பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

யாரை எதிர்த்து அணியபட்ட கருப்பு சட்டை?

அன்று பெரியார் பின்னால் கருப்பு சட்டை அணிந்தவர்களின் வாரிசுகள்தான் இவர்கள் இன்று ஏதோ எதிர்ப்பை காட்ட மறுபடியும் கருப்பு சட்டை அணிந்துவிட்டார்களாம். இந்த சமூகம் திராவிடரை இழிவுபடுத்துகின்றது, அந்த இழிவு நீங்குமட்டும் எதிர்ப்பை தெரிவிக்க கருப்புசட்டை அணிவோம் என்றுதான் அணிந்தார்கள் பின் திமுக தொடங்கும்பொழுது அரசியலுக்காக வெள்ளையாடைக்கு மாறினார்கள், வைகோ கருப்புதுண்டு அப்படி வந்ததுதான் ஒருகாலத்தில் இவர்களின் அடையாளமாக இருந்த கருப்பு சட்டை , பிராமணரை எதிர்ப்போம் , ஆரியரை எதிர்ப்போம் என்ற அடையாளமாக கருதபட்ட கருப்பு […]

தமிழக பட்ஜெட்

தமிழக பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பு வித்தியாசமாக இருக்கின்றது, அதாவது தனியார் நிலங்களை கையகபடுத்தி ஏழைகளுக்கு கொடுப்பார்களாம் எனக்கு கொடநாட்டில் 10 சென்ட் வேண்டும் என மாபெரும் ஏழையாகிய நான் இப்ப்பொழுதே சொல்லி வைத்தாயிற்று யார் யாருக்கு எங்கு வேண்டுமோ இப்பொழுதே சொல்லி வைத்துவிடுங்கள். சொந்த ஊரில் ஒரு கிணற்றை வைத்துகொண்டு ஆயிரம் பஞ்சாயத்து செய்து இறுதியில் பெரும் தொகை வாங்கிகொண்டு கொடுத்தவர் நிதியமைச்சர், அவர்தான் சிரிக்காமல் இதனை வாசித்தார். அவர் அறிவிக்கின்றார் தனியார் சொத்துக்களை கையகபடுத்தி ஏழைகளுக்கு […]

சீனாவில் கால் டேக்ஸி ஓட்டி கம்யூனிஸ்டா வாழபோறேன்

“தினகரன் கட்சி பெயரை சொல்லிட்டார், இனி நேரா நம்மகிட்டதான் வருவானுக‌ நான் இந்த வழியா சீனா போகபோறேன், அங்கதான் கட்சி இல்ல தேர்தல் இல்ல ஒரு இம்சையுமில்ல, யார்கிட்டேயும் சொல்லாத. அங்க போய் நான் கால் டேக்ஸி ஓட்டி கம்யூனிஸ்டா வாழபோறேன்”  

இதனை விட “நல்ல அம்மா” எங்கே கிடைப்பார்?

சங்கமும் “அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” என்றொரு கட்சியினை தொடங்கலாம் என்றிருந்தது பெயரை பதிவு செய்யாமல் விட்டது எவ்வளவு பெரும் தவறு என புரிகின்றது, அதற்குள் முந்தி கொண்டார்கள் எனினும் இந்த அம்மாவினை கட்சியில் சேர்த்துவிட்டு தினகரன் கட்சி தொடங்கி இருந்தால் நாளைக்கே முதல்வர் ஆகியிருக்கலாம்  இதனை விட “நல்ல அம்மா” எங்கே கிடைப்பார்? விரைவில் “நல்ல அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்” சங்கத்தால் தொடங்க படும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என கட்சிக்கு பெயர் வைத்தார் தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என கட்சிக்கு பெயர் வைத்தார் தினகரன் எல்லா படத்திலும் திரையில் “அம்மா..” என்றும், திரைக்கு பின் “அம்மு..” என்றும் அலறிய ராமசந்திரன் கட்சியில் இப்படி பின்னாளில் பெயர் வரவில்லை என்றால்தான் ஆச்சரியம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இதுவரை அம்மாவால் முன்னேறிய மக்கள் யாரென்றால் சாட்சாத் மன்னார்குடி குடும்பம், பன்னீர் மற்றும் பழனிச்சாமி ஆனால் அப்படி அல்ல அம்மாவால் வளர்ந்த மக்கள் நாங்கள்தான் என தினகரன் மிக உரிமையாக “அம்மா மக்கள் […]

தீவிரவாதி ஆயுள் தண்டனை கைதி அபுதாஹீரை சந்தித்து ஆறுதல் கூறினார் சீமான்

கோவை குண்டு வெடிப்பில் 58 தமிழர்களை போட்டு தள்ளிய தீவிரவாதி ஆயுள் தண்டனை கைதி அபுதாஹீரை சந்தித்து ஆறுதல் கூறினார் சீமான் : செய்தி பொது இடத்தில் குண்டு வைத்து பலரை கொன்றவன், 100 போலிசை கொன்று சந்தண மரத்தை கடத்தியவன், சொந்த நாட்டு ராணுவம் 1500 பேரையும் பிரதமரையும் கொன்ற அந்நியநாட்டு தீவிரவாத கும்பல் இவர்களை எல்லாம் ஒரு அரசியல் கட்சி தலைவன் தமிழகத்தில் விழுந்து விழுந்து ஆதரிக்கின்றான் இப்படி ஒரு ஒரு நபர் இருக்கவும், […]

மாவீரன் ஜூலியஸ் சீசருக்கு வீரவணக்கம்

இந்த உலககிற்கு பல விஷயங்களை கொடுத்தது ரோம், அவர்கள் ஏற்படுத்திய பல விஷயங்கள்தான் பின் ஐரோப்பாவில் வந்தன‌ பார்லிமென்ட், சாலை, செனட் சபை, விளையாட்டு அரங்கம், விவாத அரங்கம் , நவீன போர்முறை எல்லாம் அவர்கள் கொடுத்தது, காலண்டரும் அவர்கள் கொடையே இந்த உலகில் ரோமரின் தாக்கம் பெரிது, உலகை புரட்டிய அந்த ரோம் அரசினை உச்சத்திற்கு கொண்டு சென்றவன் ஜூலியஸ் சீசர் அசாதாரண வீரன், 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்தான். போர்முறையினை மாற்றி காட்டி வெல்ல […]

அன்றே சிரித்தேன்… இன்றுதான் புரிகிறது….

“நான் அன்றே சிரித்தேன், அதன் அர்த்தம் இப்பொழுதுதான் புரிகின்றது போல‌ அய்யா மோடிக்கு …” “உபியில் ஏற்பட்டிருக்கும் தோல்வி யோகி என்பவரின் தனிபட்ட தோல்வி, அதற்கும் பாஜகவிற்கும் சம்பந்தமில்லை”

ரஷ்யா பிரிட்டன் மோதல்

பிரிட்டனில் காரணம் தெரியாமல் இறந்த 14 ரஷ்யர்களின் மரணமும் ரஷ்ய உளவுதுறை தலையில் விழுந்திருகின்றது இதனால் பிரிட்டன் பிரதமர் தெரசே மே 23 ரஷ்ய அதிகாரிகளை உடனே நாட்டை விட்டு வெளியேற சொல்லிவிட்டார் பதிலுக்கு ரஷ்யாவும் அங்கிருக்கும் பிரிட்டானியரை வெளியேற்ற சொல்லும் என்பதால் பதற்றம் நீடிக்கின்றது ரஷ்யா மீது பொருளாதார தடையினை கொண்டுவர பிரிட்டன் முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன, அது அத்தனை சுமூகமாக இருக்க போவதில்லை 18ம் தேதி நடைபெற இருக்கும் தேர்தலுக்கு பின் புட்டினீன் அதிரடி […]

இந்து கிறிஸ்தவ சர்ச்சைகள்

ஏதோ இந்து கிறிஸ்தவ சர்ச்சைகள் இன்றுதான் தமிழகத்தில் முளைக்க தொடங்கி இருப்பது போலவும், அதற்கு முன்பு இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மிக அமைதியாக இருந்தது போலவும் பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள் கிறிஸ்தவம் இந்தியாவில் 1900 ஆண்டுகளுக்கு முன்பே அரேபிய கேரள தொடர்பால் கேரளாவிற்கு வந்தது ஆனால் பெரிதாக பரவவில்லை. காரணம் வந்தது சீரிய கத்தோலிக்க சபை அதன் பின் 1500களில் வாஸ்கோடகாமா வந்தபொழுது கிறிஸ்தவம் வந்தது, போர்த்துகீசியரின் கோவாவில் அது பரவிற்று, கேரளாவிலும் பரவிற்று ஆனால் வலுகட்டாயமாக அல்ல. கடலோரங்களில் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications