பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாட்டில் ஜிஎஸ்டி முதல், தமிழக டெங்கு வரை பிரச்சினை ஆட்டிபடைக்கின்றது

உருட்டுக்கட்டையால் தாக்கிய பன்னீர்செல்வம் ஆதரவாளர்! – நிலைகுலைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ ராமசந்திரன் காலத்தில் இருந்தே அடிதடியில் அடக்கபட்டதுதான் அக்கட்சி, அவருக்கு பின்னரான காலத்தில் கூட ஜெயா எதிர்ப்பாளர்களான சாத்தூர் ராமசந்திரன் முதல் சந்திரலேகா என ஆசிட் ஊற்றபட்டது, சசிகலா புஷ்பா சாத்தபட்டது வரை எல்லாம் வரலாறு இதில் பன்னீர் கோஷ்டியும், தினகரன் கோஷ்டியும் போட்டு தாக்குதல் நடத்துவதில் என்ன ஆச்சரியம்? ஒரு பயலும் தப்பகூடாது, ம்ம் “அதிமுக சண்டை மைதானம் திறக்கபடட்டும்..” நாட்டில் ஜிஎஸ்டி முதல், […]

பாஜகவிலும் ஒரு சசிகலா குடும்பம் இருக்கின்றது

அமித் ஷா மகனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை: ராஜ்நாத் சிங் ஆமாம், ப.சிதம்பரம் மகன் மீதான குற்றசாட்டு என்றால் அலறி அடித்துகொண்டு விசாரிக்கவேண்டும் . பிரியங்காவின் கணவன் என்றால் உடனே வழக்கு பதிய வேண்டும் ஆனால் அமித்ஷா மகன் என்றால் விசாரணை இல்லையாம் அமித்ஷா குடும்பம் சந்தேகத்திற்க்கு அப்பாற்பட்டது என இவரே சொல்லிகொள்கின்றார். அதனை விசாரணை நடத்தி நீதிமன்றம் சொன்னால் என்ன? (மோடியினை காட்டி பல்லாயிரம் கோடி ஆட்டையினை போட்ட தகப்பனும் மகனும் இவர்கள்தான் […]

குஷ்பூ சங்கத்திற்கு ஒரு “தியாக தலைவர்” கிடைத்துவிட்டார்

யாரோ ஒரு நண்பர் குஷ்பூ நினைவாக திருமணம் செய்யாமலே இருக்கின்றார் என்றொரு செய்தி படிக்க நேர்ந்தது. இது முழுக்க அவரின் அறியாமை, அவருக்கு அன்று வழிநடத்த யாருமில்லை போல‌, இது காற்றை வெறும் கையில் பிடிப்பதற்கு சமம். ஆனாலும் குஷ்பூவினால் அவர் வாழ்க்கை பாழாயிற்று என்பது சங்கத்து உறுப்பினர்கள் நெஞ்சில் எல்லாம் ஈட்டியாக பாயும் வலி. தலைவி குஷ்பூ யார் வாழ்வினையும் கெடுப்பவர் அல்ல, பாழக்குவர் அல்ல. இது நண்பருக்கு புரியவில்லை அவரை உடனடியாக கண்டுபிடித்து சில […]

30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான்….

30 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் இந்திய அமைதிபடையுடன் புலிகள் மோத தொடங்கினர். முதல் நாளே புலிகளின் அனுதாபிகள் தமிழகத்தில் கத்த தொடங்கினர், அந்நாளைய முதல்வர் ராமசந்திரனிடமிருந்து பதிலே இல்லை ராஜினாமா செய் என யாரும் ராமசந்திரனை கேட்கவுமில்லை, அவர் செய்யவுமில்லை, ராஜிவிற்கும் அவருக்கும் கூட்டணி எல்லாம் இருந்த நேரமது இதற்கு இருமாதங்களுக்கு முன்புதான் டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரன் முரண்டுபிடிக்க அவரை வழிக்கு கொண்டுவர ராமசந்திரனும் சென்றிருந்தார் பின் “என்னை விட்டால் போதும் சாமி” என […]

இப்படி சொன்னால் பரபரப்பு வருமா?

தனியார் மருத்துவமனை செவிலியர்களுக்கும் அரசுக்கு ஈடான ஊதியத்தை வழங்க வேண்டும்: வேல்முருகன் மனிதருக்கு பரபரப்பிற்கு ஏதாவது பேசிகொண்டே இருக்கவேண்டும் என்றொரு வியாதி வந்துவிட்டது. இப்படி சொன்னால் பரபரப்பு வருமா? வேண்டுமென்றால் தனியார் செவிலியர் வாங்கும் சம்பளம் போல அரசு செவிலியருக்கும் சம்பளத்தை குறைக்க வேண்டும் என சொல்லுங்கள் அப்பொழுது ஒரு அதிர்வு உங்கள் உச்சிமண்டையில் தெரியும்

பாஜக பிரமுகரான வழக்கறிஞரை தாக்கிய சந்தாணம் தலைமறைவு

பாஜக பிரமுகரான வழக்கறிஞரை தாக்கிய சந்தாணம் தலைமறைவு சந்தாணம் எத்தனை முறைதான் சினிமாவில் அடிவாங்கிகொண்டே இருப்பார், நிஜத்தில் தன்னாலும் அடிக்க முடியும், சினிமாவில் அது நடிப்பு என காட்ட நினைத்திருக்கின்றார் ஏதோ பணம் சர்ச்சையில் ஒருவரை அடித்துவிட்டார். அவர் அடிவாங்கிய பின்புதான் தான் பாஜக பிரமுகர் என்பதை சொல்லியிருக்கின்றார், சந்தாணம் ஓடிவிட்டார். அது என்னவோ தெரியவில்லை தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் பாஜக பிரமுகர்களாக அலைகின்றார்கள், வரும் செய்திகளில் பாதி பாஜக பிரமுகர் செய்திதான். அதுவும் அடிவாங்கியபின் நான் […]

உங்களுக்கு என்னடா பிரச்சினை?

அட பதர்களா உஜ்ஜைனி மகா காளியும், கல்கத்தா உக்கிர காளியும் உங்கள் முப்பாட்டிகளில் வரமாட்டார்களா? சின்ன முப்பாட்டி, பங்காளி வகையிலாவது வருவார்கள் அல்லவா? உங்களுக்கு காளி முப்பாட்டி என்றால், இந்தியா முழுக்க உள்ள காளிபக்தர்கள் உங்கள் சகோதரர்கள் அல்லவா? பின் ஏன் எதிர்ப்பு? உங்களுக்கு என்னடா பிரச்சினை? “அம்மா காளி, ஏதோ அறிவில்லா முட்டாளுக்கு ஒரு காலத்தில் நீர் நாக்கில் கீறி அவனை பெரும் அறிவாளி காளிதாசன் ஆக்கிவிட்டீராம் இந்த பயல்களுக்கும் கீறிவிடும் தாயே, சும்மாவே நாக்கை […]

நூறு அடி உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை : யோகி அரசின் அடுத்த திட்டம்

நூறு அடி உயரத்தில் பிரமாண்ட ராமர் சிலை : யோகி அரசின் அடுத்த திட்டம் கோரக்பூரில் சாகும் குழந்தைகள் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகின்றது, ஆம்புலன்ஸ் இல்லாத மருத்துவமனைகள் ஏராளம் பிணத்தை கூட சுமந்து செல்ல ஆம்புலன்ஸ் இல்லா அவலம் மொத்தத்தில் அடிப்படை வசதிகள் கூட இல்லா மிக பின் தங்கிய மாநிலத்தை மாற்ற வந்தவர் என்ன செய்கின்றார் பார்த்தீர்களா? சாமியார்களை முதல்வராக‌ அமர்த்தினால் புத்தி இப்படித்தான் சாமிகளுக்கு சிலை, புனஸ்காரம் என செல்லும் போல‌.. இதில் இவர் […]

தமிழகம் என்று ஒரே இனமாக இருந்தது?

தமிழர்கள் சாதி மதம் இல்லாமல் ஒற்றுமையாக இருந்தார்களாம், பின் ஆரியர்கள் வந்து மதத்தை கொண்டுவந்தார்களாம் இதில்தான் பல்லவர், இன்னபிற மன்னர்கள் எல்லாம் தமிழரை அடிமைபடுத்தினார்களாம் பின் நாயக்கர்கள் வந்து பிரித்தார்களாம், கொடுமை படுத்தினார்களாம், அடிமைபடுத்தினார்களாம் சாதியும், மதமும் இருக்கும் வரை தமிழன் பிரிந்தே இருப்பானாம். இல்லாவிட்டால் அவன் ஒற்றுமையில் உலகையே வெல்வானாம் இப்படி ஒரு கும்பல் சொல்லிகொண்டிருக்கின்றது, முன்பே சொன்னது போல திருச்சி வளனார் கல்லூரியின் நக்சலைட்டுகள் தயாராகும் இடமான AICUF இதை கண்காட்சியாக சொல்லிற்றாம் இந்த […]

கீழடியில் அகழாய்வினை நிறுத்திவிட்டார்கள்

கீழடியில் அகழாய்வினை நிறுத்திவிட்டார்கள். இரண்டு ஆண்டுகளாக தோண்டினார்கள், அதில் கிடைக்கபெற்ற பொருட்களை ஆய்வுசெய்ததில் அது கிட்டதட்ட 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என தெரியவந்தபின் தோண்டுவதில் ஏனோ இவர்களுக்கு விருப்பமில்லை மெதுமெதுவாக அமைதியாகி மொத்தமாக மூடிவிட்டார்கள் இதில் ஏதோ பெரு மர்மம் உள்ளது என்பதும், எதனையோ சொல்ல விரும்பவில்லை என்பதும் உண்மை ஆதிச்சநல்லூரிலும் இதே கொடுமைதான் அரங்கேறிற்று, அங்கு கிடைத்த பொருட்கள் கிட்டதட்ட 6 ஆயிரம் காலத்திற்கு முற்பட்டவை என செய்திகள் வந்தபின் அதனையும் நிறுத்தினார்கள் இப்பொழுது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications