பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஸ்டாலின் சும்மாதான் திருவரங்கம் பக்கம் சென்றார்

ஸ்டாலின் சும்மாதான் திருவரங்கம் பக்கம் சென்றார், அதற்குள் நீ என்னவெல்லாமொ எழுதிவிட்டாய், அவர் நெற்றி குங்குமத்தை அழித்த பொற்காட்சி கண்டாயா? ஏ ஆரிய அடிவருடி , இத்தோடு நிறுத்திகொள் என பல உபிக்கள் சீறுகின்றன‌ எதற்காக சென்றாராம்? ஒரு பொது நிகழ்ச்சிக்காம் அதாவது கோவிலில் வாழும் ஏழைகளுக்கு உதவி அளிக்க சென்றாராம் , தமிழகத்து பிச்சைக்காரர்களை எல்லாம் திமுக ஒழித்துவிட்டதால் பார்ப்பன அட்டகாசத்தில் கொஞ்சம் பிச்சைக்காரர்கள் திருவரங்க கோவிலில் மட்டும் இருக்கின்றார்களாம் மிக சரியாக அவர் அங்குதான் […]

சஞ்சயின் எதிர்பாரா மரணம், இந்திய அரசியலை புரட்டிபோட்ட சம்பவம்

கட்சியின் எந்த பதவியிலும், அரசின் எந்த பதவியிலும் இல்லாத ஒருவன் தன் குடும்ப அரசியல் பலத்தால் பெரும் நாட்டையே ஆட்டி வைக்கலாம் என இந்தியாவிற்கு புது இலக்கணம் எழுதியவர் சஞ்சய் காந்தி இந்திராவின் அரசியல் வாரிசாக உருவாகிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி, 1971 முதல் 1980 வரையான காலகட்டங்களில் இந்தியாவினை ஆட்டிகொண்டிருந்தவர் சஞ்சய் காந்தி. இந்த தேசம் அவரை கண்டு மிரண்டிருக்கின்றது, மனிதர் அனாசயமாக மிரட்டி ஆண்டிருக்கின்றார் வரலாறு அப்படித்தான் சொல்கின்றது, கட்டாய கருக்கலைப்பு திட்டம், சில துப்பாக்கி […]

டிரம்ப் என்பவர் மறுபடியும் வடகொரியாவுடன் உரச ஆரம்பித்துவிட்டார்

இந்த டிரம்ப் என்பவர் மறுபடியும் வடகொரியாவுடன் உரச ஆரம்பித்துவிட்டார், கடந்த 12ம் தேதிதான் “நண்பேண்டா.” என வடகொரிய அதிபருடன் சிங்கப்பூரில் செல்பி எல்லாம் எடுத்தவர் இப்பொழுது பல்டி அடித்துவிட்டார் என்ன சொல்கின்றார்? “ஏ வடகொரியாவே நீ புது நண்பன். புது நண்பனை முழுக்க நம்பாதே என நான் தினமும் படிக்கும் பைபிளின் பழமொழி ஆகமம் சொல்கின்றது, அதை நான் மீற முடியாது நாம் நன்றாக பழகுவோம், இன்னும் ஒருவருடம் பழகிவிட்டு அதன் பின் உன் பொருளாதார தடை […]

எதற்கெடுத்தாலும் முன்னேறிய நாடுகளை பார் என்கின்றோம்

எதற்கெடுத்தாலும் முன்னேறிய நாடுகளை பார் என்கின்றோம், ஆனால் அங்கு நடக்கும் விஷயங்கள் இந்தியா அளவு உண்டா என்றால் நிச்சயம் இல்லை, பல மடங்கு மோசம் ஒரு இடம் அரசுக்கு சாலைக்கோ இல்லை இதர விஷயங்களுக்கோ தேவை என்றால் உடனே அவர்கள் எடுத்துகொள்ள சட்டம் இருக்கின்றது, மக்கள் மறுபேச்சு பேசமுடியாது சீனா இதில் முதலிடம் விளைநிலமோ விளையா நிலமோ வீடோ எது என்றாலும் அரசுக்கே உரிமை, இன்னும் ஏராளமான நாடுகளில் இதுவே நிலை ஆனால் அங்கு குறிப்பிட்டு சொல்லும் […]

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அதிர்ச்சியுடனே நடந்துகொண்டிருக்கின்றன‌

உலக கோப்பை கால்பந்து போட்டிகள் அதிர்ச்சியுடனே நடந்துகொண்டிருக்கின்றன‌ ஒரு உலக கோப்பை ஆட்டத்திலும் வெற்றி பெறாத சவுதி, அதே சாதனையினை தக்க வைத்த பெருமையுடன் கிளம்பிவிட்டது மிகவும் எதிர்பார்க்கபட்ட மெஸ்ஸியின் ஆட்டம் எடுபடவில்லை, ஆடினாலும் பிரயோசனமில்லை , ஒரு மாதிரி முழிக்கின்றார், சுருக்கமாக சொன்னால் தமிழக முக ஸ்டாலின் போல ஆகிவிட்டார், அர்ஜென்டினா அடுத்த சுற்று செல்வதே சிரமம் சாம்பியன் ஜெர்மனியே தமிழ்நாட்டில் அமித்ஷாவினை கொண்டுவிட்டால் எப்படி முழிப்பாரோ அப்படித்தான் இருக்கின்றது எகிப்தின் சாலா மிகசிறந்த ஆட்டக்காரர் […]

மோடி அரசில் பொருளாதார ஆலோசகர் அர்விந்த் சுப்பிரமணி ராஜினாமா

\ அமெரிக்காவிலிருந்து வந்து மோடி அரசில் பொருளாதார ஆலோசகராக அமர்ந்த‌ அர்விந்த் சுப்பிரமணி தன் பதவியினை ராஜினாமா செய்துவிட்டு அமெரிக்காவிற்கே ஓடியிருக்கின்றார் அவர் ராஜினாமா செய்தது, பறந்தது எல்லாம் சாதரண காலங்கள் என்றால் யாருக்கும் சந்தேகம் வராது ஆனால் டிரம்ப் அந்நிய நாட்டு பொருட்களுக்கு வரிவிதித்து வம்பிழுக்கும் காலங்களில் அவர் சென்றிருப்பதுதான் சந்தேகம் இந்தியாவும் அவர் கிளம்பிய பின் அமெரிக்க இறக்குமதிக்கு வரியினை உயர்த்தி பதிலடி கொடுத்திருக்கின்றது ஆக என்ன நடந்திருக்கலாம்? அமெரிக்க பொருட்களுக்கு வரிவிதிக்க கூடாது […]

விஜய் என்பவரை நடிகர் என்ற வகையிலேயே சேர்க்க முடியாது …..

விஜய் என்பவரை நடிகர் என்ற வகையிலே சேர்க்க முடியாது விஜயகாந்தின் வளர்ச்சியில் எஸ்.ஏ சந்திரசேகரின் பங்கு முக்கியமானது, அணல் தெரிக்கும் வசனங்களை எப்படி பேசுவது என விஜயகாந்திற்கு சொல்லிகொடுத்த சந்திரசேகர் தன் மகனுக்கு சொல்லிகொடுக்காமல் போனது மகா சோகம் மனிதர் பேசினால் வாயினை திறக்கின்றாரா இல்லையா என்பதே தெரியாது, சில படங்களில் கிராபிக்ஸ் வைத்து வாயினை அசைக்கின்றார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டதுண்டு முழங்கைகளிலும், முழங்காலிலும் அவருக்கு ஏதோ சிக்கல் என்பது அவரின் நடனத்தில் தெரிகின்றது, அந்த இடத்தில் […]

ஶ்ரீரங்கத்தில் ஸ்டாலின் சுக்ர ப்ரீத்தி யாகம்

சுக்ர ப்ரீத்தி யாகம் நடத்துவதற்காக, தற்போது ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார் முக.ஸடாலின் : செய்தி “ஸ்ரீரங்கநாதனையும்,தில்லைநடராசனையும், பீரங்கிகொண்டு பிளக்கும்நாள் எந்நாளோ???” என பாரதிதாசன் பாடியதை மிக கவனமாக குறிப்பெடுத்து முழங்கினர் திமுகவினர் இப்பொழுது ஸ்டாலினே ஸ்ரீரங்கநாதனை காண செல்கின்றாராம் தமிழகத்தில் நாத்திகம் செத்துவிட்டது என்பதற்கு இது பெரும் அடையாளம், நாத்திகத்தின் ஆயுள் அவ்வளவே கலைஞருக்கும் கடவுள் நம்பிக்கை இருந்தது ஆனால் சமத்தாக மறைத்தார், திருவாரூர் கோவிலின் மேல் அவருக்கு அவ்வளவு அபிமானம் இருந்தது வேட்பாளர் பட்டியல் தயாரானதும் […]

வீரப்பன் : ஒரு நினவாய்வு

வீரப்பனுக்கு விஷம் வைத்து விஜயகுமார் கொன்றார் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள் உண்மையில் வீரப்பனை பிடிக்கும் பணியில் தமிழக போலிஸ் சலிப்படைந்து கைவிடும் நிலைக்கு வந்தது, வீரப்பனும் அமைதியாக இருந்திருந்தால் சிக்கலே இல்லை நம்புகின்றீர்களோ இல்லையோ 1986க்கு பின்னரான வீரப்பன் எப்படி இருப்பான் என்றே பின்னாளில் யாருக்கும் தெரியாது, அவனும் அப்படியே மலைவாழ் சாதியாகவோ இல்லை விவசாயியாகவோ இருந்திருக்கலாம், கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லா நிலை அவ்வளவு ஏன்? கூலி தொழிலாளியாக வெளியூர் சென்றாலும் அவனை கண்டுபிடித்திருக்க முடியாது, அப்படி […]

விஜயினை வைத்து கலாநிதி மாறன் படம் சர்கார்

கலாநிதி மாறன் மிக சிறந்த வியாபாரி, கலைஞர் குடும்பத்துடன் சில சர்ச்சைகளை தவிர அவரின் நகர்வுகள் முழுக்க முழுக்க வியாபார நகர்வு சில காலம் அமைதியாக இருந்தவருக்கு எங்கிருந்தோ சிக்னல்கள் கிடைக்க மறுபடியும் திரைபடம் தயாரிக்க வந்துவிட்டார், நிச்சயம் பின்னால் ஏதோ நடந்திருக்கின்றது திமுக அபிமானி என்றால் கலாநிதி மாறன் மூன்றாம் கலைஞரான உதயநிதியினை வைத்துத்தான் படம் தயாரித்திருக்க வேண்டும், நகுலை வைத்து நாக்க முக்க ஆடவைத்தவர்களுக்கு உதயநிதி என்பவர் தயக்கமே இல்லாதவர் ஆனால் நேரம் பார்த்து […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications