பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அபிநந்தன் அறிக்கையா?

அபிநந்தன் ஒரு அறிக்கை விட்டதாக சிலர் சில செய்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் அதில் மோடி புகழ் பாடுகிறார்கள் அபிநந்தன் அப்படி சொல்லி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை சுத்தமாக இல்லை அவர் தன் உடல்நல சோதனையை கூட இன்னும் முடிக்கவில்லை அதன்பின் மன அழுத்த சோதனை உயர் அதிகாரிகளிடம் விளக்கம் இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கிறது அதை முடித்துவிட்டு தான் ராணுவ அனுமதியோடு தான் அவர் பேச முடியும் இதெல்லாம் வீண் கட்டுக்கதைகள் அபி நந்தனின் வீர சாகசத்தை […]

புதிய தலைவி தேடல்

தொடர்ந்து தேச விரோத கருத்துக்களை பேசி வருவதாலும் மோடியை விமர்சிக்கிறோம் என்ற பெயரில் இம்ரான் கானை தூக்கி பிடிப்பதாலும் இன்னும் தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்காத அந்த இந்திய தேசிய விரோதியை அரசியல் லாபத்திற்காக பெரிய தியாகி போல சித்தரித்து பேசுவதாலும் இன்னும் பல தேசவிரோத பேச்சுக்களைப் பேசுவதாலும் வேறுவழியின்றி குஷ்பூ தலைவி பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார் சங்கத்திற்கு வேறு வழி தெரியவில்லை , அவர் மேலான புகார்கள் குறிப்பாக தேசபக்தி மீதான புகார்கள் ஏராளம்லை அதை கடந்து செல்ல […]

கதை ரெடி

எது நடந்தாலும் அது மிக நன்றாகவே நடந்தது என சினிமா எடுத்து மகிழ்பவர்கள் சினிமாக்காரர்கள்,, இந்த அபினந்தன் கதையினை விடுவார்களா? ஆளாளுக்கு கிளம்பிவிட்டார்கள், இந்தியில் பலர் பெயர் பதிவு செய்து விட்டார்கள், கோடம்பாக்கத்தார் விடுவார்களா? அதுவும் தமிழன் என்றால் விடுவார்களா? விடவே மாட்டார்கள், ராமசந்திரனையே அகில உலக விஞ்ஞானியாக காட்டியவர்களுக்கு விஜயகாந்தினை எகுத் ஓல்மார்ட், பெஞ்சமின் நேதன்யாகு அளவிற்கு திரையில் காட்டியவர்களுக்கு இந்த அபினந்தன் கதை பாலில் விழுந்த பழம் அல்லவா? பொதுவாக ராமசந்திரனுக்கும் ஜெய்சங்கரும் அந்நிய […]

இந்தியாவின் அதிகாரமிக்கவர்கள்

இந்தியாவின் அதிகாரமிக்கவர்கள் வரிசையினை எடுத்துகொண்டால் யாரெல்லாம் துணிச்சலும் நாட்டுபற்றும் குடிகளை காக்கும் பொறுப்பும் வாக்குவங்கி கவலையும் இல்லையோ அவர்களே பெரும் யுத்தம் நடத்தியிருக்கின்றார்கள் முதலில் பட்டேல் நடத்தினார் நாடு வலிமையானது, பாகிஸ்தானை சீனாவினை நம்பிய நேரு முதுகில் வாங்கினார் சாஸ்திரி மிக துணிச்சலான யுத்தத்தை முன்னெடுத்தார் தந்தை வழியில் இருந்து விலகினார் இந்திரா, அந்நிய சக்திக்கோ வாக்கு வங்கிக்கோ அவர் அஞ்சவில்லை இஸ்லாமிய வாக்குகள் பாதிக்குமோ என்ற தயக்கம் ஏதுமே இல்லை அவர் அடித்த அடியில் பாகிஸ்தான் […]

ஆழ்ந்த அஞ்சலிகள்

அபினந்தன் மீட்கபட்டிருக்கின்றார் மகிழ்ச்சி அதே நேரம் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த ஆறு வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்த மறக்க கூடாது ஆழ்ந்த அஞ்சலிகள் எல்லை இன்னும் பதற்றத்திலே இருக்கின்றது, அவமானபட்ட பாகிஸ்தான் வழக்கமான துப்பாக்கி சண்டைக்கு வந்திருக்கின்றது இருபக்கமும் சிலர் இறந்திருக்கின்றார்கள் இன்னும் பதற்றம் தீரவில்லை அவர்கள் தீரவிடவும் மாட்டார்கள் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரவணக்கம்

இலக்கை விட்டிருக்குமா?

