பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

கலைவாணரை பற்றி நிறைய எழுதலாம்

கலைவாணரை பற்றி நிறைய எழுதியாகிவிட்டது ஆனாலும் அவரின் சுபாவம் மறுபடி மறுபடி நினைவுக்கு வருகின்றது அவர் கார் விபத்துகுள்ளாகி சரிகின்றது, சாவகாசமாக எழும்புகிறார் கலைவாணர், சுற்றி பார்க்கின்றார். காரிலிருந்து விழுந்த ஆரஞ்சு பழம் சிதறிகிடக்கின்றது, டிரைவரை எழுப்பி அவருக்கு 2 சுளை கொடுத்துவிட்டு சாலையோரமாக அமர்ந்து பழம் சாப்பிடுகின்றார் பின்னால் வந்த வாகனம் ஒன்று நிற்கின்றது, அலறி அடித்து ஓடி உதவ வந்தவர் என்ன ஆயிற்று என கேட்கின்றனர், பதற்றமே இன்றி சொல்கிறார் கலைவாணர் “அது ஒண்ணுமில்லீங்க..காரை […]

இணையம் என்பது சுவாரஸ்யமான களம்.. அதில் முகநூல் என்பது சிலிக்கான் பூங்கா

இணையம் என்பது சுவாரஸ்யமான களம், அதில் முகநூல் என்பது சிலிக்கான் பூங்கா யாரெல்லாமோ வருவார்கள் போவார்கள், நண்பர்கள் கிடைப்பார்கள் திடீரென காணாமல் போவார்கள். சில பூக்கள் இருக்கும் தேள்கள் இருக்கும், அமைதியாக சில முதலைகளும் இருக்கும் இங்கு பொழுது போக்காக வந்து பார்த்துவிட்டு போய்விட வேண்டும், நமக்கு கொடுக்கபட்ட சுவரில் ஏதும் கிறுக்கலாம் , அதை பார்த்து சிலர் கருத்து சொல்லலாம் அத்தோடு முடித்துவிட வேண்டும். அதுதான் நல்லது. மாய உலகினை போலவே, இணையமும் மகா மாயமானது. […]

தரகுறைவாக சைமன் பேசுவதை ஏற்க முடியாது

மறைந்த ஜெயலலிதா மேல் ஆயிரம் சர்ச்சை இருக்கலாம், ஆனால் அவரை தரகுறைவாக சைமன் பேசுவதை ஏற்க முடியாது சாட வேண்டுமானால் அங்கிள் சைமன் எப்படி சாட வேண்டும்? ஜெயா ஒன்றும் போராளி அல்ல, நிச்சயம் தியாகியும் அல்ல‌ ஆனால் அவர் வந்தது சினிமா மூலம், சினிமாவே அவருக்கு அடையாளம் கொடுத்தது, அந்த பிரபலத்தை அவர் கட்சிக்கு பயன்படுத்தினார் அங்கிள் சைமன் சாடவேண்டுமென்றால் சினிமா மோகத்தை சாடட்டும், சினிமாவே தமிழன் சீரழிவுக்கு காரணம் என்ற உண்மையினை சொல்லட்டும் சொல்வாரா? […]

நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன்

கலைகளுக்கும் தமிழுக்கும் பெயர் பெற்ற தென்னகத்தில் அதற்கு அடையாளமாய் பலர் உண்டு அங்கிருந்து பலர் வந்தாலும் தனித்து அடையாளிமிட்டவர் என்.எஸ். கிருஷ்ணன். நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். வடசேரி பக்கம் மளிகை கடைகளில் பணியாற்றிவர், டென்னிஸ் கோர்ட்டில் எடுபிடி, பின் வில்லுபாட்டு கலைஞன் அதன் பின்புதான் நாடக கம்பெனி நடிகன் தமிழ் திரையுலகம் பேசா படங்களிலிருந்து, பேசும் படங்கள் வந்த காலத்தில் அவர் நாடக கம்பெனியில் இருந்து சினிமாவிற்கு வந்தார். அக்காலத்தில் எம்ஜிஆர், கலைஞர் அறிமுகமான காலமது, அப்பொழுதுதான் […]

நாட்டுபற்றை வளர்க்க திமுக என்ன செய்தது?

நாட்டுக்கு திமுக என்ன செய்தது என்றால், அது சமூக நீதி காத்தது என சொல்லி சீறுகின்றார்கள் சர்ச்சையான ஆர்,எஸ்.எஸ் கூட சீனப்போரிலும், வங்கபோரிலும் எல்லையில் சென்று ஏதோ செய்தது, முடிந்த‌ சேவையினை செய்தது ஆனால் திமுக போன்ற கட்சிகள் என்ன செய்தது என்றால், அதே பதில்தான் இது சமூக நீதிகாத்த இயக்கம் பெரியார் என்ன அடுத்த நாட்டு நீதியினையா காத்தார்? அவர் அரசியலுக்கா வந்தார்? அரசியலுக்கு வராமல் சமூக நீதியினை காக்க முடியாதா என்றால் நீ சங்கி […]

தமிழகம் இந்த மராட்டியர்களை போல் சிந்திக்கவில்லை என்பதுதான் ஆறுதல்

1818ம் ஆண்டு தங்கள் ராஜ்யத்தை விஸ்தரித்த ஆங்கிலேயர்கள் தமிழகம், வங்கம் என பிடித்துவிட்டு மராத்தியர் சரிந்த காலங்களில் அங்கும் கால்பதித்தனர் எங்கு சென்றாலும் சொந்த படையோடு வென்றவன் அல்ல ஆங்கிலேயன், இங்குள்ள மக்களையும் படையில் சேர்த்தே சண்டையிடுவான் தமிழகம், வங்கம், பீகார் எல்லாம் இதே வேலைதான், அப்படியே மகராஷ்டிரம் பக்கம் கொஞ்சம் உள்ளூர் மக்களை சேர்த்து மராட்டிய ஆளும் வர்க்கத்தை வென்றான் அங்கு ஒரு நினைவு தூணும் உண்டு, கோரேகான் என்பது அந்த இடம் இது கர்நாடக […]

இந்த திரிபுரா முதல்வர் இப்படி சிக்குவது புதிதல்ல

வாத்து மூளைகாரன் எல்லாம் பிஜேபியில் இருப்பது கொடுமை அல்ல, அதில் சிலர் முதல்வராய் இருப்பதுதான் கொடுமை குடிநீர் வழங்கும் அணை எல்லாம் இனி வாத்து நீந்துமாம், பிரதமர் மோடி கூட வாத்து நீந்திய நீரினைத்தான் இனி குடிப்பாராம் ஆனால் தைவான் வாத்து மட்டுமே நீந்த வேண்டும் என அவர் கேட்காமல் இருந்தால் நல்லது மாட்டு பாசத்தை தொடர்ந்து வாத்து பாசம்.. அடுத்து என்ன பாசமோ நிச்சயமாக மனிதர்கள் மேலாக மட்டும் இருக்கவே இருக்காது இந்த திரிபுரா முதல்வர் […]

ரஜினி மேல் இவர்களுக்கு ஒரே பயம்

ரஜினி மேல் இவர்களுக்கு ஒரே பயம் என்னவென்றால் அவர் தேசியவாதி, இவர்கள் திராவிட பிரிவினை கோஷ்டி அதனால் அவரை இவர்களுக்கு பிடிக்காது உண்மையான தேசாபிமானிகளை இந்த கருப்பு சட்டைக்கோ இல்லை கருப்பு சிகப்பு கோஷ்டிகளுக்கோ எப்பொழுது பிடித்தது? கேட்டால் பெரியார் மண் என்பார்கள், அந்த மண்ணை 16 ஆண்டுகாலம் பிராமணத்தி ஜெயா ஆண்டார், பெரியார் மண்ணின் அந்த பெரும் அவமானத்தை மட்டும் சொல்லவே மாட்டார்கள்

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி பெரும் வருத்தமானது நிச்சயம் கலைஞரை பிரிந்த நம் எல்லோரின் வலியினை விட அவரின் வலி பெரிது, கடுமையானது அம்மையார் நலம் பெற்று வரட்டும், கலைஞரின் உடல்நலத்தை நீண்டநாள் காத்து நின்றதில் பெரும் பங்கு அவருடையது அந்த ஆணிவேரில்தான் கலைஞர் எனும் சகாப்தம் இயங்கிகொண்டிருந்தது கலைஞரின் மனைவி என்றாலும் வீட்டை தாண்டி எங்கும் கலைஞரோடு சென்றவரும் அல்ல, கட்சி அலுவலகம் கூட வந்தவருமல்ல‌ வீண் சர்ச்சைகளில் சிக்கியவருமல்ல, கட்சி, அரசியல் […]

“நீறு இல்லா நெற்றிபாழ்” என்றவன் தமிழன்

“நீறு இல்லா நெற்றிபாழ்” என்றவன் தமிழன் அதாவது திருநீறு எப்பொழுது நெற்றியில் இருக்க வேண்டும் என்பது இந்துக்கள் தர்மம். அது இந்து கலாச்சாரமாகவும் இருந்தது, தமிழனும் இந்து என்பதால் அது அவனுக்கும் முக்கியமாய் இருந்தது அது உண்மையில் சொல்வதென்ன? மனித வாழ்வு சாம்பலாக முடிய கூடியது, இறுதியில் சாம்பலாக கூடிய உடல் இது. இதில் துளியும் ஆணவமோ அகங்காரமோ தலை தூக்க கூடாது என்பது விபூதி தத்துவம் இதுதான் இதனால்தான் அதை நெற்றியில் எப்பொழுதும் வைக்க சொன்னது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications