியில் உண்டு, வலுவான காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தும் பட்சத்தில் அத்தொகுதி மறுபடியும் […]

விடாபிடி

70 ஆண்டுகளில் காங். அரசால் செய்ய முடியாததை 5 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு சாதித்து இருக்கிறது – பிரதமர் மோடி ஆட்சி முடியும்பொழுதும் உண்மையினை சொல்லவே கூடாது எனும் விடாபிடியுடன் இருக்கின்றார் மோடி அவர் சொல்வதும் உண்மைதான், 70 ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் சரிந்து 2000 ரூபாய் நோட்டு வந்ததே இல்லை

அவர்களுக்கு பொறுக்காதாம்

17 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ராமர் கோவில், அகண்ட பாரதம் என அவர்கள் ஆயிரம் விளம்பரம் செய்யலாம் ஒரு போர்சூழலை கூட அரசியலாக்கலாம், ஒரு பைலட் வெளிவந்த விஷயத்தை கூட விளம்பரமாக்கலாம் அட குவாங்சூவ், சியோல், பென்சில்வேனியா நகரங்களை காட்டி குஜராத்தின் நகரங்கள் என விளம்பரம் செய்யலாம் ஆனால் ஒரு சோப்பு கம்பெனி மதவெறுப்பு இல்லா ஒரு விளம்பரத்தை செய்துவிட கூடாதாம், அவர்களுக்கு பொறுக்காதாம் சவக்கார தூளிலா தாமரை அழிந்துவிடும்?

மணியம்மை

என்னதான் திமுக பெண் விடுதலை, பெண் உரிமை என பேசினாலும் ஒரு பெண்ணின் மாபெரும் தியாகத்தை அவ்வளவாக சொல்லமாட்டார்கள், ஒரு மாதிரி நழுவுவார்கள் அப்பெண்ணே திமுக தோன்றுவதற்கு வாய்ப்பாகவும் பின் அது ஆட்சி அளவிற்கு வந்து நிற்க காரணமாகவும் இருந்திருக்கின்றார், அவர் இல்லாவிட்டால் திமுக என்றொரு கட்சி உதயமாகியிருக்க வாய்ப்பு இல்லாமே போயிருக்கும் அவர் மணியம்மை, திகவின் பிரதான தொண்டராக இருந்த வேலூர் கனகசபை என்பவரின் மகள், கனகசபை நீதிகட்சி, சுயமரியாதை தொண்டர் ஆதலால் அன்றே பள்ளி […]

போலியோ மருந்து

அந்த வியாதி கொடூரமானது, ஒருவன் வாழ்வினையே முடக்கும் அளவு இரக்கமே இல்லாதது. இளம்பிள்ளை வாதம் என தமிழிலும், போலியோ என ஆங்கிலத்திலும் அழைக்கபட்ட வியாதி அது அது ஆதிகாலத்திலே இருந்திருக்கின்றது, இயேசு கூட அப்படி ஒருவனை குணமாக்கியதாக தெரிகின்றது, சப்பாணிகள் என்றும் முடவர்கள் என்றும் கடவுள் குணப்படுத்துவார் என ஜெருசலேம் கோவிலில் காத்து கிடந்தவர்கள் எல்லாம் அந்நோயால் பாதிக்கபட்டவர்கள் என்கின்றது வரலாறு அப்படிபட்ட நோயின் தாக்கம் கடந்த தலைமுறைவரை இருந்தது, ஒவ்வொரு ஊரிலும் போலியோ தாக்கபட்டவர்களை காணாலம் […]

டார்ச்லைட் சின்னம்

கமலஹாசனுக்கு டார்ச்லைட் சின்னம் வழங்கபட்டது பேட்டரியும் பல்பும் இல்லாத டார்ச்லைட்டை வைத்து கமல் என்ன செய்வாரோ தெரியாது இப்பொழுது கமலஹாசனுக்கு மகா மோசமான நேரம் ஆம், பாலியல் தொழிலாளிகளின் வாழ்வினை வைத்து “டார்ச்லைட்” என்றொரு படம் முன்பு வந்தது, சதா ரித்விகா போன்றவர்கள் நடித்தும் படம் பெட்டிக்குள்ளே முடங்கியது (இம்மாதிரி படங்களை எல்லாம் கட்டாயம் பார்க்க வேண்டும் ஆனால் விமர்சனம் எழுத கூடாது என்பது நம் கொள்கை என்பதால் படம் பார்த்துவிட்ட பின்பும் கம்மென்று இருந்தோம்) இப்பொழுது […]

2 லட்சம் காரட் வைரம்????

திமுக ஸ்பெக்டரமில் 2 லட்சம் கோடி ஊழல் என சொன்னது எவ்வளவு அபத்தமோ அப்படி 3 லட்சம் கோடி வைரம் என கிளம்பிவிட்டார்கள். அதுவும் 2 லட்சம் காரட் வைரமாம், இதுதான் காமெடியிலும் காமெடி உதாரணமாக விஜயகாந்த் கட்சி சீனாவின் செஞ்சேனை போல உலகை வெல்லும் அளவு வலுவானது என்றால் சிரிக்கமாட்டோமா? அப்படித்தான் விஷயம் விற்பனைக்கு வரும் பெரிய வைரங்களேஒரு பெரும் வைரத்தின் அளவே 20 காரட்டை தாண்டாது, இவர்களோ ஊட்டி காரட் மூட்டை அளவு பேசிகொண்டிருகின்றார்கள் […]

நம்மள ஏன் கண்டுக்கல?

நானும் திமுகவையும் அதன் தலமையினையும் எப்படி எல்லாம் திட்டிருக்கேன் ஒன்னா ரெண்டா.. எவ்வளவு மோசமா நானும் தம்பிகளும் என் தமிழ்பிள்ளைகளும் திட்டியிருக்கோம் இப்போ தேமுதிகா கட்சின்னா மோதுறவங்க, நம்மள ஏன் கண்டுகிடவே இல்ல… ஒரு வார்த்தை கூட இல்லை, ஒரு வசவு கூட இல்ல. சுத்தமா நம்மள கண்டுக்கிட்டது இல்ல அவ்வளவுதான் நம்ம மரியாதையோ.. ரொம்ப வெட்கமா இருக்கு, இனி அண்ணன் கொடுத்த சயனைடு குப்பிய கடிச்சிற வேண்டியதுதான்

முதல்வராகும் ஆசை

நெடுஞ்செழியன் மனைவி கோப்பெருந்தேவியுடன் வீற்றிருந்தான், சோழமன்னன் தன் மனைவியோடு வீற்றிருந்தான், ஏன் ராவணனே தன் மனைவி மண்டோதரியுடன் வீற்றிருந்தான் என்ற காட்சிகள் பழங்காலத்தில் உண்டு பின்னாளில் அது மாறிற்று மன்னராட்சியில் இருந்து மக்களாட்சிக்கு தமிழகம் மாறிய புதிதில் ராஜாஜி போன்ற தலைவர்கள் மனைவியோடு வந்தவர்கள் அல்ல‌ காமராஜருக்கு மனைவியே கிடையாது, ஆம் ஒரு மனைவி கூட கிடையாது அண்ணாவின் மனைவி ராணி என்றொருவர் உண்டு என்பதே சிலருக்கு தெரியாது முதன் முதலில் மனைவியோடு வலம் வந்தவர் புரட்சி […]

என் வலி எனக்கு தான் தெரியும்

“கலைஞர் தொட்டது எதுவும் உருப்படாதுண்ணு ஒருநாள் ஆத்திரத்தில சொன்னேன் உன் கல்யாணத்தையே நான் தான் நடத்தி வச்சேன்னு சட்டுன்னு உண்மைய‌ சொல்லிட்டாரு அவரு இப்போ என் பொண்டாட்டி பேட்டி பார்த்த பிறகு புரியுதாடா, நான் ஏன் அப்படி சொன்னேன்னு. அவர் பண்ணி வச்ச கல்யாணம்டா அந்த‌ கோபத்துலதாண்டா கடைசி வரைக்கும் திமுக பக்கமே போகாம இருக்கேன் என்னோட வலி எனக்கு மட்டும்தாண்டா தெரியும்..”

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications