பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தொழில்நுட்ப வளர்ச்சியின் பயன்

தொழில்நுட்ப வளர்ச்சியின் ஆகசிறந்த பயன் என்னவென்றால் அரசியல்வாதிகளின் பழைய பேச்சையும் அறிக்கையினையும் அப்படியே வைத்திருந்து இப்பொழுது கொடுப்பது ஒவ்வொரு பயலும் எப்படி எல்லாம் பல்டி அடித்துகொண்டிருக்கின்றான் என்பதை கண்முன் காட்டும் தொழில்நுட்பமே நீ வாழ்க.. இந்திய / தமிழக அரசியல்வாதிகளின் மாபெரும் எதிரி இன்று தொழில்நுட்பம் ஒன்றே அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும் என இளங்கோ அக்காலத்திலே சும்மா சொல்லவில்லை அறக்கடவுளின் விஞ்ஞான வடிவம் இன்றைய‌ தொழில்நுட்பம் என்பது ஆகசரியானது , ஒவ்வொரு போலி அரசியல்வாதியின் முகத்தையும் […]

அடுத்த ஆட்சி

எது எப்படி ஆயினும் இனி ஆட்சிக்கு வரவேண்டியது காங்கிரசும் அதன் கூட்டணியுமே அதில் மாற்றுகருத்தே இல்லை மிக எதிர்பார்க்கபட்ட மோடி குஜராத்தின் முதல்வராக ஜொலித்த மோடி பாரதபிரதமராக சறுக்கி இருக்கின்றார் இரண்டாயிரம் ரூபாய் நோட்டு வந்த கதையும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சரிவும் , பெட்ரோல் மற்றும் எரிபொருளின் விலைவாசியுமே அதை காட்டி நிற்கின்றன‌ மிக மோசமான ஆட்சி என்று நிச்சயம் மோடியின் ஆட்சியினை சொல்லமுடியாது, பெரும் ஊழல் என்றும் இல்லை கிட்டதட்ட வாஜ்பாய் பிரதமராக […]

காஷ்மீர் – துளிகள்

காஷ்மீர் தாக்குதலுக்கு அமெரிக்கா மென்னி முழுங்கிற்று , ரஷ்யா ஏனோ வாய்திறக்கவில்லை, அமெரிக்காவுடன் துப்பாக்கி வர்த்தகம் இன்னும் சில வர்த்தகங்களில் இந்தியா நெருங்குவது இன்னும் சில நாடுகளுடனான‌ விமான ஒப்பந்தங்களை ரஷ்யா ரசிக்கவில்லை இதனால் புட்டீனும் கனத்த அமைதி, சிரியாவில் தன் பக்கம் இந்தியா நிற்கவில்லை எனும் ஒருவித வன்மமும் ரஷ்ய பக்கம் இருக்கலாம் என்கின்றார்கள் சீனாவோ பாகிஸ்தான் பக்கமே சரிகின்றது பிரான்ஸ் இந்தியா பக்கம் நிற்கின்றது ஆனால் நெருக்கமாக வரவில்லை உலகில் ஒருநாடு தாக்குதலை கண்டித்ததோடு […]

அந்நிய முதலீடு ???

அமெரிக்க காக்னிசென்ட் நிறுவணம் சென்னையில் கட்டடம் கட்ட 26 கோடி லஞ்சம் கொடுத்தது அமெரிக்க கோர்ட்டில் நிரூபிக்கபட்டது : செய்தி ஆக அந்நிய முதலீட்டுக்கு இந்த அரசு ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகின்றது, மாநாடுகளை எல்லாம் நடத்துகின்றது என்பது இப்பொழுதுதான் புரிகின்றது (உண்மையில் மிகபெரும் ஊழலாக வெடித்திருக்க வேண்டிய விஷயமிது ஆனால் மிக சாதாரணமாக கொடநாடு கொலை போல அசால்ட்டாக கடந்து செல்கின்றது அரசு, யாரும் அவர்களுக்கு நெருக்கடி கொடுக்க முடியவில்லை எதிர்கட்சி தலைவரான ஸ்டாலினாலும் ஒரு […]

மலேசியா வாசுதேவன்

தமிழ் திரையுலகில் சீர்காழி, சவுந்தரராஜன் வரிசையில் ஒரு கணீர் குரல் பாடகர் உண்டு, மகா அற்புதமான பாடகர் அவர். தமிழிசையின் அற்புதமான பாடல்கள், அழியா பாடல்கள் எல்லாம் அவர் குரலில் என்றும் ஒலித்துகொண்டே இருக்கும் அவர் பெயர் வாசுதேவன், அப்படி சொன்னால் தெரியாது மலேசியா வாசுதேவன் என்றால் புரியும் அவர் பிறப்பில் மலையாளி நாயர் குடும்பம், ஆனால் மலேசியாவில் வளர்ந்ததால் மலேசிய தமிழராகவே அறியபட்டவர், மலேசிய ரப்பர் தோட்ட தமிழரில் ஒருவர் நடிப்பு அவர் விரும்பிய விஷயமானது, […]

தேர்தல் துளி – 20 பெப்ரவரி 2019

ஒரு காலத்தில் காங்கிரஸை கழுவி ஊற்றிய கட்சி திமுக, சேற்றினை அப்படி வாரி இறைத்தார்கள், இந்திராவுடன் யுத்தமே நடத்தினார்கள் ஆனால் இப்படி ஒரு பாராளுமன்ற தேர்தலில் நாடு முக்கியம் என அவர்களோடு சேர்ந்து கொண்டார்கள் பாஜகவினை “பண்டார கட்சி”, “ஆண்டி பரதேசிகள் கட்சி” என்றெல்லாம் விமர்சித்தார்கள், பின்பு நாடு முக்கியம் அதை விட திமுகவுக்கு பதவி முக்கியம் என பாஜகவோடும் திமுகவினர் தயக்கமின்றி சேர்ந்து கொண்டார்கள் அதைத்தான் இன்று பாமகவும் பாஜகவோடு செய்திருக்கின்றது திமுக செய்தால் நாட்டுபற்று, […]

இன்றைய துளிகள் (1)

“ஏ ஏ சின்னமச்சான்.. என்ன புள்ள‌.. சிவத்த மச்சான்.. சொல்லு புள்ள‌.. ஊருக்குள்ள உங்கள பேசுறாக, விதவிதமா சொல்லி ஏசுறாக…” ****** எத்தனை கட்சியும், யாருடனும் கூட்டணி வைக்கட்டும். சாதனை வேதனை சாதி மதம் இன்னபிற விஷயங்களை எல்லாம் கணக்கிடட்டும் பேசட்டும் உண்மையில் ஜெயிக்க கூடிய கூட்டணி எது தெரியுமா? இந்த கூட்டணிதான்… ******* திரை மறைவில் டி.ஆர், சரத்குமார், கார்த்திக் இன்னும் பல பிரபலங்களிடம் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கலாம் குண்டு கல்யாணம், விந்தியா, சிம்ரன் போன்றவர்களும் […]

சிவாஜி

8ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இத்தேசம் அந்நியருக்கு எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருந்தது, இங்கே ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் எல்லோரும் பெரும் எதிர்ப்பினை சந்தித்துகொண்டே இருந்தனர் கஜினி முதலான மன்னர்கள் கொள்ளையடித்துவிட்டு ஆப்கனுக்கே ஓடினர், இங்கிருந்து ஆளும் எண்ணமெல்லாம் இல்லை, எதிர்ப்பு அப்படி இருந்தது. இங்கிருந்து ஆண்டவர்களும் நிம்மதியாக ஆளவில்லை, பெரும் எதிர்ப்புகள்ராஜ்புத்கள் முதல் பல இந்து மன்னர்களிடம் இருந்து வந்துகொண்டேதான் இருந்தது பின்னாளைய பாபர் வந்து முகல் வம்சத்தை ஸ்தாபித்தாலும் அவருக்கும் ஆப்கன் ஏக்கம் இருந்திருக்கின்றது, அவர் கல்லறை […]

இன்றைய துளிகள் (3)

டாக்டர் ராமதாஸ் மானமுள்ளவர், சொன்ன சொல் தவறாதவர் என அவரே சொல்லிகொள்வார் அவர் கட்சியினரும் சொல்லி கொள்வார்கள் முன்பு சூரிய மண்டலலும் உலகில் கடைசி சொட்டு நீர் இருக்கும் வரை திராவிட கட்சியுடன் கூட்டணி இல்லை என்றார், இப்பொழுது பழனிச்சாமி கட்சியினை திராவிட கட்சியிலிருந்து அவரே நீக்கிவிட்டு அங்கு சேர்ந்து கொண்டார் அங்கு அவருக்கு 7 சீட் கொடுத்திருக்கின்றார்கள் பாமகவுக்கு 7 சீட் என்றால் பாஜகவுக்கு 10 சீட் வேண்டாமா? என சீறிய பாஜக தரப்பு அப்செட்டில் […]

பிரித்வி :02

பிரித்வி :02 அது கிபி 1191ம் ஆண்டு , இந்தியா மேல் முதன்முறையாக படையெடுத்தான் கோரி முகமது ஆப்கனையும் இன்னும் சில நாடுகளையும் கைபற்றியபின் அவன் டெல்லி நோக்கி வந்தான், அவனை அரியானாவின் தராய் அருகே எதிர்கொண்டான் பிரித்விராஜன் மிக கடுமையான யுத்தம் அது, வில்வித்தை முதல் வாள்வீச்சு வரை மிக பெரும் வீரம் காட்டி நின்ற பிரித்விராஜன் முன்னால் கோரியால் நிற்க முடியவில்லை ஆப்கனை அடக்கிய கோரி முகமது பிரித்வி முன்னால் திணறினான், ஒரு கட்டத்தில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications