பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ராஜராஜ சோழன்

ராஜராஜ சோழன் எங்கோ பாய்ந்துகொண்டிருந்தது காவேரி, அதனை தஞ்சைக்கு திருப்பினான் கரிகாலன் கரிகாலன் செய்து கொடுத்த அந்த பெரும் காரியத்தில் சோழநாடு செழித்தது, நிரந்தர செழிப்பு அது. அந்த செழுமை கல்வி, கலை, வீரம் என எல்லாவற்றிலும் தஞ்சையினை முன்னுறுத்தியது அதனால் எழுந்த செழிப்பான சோழ நாட்டில் பிறந்தவன் தான் ராஜராஜ சோழன் ஒரு நாட்டின் செழுமை எப்படி நல்ல விஷயமோ, அதன் ஆபத்தும் அதுவேதான். எப்பொழுதும் எதிரிகள் தனியாகவோ, கூட்டமாகவோ பாய கூடும். அந்த ராஜ […]

சிதறல்கள்

சர்கார் படத்தின் டிரைலர் ஓடிகொண்டிருக்கின்றது அதில் “நான் கார்பரேட் கிரிமினல்” என வசனம் பேசுகின்றார் விஜய் பன்னாட்டு சினிமா கம்பெனிகளில் நடிப்பது, வருமான வரி கட்டாமல் ஏமாற்றுவது என இவரின் செயல்பாடுகளிலே இவர் கார்பரேட் கிரிமினல் என தெரியாதா? இதை வசனமாக வேறு படத்தில் சொல்ல வேண்டுமா? [ October 19, 2018 ] ============================================================================ பிரதமர் மோடி ராமலீலா போராட்டத்தில் கலந்து கொண்டது சரியா என பலர் கிளம்புகின்றார்கள் இது கலாச்சார விழா மன்மோகன் சிங்கும் […]

நடிகை ஶ்ரீவித்யா

நடிகை ஶ்ரீவித்யா தமிழகத்தில் எத்தனையோ நடிகைகள் வந்தார்கள், சிலர் தடம் பதித்தார்கள், சிலர் கோபுரம் ஏறினார்கள், சிலர் ஆறா வடுக்களை ரசிகர்கள் மனதில் விட்டு சென்றார்கள் அந்த ஆறா வடுக்களில் ஒன்றுதான் நடிகை ஶ்ரீவித்யா அமைதியான முகம், அதில் துருவென்று வரும் அந்த அற்புத கண்கள், புன்னகை சிந்தும் உதடு என மிக அற்புதமான அழகு அவர். குறிப்பாக அந்த கண்கள், அது மட்டுமே ஆயிரம் கதைகளை அட்டகாசமாக பேசும் சினிமாவில் வாயினை விட கண்களால் அதிகம் […]

சிதறல்கள்

மாட்டு சாணத்தை நுகர்ந்து கொண்டே மாட்டு மூத்திரத்தை குடித்தால் பெரும் போதை வரும், அதில் இப்படி எல்லாம் எழுத முடியும் பெத்தடின் கொடுக்காத போதை எல்லாம் மாட்டு மூத்திரம் கொடுக்கின்றது [ October 19, 2018 ] ============================================================================ ஜெயம் ரவியின் அடுத்த படம் “அடங்க மறு ” மிஸ்டர் திருமா கேட்டுச்சா , உங்கள் கட்சியின் கொள்கையினை படத்தின் பெயராக வைக்கின்றார்கள் அய்யா ஏன் சத்தமில்லை “அத்து மீறு” என அடுத்த படம் வருவதற்குள்ளாக வந்து […]

ஜமால் கசோக்கி

ராஜதந்திரம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு துருக்கி அட்டகாசமாக செய்திருக்கின்றது அதாவது ஜமால் கசோக்கி எனும் சவுதிக்காரர் அமெரிக்காவில் இருந்து கொண்டு இல்லை வெளிநாடுகளில் இருந்து கொண்டு சவுதி அரசை விமர்சித்து எழுதி பெரும் தலைவலி கொடுத்தார் துருக்கி பெண்ணை மணப்பது தொடர்பாக துருக்கிக்கு வந்த அவர் அங்கிருக்கும் சவுதி தூதரகத்தில் சில ஆவணங்கள் வாங்க சென்றபொழுது பொறிவைத்து பிடிக்கபட்டு கொல்லபட்டார் அந்த நபர் அமெரிக்காவில் இருந்ததால், அமெரிக்க குடியுரிமை கொண்டிருந்ததால் இதை சும்மா விடபோவதில்லை […]

’96’ – திரைப்படம்

96 படம் இன்னும் பார்க்கவில்லை ஆனால் 96 என்றவுடன் அந்த 11ம் வகுப்பு கணக்கு வாத்தியாரும் அவர் நிகழ்த்திய கலவரமும்தான் கண்ணுக்கு வருகின்றது எப்பொழுதுமே தமிழக மாணவனுக்கு 10ம் வகுப்பு வரை ஒரு குழப்பமும் இல்லை, அதனை தாண்டிய பின்னர்தான் உலகம் அவனை குழப்போ குழப்பு என்று குழம்பும், பிஞ்சாகவும் இல்லாமல் முழு பழமாகவும் இல்லாமல் , உலகினை புரிந்தும் புரியாமல், மலர்ந்தும் மலராதா ஒரு பருவம் அது. அப்பொழுதுதான் பலபேரும் வந்து ஆலோசனை சொல்கிறோம், வழிகாட்டுகிறோம் […]

சிதறல்கள்

ஆகமவிதிபடி அர்ச்சகர்கள் நியமிக்கபட வேண்டும் என முன்பு சொன்னதும் உச்ச நீதிமன்றம் ஆகம விதியினை மீறி பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என சொல்வதும் உச்ச நீதிமன்றம் ஆக நீதி என்பது ஒவ்வொரு நீதிபதிக்கும் மாறிகொண்டே இருக்கும் போல.. [ October 18, 2018 ] ============================================================================ ஆக அன்னார் திருமணம் செய்யாமல் இருப்பதிலும் பெரும் ரகசியம் இருக்கலாம் பாவம், எந்த கிழவியினை அன்னார் மிரட்டுகின்றாரோ தெரியவில்லை [ October 18, 2018 ] ============================================================================ கல்வி, செல்வம், […]

நவராத்திரி

பாரதத்தின் பெரும் கொண்டாட்டகாலங்களில் ஒன்றான பூஜை திருவிழாக்கள் உச்ச காலம் இது. துர்கா பூசை,சரஸ்வதி பூசை,ராம்லீலா என சமயம் சார்ந்த சடங்குகளுக்கு ஒருபுறம், தாண்டியா ஆட்டம், தசரா கோலாகல ஊர்வலம் என கொண்டாட்டங்கள் மறுபுறம் பாரதம் கொண்டாடுகின்றது. நான் கொஞ்சகாலமாக இந்தியன் அதற்கு முன்னால் தமிழன், அதற்கு முன்னால் காட்டுமிராண்டி, அதற்கு முன்னால் மனிதனே இல்லை, தமிழனுக்கு மதமே இல்லை என சொல்பவன் எக்காலமும் உண்டு. இதோ வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாடபடும்பொழுது தமிழகத்திலும் விழா கொண்டாடபடுகின்றது, […]

வீரப்பன் – சந்தண கடத்தல்காரன்

அன்று பெங்களூர் மிக மிக பரபரப்பாக இருந்தது, காரணம் மாநில சட்ட ஒழுங்கு பிரச்சினையை காக்கும் பொறுப்பு கூடுதலாக மத்திய அரசின் படைகளும் குவிக்கபட்டிருந்தன, காரணம் 1986ம் ஆண்டின் சார்க மாநாடு பெங்களூரில் நடைபெற்றது, சிங்களர்களின் “ராஜகுரு ஜெயவர்த்தனே” வருகிறார், புலிகளின் தலைவர் பிரபாகரன் சென்னையில் இருக்கிறார், எப்படி இருக்கும் நிலமை? (அடுத்த 5 ஆண்டுகளில் ராஜிவ் கொல்லபட்டபோது பெங்களூரில் குவிந்திருந்த புலிகள் ஏராளம், அந்த அளவிற்கு புலிகள் ஒரு அடைக்கல நகரமாக அதனை மாற்றி இருந்தார்கள்) […]

கவிஞன் கண்ணதாசன்

கண்ணதாசன் வள்ளுவன்,இளங்கோ,கம்பன்,பாரதிக்கு பின் தமிழகம் தந்த மாபெரும் கவிஞன் கண்ணதாசன். முத்தமிழ் அறிஞர் எனும் அடையாளம் அவர் இருவருக்கே பொருந்தும். குளிர்ந்த தென்றல் பூக்களையும் சேர்த்து வீசுவது போன்ற‌ தமிழ் அவருடையது, வாழ்வின் அனைத்து பக்கங்களுக்கும் பாடியவர், எல்லா மதங்களுக்கும் செய்யுள் அமைத்தவர். இன்றும் மலேசிய சிங்கப்பூர் நாடுகளை காணுங்கள், உங்கள் காதில் “அக்கறை சீமை அழகினிலே மனம் ஆடகண்டேனே..” பாடல் தானாக ஒலிக்கும். அரசியலநிலைய பாருங்கள் “ஊதுபத்திக்கும் பீடிகளுக்கும் பேதம் புரியல” எனும் வரிகள் காதில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications