பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பகவத் கீதை 6ம் அத்தியாயம்

அர்ஜூனனுக்கு மேற்கொண்டு யோக சந்நியாச தன்மையினை போதிக்கும் இந்த ஆறாம் அத்தியாயமே “ஆத்மஸம்யம யோகம்” கண்ணன் சொல்கின்றான், “அர்ஜூனா சந்நியாஸி என்பவன் யார்? எவனொருவன் கர்ம பலனில் பற்றில்லாமல் செய்ய வேண்டிய கர்மங்களைச் செய்கிறானோ அவனே ஸந்நியாசி. அவனே யோகி . யாகத்தில் அக்கினியைப் பற்ற வைக்காததாலோ, கர்மங்களைத் துறந்ததாலும் ஒருவன் ச‌ந்நியாசி ஆக மாட்டான். அர்ஜூனா., ஸந்நியாசமென்று எதைச் சொல்லுகிறார்களோ அதையே யோகமென்று அறிவாயாக.கர்ம பலனைப் பற்றிய எண்ணத்தைத் துறக்காதவன் யோகி ஆகமாட்டான். யோகநிலையில் முன்னேற […]

சார்லஸ் சாப்ளின்.

ஆயிரம் புத்தகங்களை எழுதுவதை விட பல்லாயிரம் வார்த்தைளைவிட வலிமையானதும் நிலைத்து நிற்பதும் காட்சி படுத்துதல் எனும் அழுத்தம். அது கொடுக்கும் அழுத்தத்தை வேறு எதுவாலும் கொடுக்க முடியாது அந்த மனிதன் இடத்தில் யார் இருந்தாலும் ஒன்று சமுக விரோதி ஆகியிருப்பார்கள் இல்லை அழிந்து போயிருப்பார்கள் ஆனால் வலி எல்லாம் தாங்கி வளர்ந்து நின்றான் அவன். வளர்ச்சி என்றால் அபார வளர்ச்சி, இன்றும் மனிததன்மையுள்ள மானிடநேயமிக்க கலைஞனுக்கு அவனே எடுத்துகாட்டு. ஆயிரம் எழுத்தாளர்கள் எழுதவேண்டிய காரியத்தை , தொழிலாளி […]

பகவத் கீதை- 5

அர்ஜூனக்கு கர்ம யோகமும் ஞான யோகமும் விளங்கிற்று, அவனை பொறுத்தவரை கடமையினை செவ்வனே செய்து கடவுளை காண்பது எல்லாவற்றுக்கும் கடவுளே காரணம் என நினைத்து அமைதி கொள்வது கர்மயோகம், கடவுளை சரணைந்து அவரிலே இளைவது ஞான சந்நியாக யோகம் இதில் குழம்பிய அர்ஜூனன் கேட்கின்றான், “கண்ணா, கர்மங்களைத் துறந்து விடு என்கிறாய். மேலும் கர்ம யோகத்தைப் பற்றியும் சொல்கிறாய். இவ்விரண்டிலும் எது உயர்ந்ததோ, அந்த ஒன்றைப் பற்றிச் சந்தேகத்திற்கு இடமில்லாமல் முடிவு செய்து எனக்குச் சொல், நான் […]

பகவத் கீதை 4ம் அத்தியாயம்

கர்மயோகத்தை கேட்ட அர்ஜூனன் , கண்ணன் தன்னை போரில் ஈடுபட மட்டும் தூண்டுவதாக எண்ணி குழம்பியிருந்தான், இதை அறிந்த கண்ணன் 4ம் அத்தியாயத்தில் தொடர்கின்றான் “அர்ஜூனா இந்த‌ யோகத்தை நான் சூரியனுக்குச் சொன்னேன், சூரியன் மனுவிற்குச் சொன்னான் ,மனு இக்ஷ்வாகுவிற்குச் சொன்னான், இந்த யோகம் பரம்பரை பரம்பரையாக சொல்லபட்டது, அரசர்களும் ரிஷிகளும அதை அறிந்திருந்தார்கள், பின் இந்த யோகம் வெகு காலமாக மறைந்து போய் விட்டது. நீ என் சீடனும் என்னை சரணடைந்தவனுமாய் இருகின்றாய் அதனால் இந்த […]

சித்திரை விஷூ வாழ்த்துக்கள்.

தமிழர் புத்தாண்டு அதுவுமாக தமிழருக்கு கோவிலுக்கு செல்ல வழியில்லை, எல்லா ஆலயங்களும் பூட்டியிருக்கின்றன‌ அதனால் என்ன? மரத்தடி பிள்ளையார் முதல் கல்லில் இருக்கும் கருப்பசாமி வரை ஏன் வீதியெல்லாம் ஆலயங்களை அமைத்தார்கள் என்பதன் பொருளை இந்துக்கள் உணர்ந்து கொண்டிருக்கின்றனர் ஆலயம் பூட்டியே இருக்கட்டும், அட வீதியினை விட்டு வெளியே வர வேண்டாம், கூடி பிரார்த்திக்கும் அவசியமில்லை. மரத்தடி போதும் அதில் இருக்கும் பிள்ளையார் போதும் , கல் போதும். கையில் இருக்கும் சூடம் போதும் அதுவுமில்லை என்றால் […]

பகவத் கீதை-3

கண்ணன் யோகியாக மாறி கடமையினை விருப்பு வெறுப்பின்றி செய் என சொன்னதும் அர்ஜூனன் மனதை மறுபடி மயக்கமேகம் மூடுகின்றது, அவன் தடுமாறி கேட்கின்றான், “கண்ணா, பெரும் யோகியாக இருக்கும் ஒருவனால் இந்த போர் எனும் படுபயங்கர கர்மத்தை செய்யமுடியுமா? நீ அதற்கு என்னை தூண்டலாமா?” “அர்ஜூனா யோகங்கள் பலவகை, நான் உனக்கு கர்ம யோகத்தை பற்றி சொல்கின்றேன். ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் ஏற்றுகொண்ட கடமையே கர்மம், அவன் அதற்காகவே படைக்கபட்டிருகின்றான். அதை அவன் ஒரு யோகிக்குறிய மனநிலையில் […]

வைக்கம் போராட்டம் .

வைக்கம் போராட்டம் என்பது வேறொன்றும் அல்ல, இந்த திராவிட கோஷ்டி திராவிட பூமி என சேர்த்து கொண்டாலும் தங்களை எக்காலமும் மலையாளிகளாக கருது திருதாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கும் ஒரு ஊர், அங்கிருக்கும் கோவில் ஒரு சிவன் ஆலயம் பொதுவாக கேரளாவில் கிருஷ்ண வழிபாடும் , சக்தி வழிபாடும் அதிகம். இந்த சிவன் கோவில் தனித்து இருந்தது குருவாயூர், சபரிமலை போல பெரும் பெயர் அதற்கு இல்லை எனினும் பரசுராமன் தொடர்புடைய ஆலயம் அந்த ஆலயத்து தெருக்களில் தாழ்த்தபட்ட […]

ஜாலியன் வாலா பாக்.

அக்காலகட்டம் வெள்ளை அரசு ஆடிகிடந்தது, காரணம் 1917 அதாவது 1919ன் ஈராண்டுகளுக்கு முன்னர்தான் ஜார் மன்னனை வீழ்த்தி புரட்சியாளன் லெனின் ரஷ்யாவில் ஆட்சி அமைத்திருந்தார், அது உலகெங்கும் உரிமைக்காக போராடும் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டிற்று, ஏகாதிபத்தியம் அச்சமுற்ற நேரம். உலகின் சரிபாதியினை ஆண்டுகொண்டிருந்த ஏகாதிபத்திய ஆங்கிலேயன் அச்சமுற்று, இதனை தடுக்க ரவுலட் என்பவர் தலமையில் குழுபோட்டு ஆலோசித்தான், முடிவில் அது சட்டமாயிற்று. கொடுமையான சட்டம் அது, “ம் என்றால் சிறைவாசம், ஏன் என்றால் வனவாசம்.” என்ற வசனத்தின் […]

கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்க்ய யோகம்.

கீதையின் இரண்டாம் அத்தியாயம் ஸாங்க்ய யோகம். ஸாங்கியம் என்றால் இல்லாத ஒன்றுக்கும் இருக்கும் ஒன்றுக்குமான தொடர்பினை சொல்லும் தத்துவம் குழம்பி தவிக்கும் அர்ஜூனனிடம் மெல்ல கேள்விகளை எழுப்புகின்றான் கண்ணன் “அர்ஜூனா இம்மாதிரி குழப்பங்கள் உனக்கு வந்ததே இல்லையே, இது உனக்கு சிறப்பை தராது, உயர்ந்த லட்சியத்தில் உள்ளவனுக்கு இக்குழப்பம் வீழ்ச்சியினை கொடுக்கும், இந்த பலவீனத்தை தள்ளிவிட்டு எழு” அர்ஜூனன் குழப்பத்தின் உச்சியில் சொல்கின்றான் “அவர்கள் அயோக்கியராயினும் பெரியவர்கள், அவர்கள் ரத்தத்தில் நான் வென்று ஆகபோவது ஒன்றுமில்லை, என்னால் […]

தந்தை சாவுக்கு பழி தீர்த்திருக்கின்றார் ஷேக் ஹசீனா.

வங்கதேச முன்னாள் ராணுவத்தாரான மஜீத் என்பவருக்கு தூக்கு நிறைவேற்றபட்டிருக்கின்றது அவர் இப்போதைய வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையும் வங்கதேச விடுதலை வீரருமான‌ முஜிபுர் ரகுமான் கொலையில் சம்பந்தபட்டவர் வங்கதேச போர் ஏற்பட ரகுமானே காரணம், அவரின் முக்திவாஹினி படை பாகிஸ்தானுடன் மோதி, அவர்களுக்கு ஆதரவாக இந்திய ராணுவம் களமிறங்கியே வங்கம் உருவாயிற்று ஆனால் முஜிபுர் ரகுமான் 1975ம் ஆண்டு சுட்டு கொல்லபட்டார், அவர் குடும்பமே கொல்லபட்டது. உலகிலே ஒரு நாட்டின் தலைவர் வீடு தாக்கபட்டு […]