பாகிஸ்தானில் இந்தியா தாக்குமுன் பல தந்திரங்களை காட்டியிருகின்றது, பல விதங்களில் பாகிஸ்தானை ஏமாற்றி அலையவிட்டு தாக்கி இருக்கின்றார்கள் எனும் தகவல் இப்பொழுது ஒவ்வொன்றாக வெளிவருகின்றது பாகிஸ்தானுக்குள் புகுந்துதாக்குவது பிரச்சினை அல்ல, ஆனால் அதன் விமானங்கள் உடனே வந்துவிட்டால், பின்லேடன் கொல்லபட்டதில் இருந்து அவர்கள் மிக அலர்ட்டாக இருப்பது வேறுவிஷயம் இதனால் பாகிஸ்தானை திசைதிருப்ப திட்டமிட்டிருக்கின்றார்கள் முதலில் ராஜஸ்தான் பக்கம் பாகிஸ்தானுக்குள் இந்தியா ஊடுருவதாக பாவலா காட்டியிருக்கின்றார்கள், எல்லை பக்கம் போய் பாகிஸ்தான் ரேடார்கள் எப்படி என சோதித்திருக்கின்றார்கள் […]

மர்மமா?

அபினந்தன் பாகிஸ்தானுக்கு அரசியல் பயணம் செல்லவில்லை, மாறாக கைதுசெய்யபட்டு வெளியில் விடபட்டிருக்கின்றார் இதனால் அவர் முடிக்க வேண்டிய ராணுவ சம்பிரதாயங்கள் நிறைய உண்டு முதலில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடக்கும் அதன் பின் அவர் பாகிஸ்தானில் எதிர்கொண்ட சிக்கல்கள் அனுபவங்கள் என பல விசாரிப்புகள் நடக்கும் அதில் பல ஆவணபடுத்தபடும் பல ஆவணபடுத்தமாட்டாது நிச்சயம் அபினந்தன் நாட்டுபற்று மிக்கவர் சந்தேகமில்லை, ஆனால் எதெல்லாம் அவர் சொல்லியிருக்க கூடும் எதை சொல்லியிருக்கமாட்டார் என்றேல்லாம் பல கோண விசாரணை உண்டு […]

அரசியல்

1964ல் வரலாறு காணா கொடும்புயலில் தனுஷ்கோடி புயலில் அழிந்தபொழுது சாஸ்திரியும் இந்திராவும் என்ன தமிழகத்திற்கு குடிபுகுந்தார்களா? ஆனால் 1971ல் திமுக வங்க யுத்தத்தில் இந்திராவினை ஆதரிக்கவில்லையா? நிதி வசூலித்து கொடுக்கவில்லையா? அதே இந்திராவின் காலில் விழுந்து கிடக்கவில்லையா? தனுஷ்கோடி அழிவினைவிடவா காஜா பெரிது? அன்று ஏன் திமுக வைகோ எல்லாம் பேசவில்லை? ஆம் அன்று ஆட்சி இவர்கள் கையில் இருந்தது ஆட்சி இருந்தால் புயலால் சுத்தமாக அழிந்தாலும் கம்மென்று இருப்பார்கள், ஆட்சி இல்லை என்றால் சாதாரண புயலுக்கும் […]

விஷயம் பெரிது

இதென்ன? சுடபட்ட பாகிஸ்தான் விமானத்தை காட்டசொன்னால் தகரம் பொறுக்கி வந்திருக்கின்றார்கள்? பேரீட்சை பழம் வாங்கவா? என சொல்லி அவர்களாகவே சிரித்து கொண்டது பகுத்தறிவு + இம்ரான் கோஷ்டி இந்திய தளபதி ஒருவர் சும்மா தகரம் தூக்கி கொண்டு வருவாரா? விஷயம் இல்லாமலா இருக்கும் விஷயம் பெரிதாக இருகின்றது ஆம் அந்த தகரம் விமானத்தில் இருந்து விமானத்தை அழிக்க ஏவும் Advanced Medium-Range Air-to-Air Missile சுருக்கமாக AMRAAM என்பார்கள் விமானத்தில் இருந்து எதிரி நாட்டு விமானத்தை அந்தரத்தில் […]

பாக் விமானி நிலை

புதன் கிழமை நடந்த மோதலில் இந்திய விமானம் ஒன்றும் பாகிஸ்தான் விமானம் ஒன்றும் வீழ்த்தபட்டது அதில் ஒரு பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது முதலில் பாகிஸ்தான் விமானம் விழுந்திருக்கின்றது, அதில் தப்பி குதித்த விமானி பாகிஸ்தானி என தெரியாமலே பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரிகள் அடித்து நொறுக்கியிருக்கின்றார்கள் சம்பவம் அறிந்து பாகிஸ்தான் ராணுவம் ஓடிசென்று மீட்டபொழுதுதான் அபிநந்தனின் விமானமும் விழுந்து ஆவரும் அடிபட்டிருக்கின்றார் அவரையும் பாக் ராணுவம் மீட்டிருக்கின்றது நினைவிருகின்றதா? முதலில் இரு இந்திய விமானங்கள் என தகவல் வந்ததல்லவா? அந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications