பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

அண்ணன் யோசிச்சிட்டே இருக்கேன்

தம்பி, ஒண்ணு நுட்பமா விளங்கிகிடனும், நடக்குறது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், நாம போட்டி போட்டு 40 தொகுதிலியும் ஜெயிச்சிட்டா நம்மள பிரதமராக்கிருவாங்க‌ அப்புறம் தமிழர் பிரச்சினைய பேசமுடியாது, காஷ்மீர பாரு, பீகார பாருண்ணு தமிழர் பிரச்சினையில இருந்து நம்மள காலிபண்ணிருவானுக‌ ஈழவிடுதலைக்காக அண்ணன் கொடுத்த துப்பாக்கி பயிற்சி எல்லாம் நான் பாகிஸ்தான் போரில் வீணாக்கணும் அதுமட்டுமா ராஜபக்சே வந்தா கைகொடுக்கணும் கும்பிடனும், அதுதான் இவங்க திட்டம், தாங்குமா? நடக்குமா? ஈழபிரச்சினை காவேரின்னு நமக்கு ஏகபட்ட வேலை இருக்கு அதை […]

தேர்தல் துளி – 21 பெப்ரவரி 2019 (2)

பயப்படாம வாங்க “அண்ணே புரொகிராம் சொல்லுங்க.. இப்போ இந்திய கம்யூனிஸ்ட்கிட்ட பேசபோறோம் 3 மணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் அப்புறம் 3.30க்கு வாசன் வருவார் அப்புறம் 4 மணிக்கு மார்கிஸ்ட் கம்யுனிஸ்ட் தொகுதி புடுங்க வருது அப்புறம் 5 மணிக்கு திருமா வருவார், அவரோட மல்லுகட்டனும் அப்புறம் 6 மணிக்கு வைகோ வருவார், அவருக்கும் தொகுதி கொடுக்கணும்.. அப்புறம் அதுக்கப்புறம் நம்ம கட்சிக்குள்ள சண்டை வரும், கனிமொழி குரூப் , தயாநிதி குருப்புண்ணு அடுத்த பங்கீடு அண்ணே அதை […]

தேர்தல் துளி – 21 பெப்ரவரி 2019 (1)

திமுகவை யாராலும் தோற்கடிக்க முடியாது: முக ஸ்டாலின் பேச்சு இதுவரை தோற்ற படு தோல்வி பற்றி கேளுங்கள், அது போன மாசம் நான் சொல்றது இந்த மாசம் என வடிவேலு பாணியில் பதில் வரும் கூட்டணி உடன்பாடு காங்கிரஸுக்கு புதுச்சேரி உள்பட 10 தொகுதிகள்: திமுக கூட்டணியில் உடன்பாடு அந்த பத்து தொகுதியில் ஒன்றை தலைவி குஷ்புவிற்கு ஒதுக்க வேண்டியது காங்கிரசின் கடப்பாடு கட்டாய திருமணம் அதிமுக கூட்டணி கட்டாய திருமணம் : திருநாவுக்கரசர் மிஸ்டர் திருநா, […]

இன்றைய துளிகள் (1)

மக்கள் நீதி மய்யம் மக்கள் நீதி மய்யம் தொடங்கி ஓராண்டு நிறைவு- கட்சி அலுவலகத்தில் கொடியேற்றினார் கமல் ஓராண்டாக என்ன செய்தார், மய்யம் எங்கே வளர்த்திருக்கின்றது என பார்த்தால் ஒன்றுமே இல்லை கட்சி தொடங்கும் பொழுது அருகில் இருந்த ஸ்ரீபிரியா உள்ளிட்டவர்களை கூட இப்பொழுது காணவில்லை சொல்லிகொள்ளாமல் ஓடிவிட்டார்கள் போலிருக்கின்றது திரையில் கமலஹாசன் ஜெயித்திருக்கலாம் ஆனால் அரசியலில் கேப்டன் விஜயகாந்த் பக்கம் கூட அவரால் வரமுடியாது என்பதுதான் நிஜம் பிஞ்சு குழந்தைகளுக்கு கூடுதல் சுமை வெள்ளையன் கல்வி […]

சீன பாரம்பரியம்

சொந்த ஊரில் இருந்து சிலமைல் தள்ளி சென்றாலே தன் பாரம்பரியத்தை மறப்பவன் தமிழன், ஆனால் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தன் பாரம்பரியத்தை இழுத்து செல்வதில் சீன இனம் தன்னிகரற்றது அப்படி சீன புத்தாண்டை கொண்டாடுகின்றார்கள், சந்தேகமில்லை அக்காலத்தில் பொங்கல் விழா தமிழகத்தில் 1 மாதம் கொண்டாடபடும் என்பார்கள் அல்லவா அப்படி அவர்கள் புத்தாண்டும் கிட்டதட்ட 1 மாதம் இழுக்கும் 1 மாதமென்றால் முழுக்க அல்ல மாறாக முக்கிய நேரங்களை கொண்டாடுவது தமிழருக்கு காணும் பொங்கல் என்றொரு […]

உலக தாய்மொழி தினம்

இன்று உலக தாய்மொழி தினமாம், அதனால் என்னரும் தாயே தமிழே என பலர் கலைஞர் பாணியிலும், எடுடா கொலை வாளை என பாரதிதாசன் பாணியிலும் பலர் முழங்கிகொண்டிருக்கின்றனர் தாய்மொழி என்பது ஒவ்வொருவருக்கும் தாயினை விட முக்கியமானது, மொழியே ஒருவனுக்கு சகலமும், மொழி வழியே அவன் உலகை அறிகின்றான், புரிகின்றான் தன் நிலை பகிர்கின்றான் தாய்மொழி ஒருவனுக்கு உயிர் சந்தேகமில்லை, ஆனால் மற்ற மொழிகளை படிப்பது ஒன்றும் தவறல்ல. தமிழகத்தில் என்ன நடந்ததென்றால் இந்தி வலுகட்டாயமாக ஆட்சி மொழி […]

எம்.ஆர் ராதா

ஒரு நடிகனுக்கான எல்லை எது? அவன் எப்படி இருக்க வேண்டும்? சமூகம் உற்று நோக்கும் ஒரு நடிகன் மிக உன்னதமான அரசியல் பற்றி என்ன நிலைப்பாடு கொண்டிருக்க வேண்டும் அதே நேரம் சமூக பொறுப்பும் இச்சமூகத்தை பாதிக்கும் விஷயங்களை தைரியமாக சொல்லும் அசாத்திய குணமும் இருக்க வேண்டும் என வாழ்ந்து காட்டியவர்கள் மிக சிலபேர் சார்லி சாப்ளின் போன்ற ஒரு கை விரல்விட்டு எண்ண கூடிய அந்த வரிசையில் வருபவரே தமிழகம் கண்ட அசாத்திய நடிகன் எம்.ஆர் […]

தேர்தல் துளி – 20 பெப்ரவரி 2019 தொடர்ச்சி

கொஞ்சம் அரசியல் ஆசையில் இருந்த விஜயகாந்தினை , அவர் மண்டபத்தை இடித்து அரசியலுக்கு தள்ளிய கட்சி திமுக‌ விஜயகாந்த் சிவந்த கண்களோடு அரசியலுக்கு வர முக்கிய காரணம் அது வந்ததும் “தெய்வத்தோடும் மக்களோடும் மட்டுமே கூட்டணி ” என முழங்கினார் திமுக அதிமுக என இரு கட்சிகளையுமே எதிர்த்து நின்றார், அவர் குடிகாரர் என்றெல்லாம் கலாய்த்தார்கள் அவரோ தனித்துதான் நின்றார், முதலில் கூட்டணி எல்லாம் இல்லை. ஒரு கட்டத்தில் அரசியல் சிக்கல் புரிய ஆரம்பித்தது, அவரை மிக […]

இன்றைய துளிகள் (2)

காஷ்மீர் தாக்குதலை கண்டித்து நியூசிலாந்து நாடு முதலாவதாக பாராளுமன்றத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றியுள்ளது இந்தியராக அவர்களுக்கு நன்றி சொல்வது நம் கடமை நீதி நியாயத்தை உணர்ந்த தேசமாக நியூசிலாந்து இருப்பதால் அவர்களை மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் இத்தேசம் வணங்குகின்றது இனி நம் சகோதர நாடு நியூசிலாந்து அப்படியே மசூத் அசார் ஒரு சர்வதேச தீவிரவாதி என அறிவித்த ரஷ்யாவிற்கும் கோடி நன்றிகள் ****** நாளை உலக தாய்மொழி தினமாம் நமக்கு தாய்மொழி, தந்தை மொழி எல்லாம் தமிழ் தமிழுக்கு […]

வெனிசுலா

சில நாட்களுக்கு முன்பு தி இந்து தமிழ் பத்திரிகையில், “வாழும் போதே நரகமாகும் வெனிசுலா” என்ற தலைப்பில் ஜெ.சரவணன் என்பவர் ஒரு கட்டுரை எழுதியிருந்தார் முழுக்க படு அபத்தமான கட்டுரை அது, அங்கிள் சைமனின் பிதற்றலுக்கு கொஞ்சமும் சளைத்ததல்ல அது அப்படி ஒரு முழு பொய்யும், உளறலும் ஆகும் தென்னமெரிக்கா பற்றியோ அங்கு நிலவும் அரசியல் பற்றியோ லத்தீன் கத்தோலிக்க பிரிவினை கிறிஸ்தவ அரசியல் பற்றியோ கொஞ்சமும் ஞானமில்லாதவர் அந்த எழுத்தாளர் சாவேஸ் என்பவர் எப்படி உருவானார்? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications