பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பொருளாதாரத்தை மீட்டுள்ளோம்: பிரதமர் சுதந்திர தின உரை

ஆபத்தான நிலையில் இருந்த பொருளாதாரத்தை மீட்டுள்ளோம்: பிரதமர் சுதந்திர தின உரை எந்த நாட்டு பொருளாதாரம் என சொல்லவில்லை,ஒருவேளை அமெரிக்க பொருளாதாரமாக இருக்குமோ? இதெல்லாம் அம்பானி தன் அலுவலத்தில் சொல்ல வேண்டிய விஷயம், இவர் ஏன் செங்கோட்டையில் சொல்லி கொண்டிருகின்றார் நாட்டு பொருளாதாரம் நாசமான நிலையில், உலகளவில் இந்திய பொருளாதார நிலை கீழிறங்கிவிட்ட நிலையில், வளரும் நாடு எனும் அந்தஸ்தை இந்தியா இழந்துவிட்ட நிலையில் எப்படிபட்ட பொய் இது? இதற்கு பதிலாக பாபர் மசூதியினை பாஜகவும் அதன் […]

அரவிந்த கோஷ் பிறந்த நாள்

அவர் பெயர் அரவிந்த கோஷ், வங்காளாத்துக்காரர். முதலில் நல்ல படிப்பாளி லண்டன் எல்லாம் சென்று படித்தார் பின் சுதந்திர போராட்டத்தில் குதித்தார், வங்க பிரிவினை காலங்கள் அவரின் போராட்டத்திற்கு அணல் சேர்த்தன, ஆனால் வெள்ளையரின் கடும் கட்டுபாடுகள் அவருக்கு தடையிட்டன‌ ஒரு வழக்கில் சிக்கி சிறையில் இருந்தபொழுதான் ஆன்மீகபக்கம் திரும்பினார், ஆன்மீகவாதி ஆனார் வங்கத்தில் அவருக்கு கட்டுபாடுகள் அதிகம் என்பதால் அருகிருந்த சந்திரநாகூருக்கு தப்பினார், அது பிரென்ஞ் பகுதி அங்கு தங்கி இருந்தபொழுதுதான் ஆன்மீகத்தை முழுக்க தழுவி […]

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தேவமாதா பரலோக மாதா

கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் தேவமாதா வழிபாட்டில் நிறைய மாதாக்கள் உண்டு, இப்பொழுது பார்க்கபோவது பரலோக மாதா. அதாவது இயேசுவின் தாய் மரியாள் அப்படியே பரலோகம் ஏறி சென்றார் என்பது அவர்கள் நம்பிக்கை. இன்றும் மரியாளுக்கு கிறிஸ்து போலவே கல்லறை ஏதுமில்லை, அவர் விண்ணகம் ஏறி சென்ற நிகழ்வு ஆகஸ்ட் 15ம் தேதி நடந்ததாக கத்தோலிக்க கிறிஸ்தவம் சொல்லிவிட்டதால், அந்நாளில் பரலோக மாதா திருவிழாக்கள் கொண்டாடபடும் தமிழகத்தில் இரு ஆலயங்கள் பரலோக மாதாவிற்கு பிரசித்தி பெற்றவை, பாரம்பரியம் மிக்கவை முதலாவது […]

நமக்கெல்லாம் ஏதுங்க சுதந்திரம்?

“நமக்கெல்லாம் என்னங்க சுதந்திர தின வாழ்த்து சொல்ற உரிமை இருக்கு? அன்றைக்கும் அடிமைகள் தான், இன்றைக்கும் அடிமைகள்தான். நாளையும் கண்டிப்பாக அதே அடிமைகள்தான் நமக்கெல்லாம் ஏதுங்க சுதந்திரம்?”

அழகிரியினை விரட்ட அன்பழகனை தொடர்ந்து வீரமணி வந்திருக்கின்றார்

திமுகவில் கலைஞர் சில விஷயங்களுக்கு பல்ஸ் பார்ப்பதற்காக இந்த அன்பழகன், ஆற்காடு வீராசாமி, வீரமணி மூலம் சில கற்களை வீசுவது அவரின் தந்திரம் இப்பொழுது அதே பாணியில் அழகிரியினை விரட்ட அன்பழகனை தொடர்ந்து வீரமணி வந்திருக்கின்றார் இந்த வித்தை மற்றவருக்கு புரியாவிட்டாலும் திமுக குடும்பமான அழகிரிக்கும் அவர் மகனுக்கும் புரியாதா? பாம்பின் கால் பாம்பறியும், வம்பின் மூலம் வம்பு அறியும் அப்படி அழகிரிக்கு புரிந்திருக்கின்றது, எப்படி திருப்பி அடிக்க வேண்டும் எனவும் தெரிந்திருக்கின்றது, போய்யா எச்சி சோறு […]

ஸ்டாலினின் வலியினை விட ராகுலின் வலி நிச்சயம் பெரிது

“நீங்கள் தலைவனை இழந்திருக்கின்றீர்கள் , நான் தலைவனோடு தந்தையினையும் இழந்திருக்கின்றேன்” : செயற்குழுவில் மு.க ஸ்டாலின் உருக்கம் உருக்கமான வார்த்தைகள், அந்த வலி நிச்சயம் பெரிது ஆனால் இதே வார்த்தைகள் ராகுல் காந்திக்கும் சால பொருந்தும் கலைஞரின் நிறைவாழ்வு மரணத்திற்கும், ராஜிவின் கொடூர மரணத்திற்கும் வித்தியாசம் நிச்சயம் உண்டு ஸ்டாலினின் வலியினை விட ராகுலின் வலி நிச்சயம் பெரிது, காங்கிரசாரின் வலியும் அப்படியே ஆனால் இதே ஸ்டாலின் தான் ராஜிவ் கொலையாளிகளை விடுவிக்க வேண்டும் என அடிக்கடி […]

தாயின் மணிக்கொடி பாரீர்…..

“”தாயின் மணிக்கொடி பாரீர்,  அதை தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்” 200 ஆண்டுகால போராட்டம், அடித்து கேட்டு பின்னர் அமைதியாய் கேட்டு, அடி வாங்கி போராடி, ஒரு கட்டத்தில் வெள்ளையனுக்கும் மாபெரும் சிக்கல் ஏற்பட்டு சுதந்திரம் கிடைக்கும் நேரத்தில் கூட வஞ்சகமாய் உடைக்கபட்டு 2 துண்டுகளாக பிரிக்கபட்டு சிதைக்கபட்டது சுதந்திர இந்தியா பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான் வெள்ளையன் அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற […]

இந்த Benitto Kumar என்பவர் யார்?

இந்த Benitto Kumar என்பவர் யார்? ஏன் அவரை இன்னும் விட்டு வைத்திருக்கின்றாய் என பலர் கேட்டுகொண்டே இருக்கின்றார்கள் அவர் நமது உறவினர், நாம் பள்ளியில் படிக்கும்பொழுது அவர் கல்லூரியில் படித்தவர். அந்த சிறிய கிராமத்தில் அவர் எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன் நிறைய வாசிப்பவர், சிறுகதைகள் எல்லாம் அப்பொழுதே எழுதியவர். ஒருமுறை பிரபல பத்திரிகையில் அவர் கதைக்காக அப்பொழுதே 10 ஆயிரம் பரிசு கிடைத்திருந்தது எல்லாவற்றிற்கும் மேல் எம்.காம் படிப்பில் மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் அன்றே தங்கபதக்கம் பெற்றவர் அதெல்லாம் […]

உட்கட்சி குழப்பத்திற்கும், குடும்ப சண்டைக்குமா மோடி பெயரை இழுக்க வேண்டும்?

ஒரு கும்பல் இந்த மோடியும் அமித்ஷாவும் அழகிரியினை தூண்டி விடுகின்றார்கள் என சொல்லிகொண்டிருக்கின்றன‌ அழகிரி என்பவர் வைகோ பிரிவினை தொடர்ந்து கட்சிக்குள் வந்தவர், மோடியா கொண்டுவந்தார்? தா.கிருட்டினன் கொலையில் மோடியா தப்புவித்தார்? இன்னும் ஏராளமான சர்ச்சைகளில் அழகிரி சிக்கும்பொழுது மோடியா காத்தார்? தினகரன் பத்திரிகை அலுவலகத்தை மோடியா எரிக்க சொன்னார்? அவரா கருத்துகணிப்பு நடந்த்த சொன்னார்? இந்த அட்டாக் பாண்டி, பொட்டு சுரேஷ் எல்லாம் டெல்லியிலிருந்தா மதுரைக்கு வந்தார்கள்? கட்சிக்குள் அழகிரியினை இழுத்தது கலைஞர், அவரை வைத்து […]

ஜெயக்குமார் நம்மை ஏமாற்றவில்லை

நேற்றே சொன்னோம், ரஜினி எடப்பாடியினை சீண்டுகின்றார், நாளை ஜெயக்குமார் சும்மா பறந்து பறந்து பேட்டி கொடுப்பார் என சொன்னோம் ஜெயக்குமார் நம்மை ஏமாற்றவில்லை, நாம் சொன்னது போலவே லவுடு ஸ்பீக்கரில் வந்து ரஜினியினை கிழித்துகொண்டிருக்கின்றார் கருணாநிதி, ஜெயா இல்லாத இடத்தை நடிகர்களால் நிரப்ப முடியாது : தமிழிசை அக்கா ஒரு விஷயத்தை மறந்து கவலைபடுகின்றார் ஜெயா என்பவர் ஒரு நடிகை, நடிகையின் இடத்தை இன்னொரு நடிகனோ நடிகனோ எளிதாக நிரப்பலாம் கருணாநிதி அட்டகாசமான வசனகர்த்தா, அரசியலுக்கும் மிக […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications