பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஒரு பயலும் தயாராக இல்லை

சீனா தன் சொந்த தயாரிப்பான ஜே10 விமானம் விற்பனைக்கு தயார் என சொல்லிவிட்டது, அது அவர்களின் அதி நவீன விமானம், அமெரிக்க எப் 16க்கு சமம் என சொல்லிகொண்டது “ஜே10 வேண்டுமா? வேண்டுமா..” ? என உலகெல்லாம் கூவி கூவி கத்தினாலும் வாங்க ஒரு பயலும் தயாராக இல்லை சீனாவின் ஜே10 விமானத்தை பார்ப்போர் பேரீட்சம் பழ நினைவோடு சிரித்துகொண்டே நகர்கின்றார்கள் “அடேய் அமெரிக்க விலையினை விட பாதிவிலைக்கு தாரேண்டா.. வாங்குங்கடா” என கத்தினாலும் ஒருவரும் சீண்டவில்லை […]

இனி நாம் கேட்போம்

பகுத்தறிவினை புதைத்து கல்லறை கட்ட செங்கல் வைத்த நேரம்…. இனி நாம் கேட்போம் கட்டடம் கட்ட சந்தணம் வேண்டுமா? சிமென்ட் வேண்டுமா? வாளி நிறைய மண் இருக்க வேண்டிய இடத்தில் வாழைபழம் எதற்கு? தேங்காய் உடைக்காவிட்டால் கட்டடம் நிலைக்காதா? ஆரத்தி தட்டை வணங்காவிட்டால் கட்டடம் இவர் தலையில் விழுந்துவிடுமா? https://m.facebook.com/story.php?story_fbid=2387667718006521&id=100002899486623

அவசர நிலை பிரகடனபடுத்தும் நேரம் வந்துகொண்டிருப்பது போலதெரிகின்றது

நாட்டில் அவசர நிலை பிரகடனபடுத்தும் நேரம் வந்துகொண்டிருப்பது போலதெரிகின்றது, மிசா இரண்டாம் முறை அறிவிக்கபட்டால் நல்லது, இப்போதைய சூழலுக்கும் அரசின் பலத்துக்கும் அது சரியே. இம்முறை மிசாவில் திமுக தலைவர் சிறை சென்றால் உரிய ஆவணம் வழங்கபடும் என்பதால் முதல் ஆளாக அவர்தான் மகிழ்ச்சியோடு உள்ளே செல்வார் என்பது ஒன்றும் ரகசியமல்ல

திமுக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரும் ஆர்பபட்டம்

திமுக குடியுரிமை சட்டத்தை எதிர்த்து பெரும் ஆர்பபட்டம் செய்ய போகின்றதாம். நல்லவரோ கெட்டவரோ அந்த கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் இம்மாதிரி ஆடமாட்டார், தன் தேர்ந்த அனுபவத்தில் காட்சிகளை மாற்றி மத்திய அரசுக்கு வேறுமாதிரி சிக்கல் கொடுப்பார் அதாவது இந்நேரம் என்ன சொல்லியிருப்பார் தெரியுமா? “அந்நிய நாட்டு மக்களை வெளியேற்றுவதில் இந்த அரசு காட்டும் அவசரத்தை, இந்நாட்டு நிலமும் தமிழர் சொத்துமான கச்சதீவினை அந்நியரிடம் இருந்து மீட்பதில் காட்டவே இல்லை என்பதுதான் தமிழர் மேலான டெல்லியின் பாசிச நடவடிக்கை […]

மார்கழி

இந்த மாதம் மாரிகாலம் கழியும் மாதம் என்பதால் மார்கழி என்றும் , “மார்க்க சீர்ஷம்” எனும் சமஸ்கிருத வார்த்தை அதாவது “மேலான வழி” எனும் பொருளில் வரும் மார்க்க வழி எனும் சொல்லே மார்கழி ஆயிற்று என்றும் சொல்வார்கள் மாதங்களில் அது சைவருக்கும், வைணவருக்கும் மேலான மாதம். சைவர்கள் தேவர் வரும் மாதம் என திருவெம்பாவை பாடி கொண்டாடுவார்கள். வைணவருக்கு கண்ணணே “அர்ஜூனா, மாதங்களில் நான் மார்கழி” என சொன்னபின் என்ன மாற்று கருத்து இருக்க முடியும்? […]

பைத்தியக்கார திராவிட கோஷ்டி என்றால் இதுதான்

பைத்தியக்கார திராவிட கோஷ்டி என்றால் இதுதான்உலகில் எல்லா நாட்டு மக்களும் எல்லா நாட்டிலும் வசிப்பார்கள், சிலர் தொழிலுக்காக வசிப்பார்கள். சிலர் ஓய்வு தேடி வருவார்கள். அவரவரவர்க்கு என்ன தேவையோ அதை தேடி வருவார்கள்வருபவர்களை முறையான ஆவணத்தோடும், முறைபடுத்தபட்ட கண்காணிப்பு வழிகளோடுமே சம்பந்தபட்ட நாடு ஏற்கும்முதல் நிபந்தனையே இந்நாட்டின் இறையாண்மைக்கும் இந்நாட்டின் சட்டதிட்டங்களுக்கும் எதிராக மூச்சேவிட கூடாது, நீ இங்கு குடியுரிமைமே வாங்கினாலும் உன்னை எப்பொழுதும் கழுத்தை பிடித்து வெளிதள்ள எமக்கு முழு உரிமை உண்டுஇதுதான் வெளிநாட்டு வாழ்க்கை, […]

குடியுரிமை மசோதாவினை எதிர்த்து மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு

குடியுரிமை மசோதாவினை எதிர்த்து மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கின்றார் ஸ்டாலின் ஆக இலங்கையில் தமிழன் செத்தால் வராத ஆத்திரம் வங்கதேசத்துகாரனை விரட்டும் பொழுது வருகின்றதென்றால் இது தமிழருக்காகவும் திராவிடருக்காகவும் நடத்தபடும் கட்சி அல்ல மாறாக வங்கதேச மக்களுக்காக நடத்தபடும் கட்சி இனி இது வங்கதேச முன்னேற்ற கழகம் வ.மு.க அட, உள்ளாட்சி தேர்தலை நிறுத்தத்தான் சர்வாதிகாரி எவ்வளவு போராடுகின்றார்? ***** திமுக மேலிடத்தில், திமுக எம்பிக்களில், திமுக ராஜ்யசபா எம்பிக்களில் எத்தனை பேர் இஸ்லாமியர்கள் என கேட்டுவிட்டால் […]

முக்கால உண்மை

ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி- தமிழருவி மணியன் விக்கிரமாதித்தனுக்கு பின் கன்னிதீவு சிந்துபாத்துக்குபின் வரலாறு கண்ட மாபெரும் முயற்சியாளன் இந்த மணியர்தான் அடுத்தவருடம் வேதாளம் இவர் முதுகில் சாத்திவிட்டு முருங்கைமரம் ஏறபோவது முக்கால உண்மை

திட்டமிட்டு அழகாக பழிவாங்குகின்றார்

ஜாமியா பல்கலைகழகத்தின் ஒவ்வொரு ரத்த துளிக்கும் அரசு பதில் சொல்ல வேண்டும் : முக ஸ்டாலின் அண்ணாமலை பல்கலைகழக ரத்த துளிக்கோ, அதன் பின் உட்கட்சி, ஆட்சி, எதிர்கட்சி என திமுகவால் சிந்தபட்ட ஒவ்வொரு ரத்ததுளிக்கும், அவர்களால் உருவான சாம்பலுக்கு எங்கே இருக்கின்றது திமுகவிடம் பதில்? எத்தனை கல்லூரிகள் எவ்வளவு தாக்குதல்கள்? தாமிரபரணி படுகொலைக்கு திமுகவிடம் பதில் உண்டா? இல்லை 2006ல் ஈழபோராட்டத்துக்காக அடித்துவிரட்டபட்ட மாணவரின் ரத்தத்துக்கு பதில் உண்டா? அமைதிபடை வீரர்களின் ரத்தத்துக்கு, ராஜிவின் ரத்தத்துக்கு […]

சுசீந்திரம் கோவிலில் நயன் பிரார்த்தனை

சுசீந்திரம் கோவிலில் நயன் பிரார்த்தனை ஆக நயந்தாரா முழு இந்துவாகிவிட்டார், ஏதோ ஒரு நிம்மதியும் அமைதியும் அவருக்கு அங்கே கிடைத்திருக்கின்றது இந்த குஷ்பு இப்படி எல்லாம் கோவிலுக்கு சென்றிருந்தால் இந்நேரம் கவர்ணராயிருக்கலாம், அது பாதை மாறி சென்று வாய்ப்பினை எல்லாம் இழந்துவிட்டது பாவம் தான் ஆடாவிட்டாலும் சங்கத்து தசை ஆடும் என்பது இதுதான்

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications