பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

பல விஷயங்களில் சறுக்கினாலும் சில விஷயங்களில் மோடி சாதிக்கின்றார்

பல விஷயங்களில் சறுக்கினாலும் சில விஷயங்களில் மோடி சாதிக்கின்றார் இந்தியாவினை சுற்றி சீனா ஆணியடிக்க, சீனாவின் நடமாட்டத்தினை முடக்கும் விஷயங்களிலும் இந்தியா கவனமாக காய் நகர்த்துகின்றது ஜப்பானுடன் நல்லுறவு, வியட்நாமுடன் பிரம்மோஸ் ஒப்பந்தம் , வியட்நாமில் இந்திய துறைமுகம் என அதன் காலடியில் மிரட்டுகின்றது இந்தியா, நிச்சயம் இது அட்டகாசமான திட்டம் அப்படியே பாகிஸ்தானில் சீனா கட்டும் துறைமுகத்திற்கு எதிராக ஈரானிலும் கட்டுகின்றது இந்தியா இப்போது ஓமானின் டக்ம் எனும் துறைமுகத்தை இந்தியா பயன்படுத்திகொள்ள ஒப்பந்தம் தயாராகிவிட்டது, […]

ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இருக்கும் மதிப்பே தனி

என்னதான் என்பீல்டு புல்லட், ஹீரோ ஹோண்டா , பஜாஜ் என பல பைக்குகள் இந்தியாவில் தயாரிக்கபட்டாலும் , பணக்காரர்கள் இறக்குமதி செய்யும் ஹார்லி டேவிட்சன் போன்ற பைக்குகளுக்கு இருக்கும் மதிப்பே தனி இவை எல்லாம் வெளிநாட்டுதயாரிப்புகள் அவற்றிற்கான சந்தை இந்திய பெரும் பணக்காரர்களுக்கானது, இதில் என்ன சிக்கல் என்றால் இந்திய அரசு இறக்குமதி வரியினை 70% வரை வைத்திருக்கின்றது வெளிநாட்டிலிருந்து பைக் வாங்க வசதி இருக்கின்றதல்லவா? கட்டு வரியினை என கேட்பது இந்திய நிலைப்பாடு, இதில் குறிப்பிட்ட […]

பஞ்சாபில் பாஜக…

கொஞ்ச நாளாக சோர்ந்திருந்த பாஜகவிற்கு பஞ்சாப் அமைச்சர் ஒருவர் அட்டகாசமான உற்சாகம் கொடுத்துவிட்டார் அதாகபட்டது பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடக்கின்றது, பாலிடெக்னிக் ஆசிரியர்களை நியமிக்க அமைச்சர் சரண்ஜித் சிங் முடிவு செய்யவேண்டிய நேரம், இருவர் சம தகுதியுடன் ஒரே இடத்திற்கு தேர்வாக வந்திருக்கின்றார்கள் அமைச்சர் யோசித்திருக்கின்றார், தேர்வுகளிலும் தகுதியிலும் இருவரும் சரிக்கு சமம் என்ன செய்யலாம் என்றவருக்கு கிரிக்கெட் அம்பையர் நினைவு வந்திருக்கின்றது சட்டென டாஸ் போட்டு பூவா? தலையா? விளையாடி அதில் வென்றவருக்கு வேலை என […]

மவுன விரதத்தை முடித்து விட்டு பேச தொடங்கினார் சசிகலா

மவுன விரதத்தை முடித்து விட்டு பேச தொடங்கினார் சசிகலா, இனி ஆறுமுக சாமி கமிஷன் முன் பேசுவார் என்ன பேசுவார்? “2016 செப்டம்பர் 22ம் தேதி காலையில கோழி கொக்கரக்கோன்னு கூவிச்சா, அக்கா காபி கேட்டாங்க…” என்ற ரீதியில் நிச்சயம் கமிஷனை தெறிக்க விடுவார். யாரையும் இந்த கமிஷன் உருப்படியாக விசாரித்ததாக தெரியவில்லை நிச்சயம் சசிகலா விசாரிக்கபட வேண்டியவர், ஆனால் லண்டன் டாக்டர், சிங்கப்பூர் பிசியோ தெரப்பிஸ்ட் முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ், அடிக்கடி சந்தித்த வெங்கய்யா […]

எம்ஜியார் நினைவு இல்லம்….

இந்த ராமசந்திரனின் வீடு ஒன்று பாலக்காட்டில் இருக்கின்றதாம், அன்னார் வசித்த வீடாம் அதனால் அதனை அவரின் நினைவு இல்லமாக மாற்றி அவரின் வாழ்க்கை வரலாறை பரப்புவார்களாம் ராமசந்திரன் பாலக்காட்டில் வசித்தது மிக சொற்பமான நாட்களே என்பது வேறு விஷயம், இப்பொழுது ராமசந்திரனின் வாழ்க்கை வரலாறை விளக்க போகின்றார்களாம் என்ன வரலாறு? பெரியார் கொள்கையில் வளர்வதாக சொல்லி பின் பெரியார் சொன்னதையும் மீறி கட்சி உடைத்ததையா? எல்லோரும் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இருக்க இவர் கோவா சூட்டிங்கில் இருந்ததையா […]

வல்லவன் விற்றதே எண்ணெய்

செக்கில் எடுக்கபடும் எண்ணெய் மீது உணவு பாதுகாப்பு துறை ஆய்வு, அது பாதுகாப்பில்லா எண்ணெய் என சில விஷயங்களை உறுதிபடுத்தியது அத்துறை : செய்தி நிச்சயம் இந்த மாரடைப்பு, புற்ற்நோய், கிட்னி பிரச்சினை இன்னபிற நோய்கள் வர இறைச்சி வகைகள் கூட காரணமல்ல பாதுகாப்பாற்ற எண்ணெய் வகைகளே காரணம் என்ற விழிப்புணர்வு ஏற்பட்டு இப்பொழுதெல்லாம் மக்கள் செக்கில் ஆட்டபட்ட எண்ணெய்களை வாங்க ஆரம்பித்தாயிற்று சிலரோ கவனமாக மூலபொருளை கொடுத்து எண்ணெய் வாங்கி செல்லும் அளவு விழிப்புடன் இருக்கின்றனர், அப்படியே நலமுடனும் […]

இது கனடா நாட்டு அமைச்சரவை, பின் ஏன் கனடா செழிக்காது

மருத்துவ அமைச்சர் ஒரு மருத்துவர் போக்குவரத்து துறை அமைச்சர் ஒரு விண்வெளி வீரர் பாதுகாப்பு துறை அமைச்சர் முன்னாள் ராணுவ தளபதி இளைஞர் துறை அமைச்சர் வயது 45க்குள் விவசாய துறை அமைச்சர் ஒரு விவசாயி நிதி அமைச்சர் ஒரு வெற்றிபெற்ற தொழிலதிபர் அறிவியல் மற்றும் பொருளாதார அமைச்சர் ஒரு பொருளாதார ஆய்வாளர் சட்ட அமைச்சர் ஒரு நீதிபதி விளையாட்டு துறை அமைச்சர் ஒலிம்பிக் வீரர் பன்மொழி தெரிந்தவர் குடியுரிமை அமைச்சின் பொறுப்பாளர் 50% பெண்கள் கொண்ட […]

ஆந்தராக்ஸ் பவுடர் இப்பொழுது விஷயமாகின்றது…

உலகம் புதுவித மிரட்டலுக்கு ஆளாகியிருக்கின்றது, இப்பொழுதெல்லாம் விஷ பவுடர் பார்சலில் அனுப்பி மிரட்டுகின்றார்கள், விஷயத்தில் சிக்கல் என்னவென்றால் யார் அனுப்புகின்றார்கள் என்பதே தெரியாது அதாவது உலகின் மிக மலிவான ஆயுதம் விஷஆயுதங்கள். செலவு குறைவு பாதிப்பு மிக அதிகம் உதாரணம் நகரின் மையத்தில் விஷவாயு குண்டை வெடிக்க செய்தால் நகரின் உயிர்கள் மட்டும் காலி மற்றபடி கட்டங்கள் எல்லாம் அப்படியே இருக்கும், குண்டூசி கூட பாதிக்கபடாது அந்த விஷ ஆயுதங்களில் பலவகை உண்டு, இப்பொழுது பரவுவது விஷ […]

தென்கொரியாவிலும் ஒரு ஜெயா- சசி போன்ற இரட்டையர்கள் …

ஜெயா சசிகலா போலவே தென்கொரியாவிலும் ஒரு இரட்டையர்கள் இருந்தார்கள், இப்பொழுது சிறையில் நூடுல்ஸ் உறிஞ்சுகின்றார்கள் அதாவது தென்கொரியாவில் அதிபராக இருந்தவர் பார்க் கியூன் இவரின் நெருங்கிய தோழி சோய் சூன் சில். இருவரும் அங்கு செய்யாத அட்டகாசமில்லை, சுருட்டாத செல்வமில்லை அது என்ன தமிழ்நாடா? சில நாட்களிலே இருவரையும் சிறையில் அடைத்தாயிற்று, இப்பொழுது தென்கொரிய சசிகலாவிற்கு 20 ஆண்டு சிறையும் பலகோடி அபராதமும் விதிக்கபட்டிருக்கின்றது தென்கொரிய ஜெயலலிதாவிற்கு இன்னும் விசாரணை முடியவில்லை ஆக உலகெலாம் தோழிகள் சிறைசெல்லும் […]

ஆட்சியை கவிழ்க்க ஒரு நிமிடம் போதும் : ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்று நினைத்தால் திமுகவுக்கு ஒரு நிமிடம் போதும் : ஸ்டாலின் பின்னர் ஏன் கலைக்கவில்லை, அன்னார் கடிகாரத்தில் 1 நிமிடம் என்பது சர்வதேச கடிகாரத்தில் 4 வருடமா? இவர் கொல்லைபுறம் வழியாக ஆட்சிக்கு வரமாட்டாராம், தேர்தலில் வென்றபின் ஆளுநர் வீட்டுக்கு வந்து கையினை பிடித்து இழுத்தபின் நேர் வழியில் வருவாராம் நேர்வழியில் வெல்ல தேர்தல் வேண்டும், தேர்தல் நடக்க ஆட்சி கலையவேண்டும் என சொல்ல கூட இவர் அருகில் யாரும் இல்லையா? […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications