பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பட்டுகோட்டை கல்யாண சுந்தரம்

எல்லா துறையிலும் பிறவியிலே திறமையானவர்கள் உண்டு, அப்படி அல்லாமல் கஷ்டபட்டு தன்னை உருவாக்கியவர்கள் உண்டு , தமிழக கவிஞர்களில் பட்டுகோட்டை கல்யாண சுந்தரம் முதல் வகை, பிறவி கவிஞன் மிக சிறுவயதிலே உலகத்தை கவனித்தவன் அப்பொழுதே கம்யூனிச பொதுவுடமை கருத்துக்கள் அவனை பாதித்தது, தமிழோடும் பொதுவுடைமை தத்துவத்தோடும் வளர்ந்தார் 19 வயதிற்குள் 16 தொழில்களை செய்திருந்தார் விவசாயம் முதல் நடனம் வரை அதில் உண்டு, மீன்பிடியும் உண்டு அவர் எல்லா மக்களின் துயரமும் அறிந்தது அக்காலத்தில்தான், அதுதான் […]

சிதறல்கள்

தமிழ்நாடு பெரும் ஊழலில் இருப்பதாக சொல்கின்றார் ஆளுநர், இந்த மாநிலத்தின் உச்ச தலமை மாநிலத்தில் லஞ்சம் ஊழல் பெருகினால் மத்திய அரசுக்கு அதை கலைக்க சொல்லி அறிக்கை அனுப்பும் பொறுப்பும் உரிமையும் அவருக்கே இருக்கின்றது ஆனால் அவரோ சாலையோரத்தில் அழுது புலம்பும் சராசரி மனிதனாக புலம்பிகொண்டிருப்பதுதான் எரிச்சலை கொண்டு வருகின்றது முக ஸ்டாலின் இது ஊழல் பெருகிய ஆட்சி என ஆதாரங்களை கொடுத்தபின்னும் ஆளுநர் கமுக்கமாக இருந்துவிட்டு இப்பொழுது அழுகின்றார் ஆளுநரின் கவலை நியாயமானதென்றால் அவர் மத்திய […]

சிதறல்கள்

பொதுவாக பொது இடங்களில் காமராஜர் கோபபடுபவர் அல்ல, ஆனால் சில விஷயங்களை அவர் பதவியிழந்த பின் பேசும்பொழுது கலைஞரால் பொறுக்க முடியாமல் காமராஜர் முதல்வர் பதவி மேல் ஆசைபட்டு பேசிகொண்டிருக்கின்றார் என சொல்லிவிட்டார் இதுபற்றி பத்திரிகையாளர்கள் காமராஜரிடமே கேட்க சட்டென்று சொன்னார் காமராஜர் “அந்த கருணாநிதி எல்லாம் முதல்வராக அமர்ந்தபின் அந்த நாற்காலிக்கு நான் ஆசைபடுவேனாண்ணேன்?” என சொல்லிவிட்டு சென்றுவிட்டார் காமராஜர் என்ன அர்த்தத்தில் சொன்னார் என்பது தெரியாது, இப்பொழுது இந்த பன்னீர் செல்வமும் அம்மாதிரி பேச […]

அற்புத மனிதர் வள்ளலார்

தமிழகத்தில் எப்பொழுதாவது அற்புதமான மகான்கள் தோன்றுவார்கள், அப்படி தோன்றிய அற்புத மனிதர் வள்ளலார் தத்துவத்தில் அவர் புத்தர், போதனையில் இயேசு கிறிஸ்து, வாழ்க்கையில் அவர் விவேகானந்தர், பசித்தவருக்கு உணவழிப்பதில் அவர் குருநாணக் என எல்லோர் கலவையும் அந்த மகானிடம் இருந்தது சுருக்கமாக சொன்னால் எல்லா மதத்தின் மிக உயர்ந்த கருத்துக்களும் கலந்து பிறந்த அவதாரம் அவர் இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் திரட்டு, திருவருட்பா என்று அழைக்கப்படுகிறது. இது ஆறு திருமுறைகளாக பகுக்கப்பட்டு உள்ளது. உலகின் எல்லா […]

எஸ் 400 பாதுகாப்பு முறை

உள்நாட்டு நிர்வாகத்தில் மோடி சொதப்பிய இடங்கள் உண்டு, பெட்ரோல் விலையே சாட்சி ஆனால் உலக அரங்கில் நேரம் பார்த்து அடித்துவிட்டார், நிச்சயம் புட்டீனுடனான ஒப்பந்தம் இந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல். அதுவும் இந்த பரபரப்பான காலகட்டத்தில் அது மோடியின் வெற்றி ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகனைகனை தடுப்பு சாதனத்தை வாங்கினால் இந்தியா மேல் பொருளாதார தடை என மிக பகிரங்கமாக மிரட்டியும் இந்தியா வாங்கிவிட்டது இது போக ரஷ்யாவுடன் கூட்டு ராணுவபயிற்சியிலும் இறங்கிவிட்டது அமெரிக்காவிற்கு கடும் ஆத்திரம் சந்தேகமில்லை. […]

சிதறல்கள்

வைரஸ் தாக்கிய போலியோ மருந்து: தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டது; உரிமையாளர் கைது தெலுங்கானா, டெல்லி போன்ற சில பகுதிகளில் போலியோ சொட்டுமருந்து கொடுக்கபட்ட குழந்தைகளுக்கு விசித்திர நோய் தாக்கியதால் மருந்து சோதிக்கபட்டது, அதில்தான் இந்த வைரஸ் இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்கள் பச்சிளம் குழந்தைகளை போலியோவில் இருந்து காக்க கொடுக்கபடும் மருந்து உயிரை எடுப்பது பெரும் கொடுமை. இந்த ஆலை எங்கே இயங்கி இருக்கின்றது என்றால் உபியில் இயங்கி இருக்கின்றது, இப்பொழுது சீல் வைத்திருக்கின்றார்கள் அது என்ன பாவமோ, சாபமோ […]

சோ ராமசாமி

சோ ராமசாமி நகைச்சுவை நடிகர், நடிகர்களில் முதன் முதலாக அரசியலை சினிமா காட்சிகளில் போட்டு வறுத்தெடுக்கும் பாணியினை எம்.ஆர் ராதா தொடங்கி வைத்தாலும், பின்னாளில் அதனை உச்சமாக்கினவர் சோ ராமசாமி அவர்தான் தொடங்கி வைத்தார் கட்டுகடங்காத பொய்களும், இன்னும் பலவிதமான ஏமாற்றுவேலைகளும் பெருகிய காலத்தில் அவர் குரல் உண்மையினை ஓங்கி ஒலித்தது காங்கிரஸ் அவருக்கு பிடிக்காது எனினும், காமராஜருக்கு அவர் பக்கபலமாக நின்றதை மறுக்கமுடியாது. இவ்வளவிற்கும் காமராஜர் சோவின் நாடகங்களை தடை செய்த காலமும், அதை எதிர்த்து […]

சுப்பிரமணிய சிவா

சுப்பிரமணிய சிவா அவர் பெயர் சுப்பராமன், ஆனால் பேசிவிட்டால் சிவ நடனம் போல பேச்சில் தாண்டவம் இருக்கும் அதனால் சிவம் என்றழைக்கபட்டார்,சுப்புராமன் சிவம் என்பது பின்னாளில் சுப்பிரமணிய சிவா ஆயிற்று தமிழகம் தந்த மாபெரும் தியாகி அவர். மிக சிறந்த மேடை பேச்சாளர், இந்துமதத்தின் மீது அபார பற்றுகொண்டவர். காந்திக்கு முந்தைய காலத்தின் தியாகி சுதந்திர போராட்டத்தில் காந்தியின் வருகை முக்கியமெனினும் இவர் போன்ற தியாகிகள் ஏற்றிவைத்த நெருப்பைத்தான் காந்தி பெரிதாக்கினார் என்பதில் அய்யமில்லை. சுப்பிரமணிய சிவா […]

சிதறல்கள்

சாதியினை வைத்து சம்பாதிப்பது என முடிவுசெய்துவிட்ட இயக்குநர் ரஞ்சித் என்பவர் ஒரு விஷயத்தை சொல்லி வாங்கி கட்டிகொண்டிருக்கின்றார் அதாவது அன்னாரின் நீலம் புரொடக்ஷனின் “பரியேறும் பெருமாள்” படத்திற்கு தியேட்டர்கள் நிறைய இல்லையாம், சாதி ரீதியாக இவர் படத்தை தடுக்கின்றார்களாம் இப்படி அன்னார் தன் புரட்சி மொழியினை சொல்ல, திரைப்பட உரிமையாளர் சங்கம் பொங்கிவிட்டது “இந்த கபாலி, காலா எல்லாம் வரும்பொழுது எல்லா தியேட்டரும் சாதி பார்த்தா திறந்தோம்? அப்பொழுது எவ்வளவு சிறிய பட்ஜெட் படங்கள் தியேட்டர் கிடைக்காமல் […]

பெர்லின் சுவர்

இரண்டாம் உலகபோரில் பெரும் தோல்வி கண்டது ஜெர்மனி, அதன் பின் இரு நாடுகளாக பிரியும் படி கத்திவீசபட்டது. மேற்கு ஜெர்மன், கிழக்கு ஜெர்மன் என பிரிக்கபட்டது. ஒன்றிற்கு அமெரிக்காவும் இன்னொன்றிற்கு சோவியத்தும் பொறுப்பேற்றன‌ பிரமாண்ட பெர்லின் சுவரும் கட்டபட்டது மேற்கில் முதலாளித்துவமும், கிழக்கே கம்யூனிசமும் கொள்கையாக்கபட்டன‌ ஆனால் மக்கள் ஜெர்மானியர்களாகவே உணர்ந்தனர், வாய்ப்புக்காக காத்திருந்தனர். சோவியத் உடைய மக்கள் எழுந்தனர் கிட்டதட்ட 45 வருட பிரிவினை இணைத்தனர், அந்த சுவரும் உடைபெற்றது வரலாற்றில் பிரிக்கபட்ட நாடு இணைந்த […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications