பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முதலைகள் அலற தொடங்கி இருப்பது குளம் சுத்தமாகின்றது என்பதற்கு சாட்சி

சுதந்திரம் வாங்கியவுடன் புதிய இந்தியாவினை கட்டி எழுப்ப தயாரானது இந்தியா, ஆனால் கஜானா காலி. இந்நாட்டை விவசாய அடிப்படை நாடாகவும், தொழிலதிபர்களை கட்டுபடுத்தும் சோஷலிச நாடாகவும் அமைக்க பட்டேல் போன்றவர்களுக்கு ஆசை இருந்தது ஆனால் நேரு போன்றோர் விவசாயம் போன்ற உற்பத்திகளை விட தொழில்துறை மகா அவசியம் என்றார், அதில் தவறேதுமில்லை. தேர்தல் உட்பட பல விஷங்களுக்கு நிதி தேவையாய் இருந்தது அன்றைய டாட்டா போன்றோர் அள்ளி கொடுத்துவிட்டு இந்நாட்டின் சட்டம் தொழிலதிபர்களுக்கு சாதகமாய் இருக்குமாறு பார்த்து […]

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்க வந்துவிட்டார்

எதிர்பார்த்தபடியே சரவணா ஸ்டோர் அண்ணாச்சி நடிக்க வந்துவிட்டார், அவரே தயாரித்து அவரே நடிக்க போகின்றாராம் அப்படியே அவரே படத்தையும் பார்த்துவிட்டால் நல்லது சிந்தாமணி செல்வம் என்றொரு சிறுநூல் உண்டு, அதிலொரு பாடல் இப்படி வரும். பரத்தை தோழியிடம் கேட்பாள் அன்னையே அனைய தோழி! அறந்தனை வளர்க்கும் மாதே! உன்னையோர் உண்மை கேட்பேன் உரைதெளிந்து உரைத்தல் வேண்டும் என்னையோ புணருவோர்கள் எனக்குப் பேரின்பம் நல்கி பொன்னையும் கொடுத்துப் பாதப் போதினில் வீழ்வ தேனோ? அதாவது ஏ தோழியே, நீ […]

அதிர்ச்சி அளிக்கின்றது

தெலுங்கானா அதிர்ச்சி தீருமுன்பே கோவையில் பள்ளி மாணவியினை ஒரு கோஷ்டி பாலியல் வல்லுறவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கின்றது இப்பொழுதெல்லாம் காதலர்கள் தனியாக ஒதுங்குவதும், அதை கவனிக்கும் சமூக விரோதிகள் அவர்கள் வீட்டில் சொல்ல அஞ்சுவார்கள் என கணித்து அந்த பெண்ணை நாசமாக்குவதும் தொடர்கதையாகின்றது கல்லணையில் ஒருவனை கொன்றே விட்டார்கள் ஓரிரு சம்பவம் வெளிதெரிகின்றதே தவிர நிறைய தெரிவதில்லை என்பதுதான் நிஜம், மிரட்டியே காரியம் சாதிக்கும் கும்பல் அதிகபட்டுவிட்டது போதாகுறைக்கு வீடியோ எடுத்தும் மிரட்டுகின்றார்கள் இதெல்லாம் தடுக்க தனி […]

ராதாரவி பாஜக பக்கம் வந்திருப்பதுதான் காலத்தின் கோலம்

கடவுளே இல்லை என அழிச்சாட்டியம் செய்து, பெரியார் எனும் மந்திரவாதி ஏற்றிவிட உச்சி மரத்தில் ஆட்டம் போட்ட எம்.ஆர் ராதாவின் மகன் ராதாரவி பாஜக பக்கம் வந்திருப்பதுதான் காலத்தின் கோலம் ராமாயணம் கீமாயணம் என நாடகமெல்லாம் நடத்திய ராதாவின் மகன் ராமர் கட்சிக்கு வந்திருப்பது என்பது ஆத்திகத்தின் வெற்றி, நாத்திகத்தின் படுதோல்வி.. தந்தை செய்தது எல்லாம் தவறு என ஒப்புகொண்டு வந்திருக்கும் ராதாரவிக்கு வாழ்த்துக்கள், இன்னொரு நாளில் உதயநிதியும் ஓடி வரலாம்

ஈரானில் மக்கள் போராட்டம் அடக்கபட்டுவிட்டது

ஈரானில் மக்கள் போராட்டம் அடக்கபட்டுவிட்டது, கலவரத்தை அடக்கிவிட்டோம் என சொல்லிவிட்டு அடுத்த ஆயுதத்தை வீசியிருக்கின்றது ஈரான் ஆம் 8 அமெரிக்க உளவாளிகளை கைது செய்திருக்கின்றது, அவர்கள் அமெரிக்க சி.ஐ.ஏவினால் பயிற்சி அளிக்கபட்டு ஈரானுக்குள் புகுத்தபட்ட ஈரானியர்கள் என்றும் அவர்களே ஈரானிய கலவரத்துக்கு காரணம் என சொல்லிவிட்டது இவர்கள் பத்திரிகையாளர் மற்றும் சமூக ஆர்வலர் என வெளிநாடுகளுக்கு அழைக்கபட்டு அங்கு ஈரானில் குழப்பம் விளைவிப்பது எப்படி என பயிற்சியும் பெரும் பணமும் கொடுத்து அனுப்பியதாக சொல்கின்றது ஈரான் உண்மையில் […]

இலங்கை தமிழரில் ஒரு கோஷ்டி இருக்கின்றது

இலங்கை தமிழரில் ஒரு கோஷ்டி இருக்கின்றது, அது புலிகளை பிடிக்காதது அதே நேரம் இந்தியாவும் அவர்களுக்கு பிடிக்காது அவர்கள் அன்னாளைய யாழ்பாண மேலாதிக்க கோஷ்டியின் வாரிசுகள், இந்த யாழ்பாண கோஷ்டிகள் தமிழ் தமிழ்கலாச்சாரம் என்பார்கள் தமிழில்தான் பேசுவார்கள் ஆனால் மேற்குலகத்துக்கு அடிபணிந்து கிடப்பார்கள் அவர்கள் வெல்பவர் பக்கம் சேர்ந்து கொள்வார்கள், பிரபாகரன் ஆண்டால் அவனுக்கு சல்யூட் சிங்களன் ஆண்டால் அவனுக்கும் சல்யூட் கார்த்திகை 26 என கிளம்புவார்கள், அடேய் ஒன்று கார்த்திகை 12 என சொல்லுங்கள் அல்லது […]

மழை அதன் கடமையினை சரியாக செய்கின்றது

மழை ஒரு நாட்டின் வரம், அது இயற்கையான விஷயமும் கூட, அது அன்றி அமையாது வாழ்வு அந்த மழை , அதுவும் பருவமழை பொழிவது ஏதோ உலக அதிசயம் போல தமிழ்நாட்டு செய்திகள் சொல்லிகொண்டிருப்பது பெரும் வேடிக்கை அரசு ஓடி ஓடி உதவுகின்றதாம், ஒரு மழையினை சமாளிக்க முடியா அளவு , விடுமுறை விடும் அளவு தமிழ்நாட்டை யார் சீரழித்து வைத்திருக்கின்றார்கள் என்றால் அவர்கள்தான் சாதாரண மழையினை தாங்கமுடியா அளவு தமிழகத்தை கெடுத்திருப்பதும் அவர்களே, பின் மழை […]

அழுத பிள்ளைக்குத்தான் பிஸ்கட் கிடைக்கும்

இந்த நிலையிலும் தனக்கு மந்திரி பதவி இல்லை என்றால் ஒருகாலமும் இல்லை என மனம் வெறுத்த சுப்பிரமணியன் சாமி கடுமையாக ஆட ஆரம்பித்துவிட்டார் அன்னார் மேல் ஏகபட்ட சர்ச்சை பின்னணி இருப்பதால் பாஜக தயங்குகின்றது, ஆனால் விடுவாரா சாமி? முன்பெல்லாம் ஆட்சியில் இருக்கும் கட்சிதான் அன்னாருக்கு பிடிக்காது, இப்பொழுதெல்லாம் ஆட்சியில் இருக்கும் மந்திரிகள் அவருக்கு பிடிப்பதில்லை அழுத பிள்ளைக்குத்தான் பிஸ்கட் கிடைக்கும் என்பதில் மகா உறுதியாய் இருக்கின்றார் சாமி, ஆனால் வீம்புக்கு அழும் பிள்ளைக்கு முதுகில் நாலு […]

ஒரு பேனை கொண்டு வைத்திருக்கின்றனர்

பொன் வைக்க வேண்டிய இடத்தில் பூவை வைக்க பார்த்தனர் பாஜகவினர், பூவும் வைக்க முடியா இடத்தில் ஒரு பேனை கொண்டு வைத்திருக்கின்றனர் ஆம் நமீதா என்பவர் பாஜகவுக்கு வந்துவிட்டார், அம்மணிக்கு கட்சி மேடை என்பது சினிமா ஷூட்டிங் போன்றது, முன்பு ஜெயலலிதா மேடைகளில் தோன்றினார் இப்பொழுது பாஜக மேடையில் தோன்றியிருக்கின்றார் குஷ்பு வரவேண்டிய இடத்திற்கு நமீதா வந்திருப்பது பாஜக சோகம்.. இதைத்தான் வள்ளுவன் சொன்னான் “கனியிருப்ப காய் கவர்ந்தற்று”. இந்த குறளை பாஜகவினரிடம் சொன்னால் “யானை பிழைத்த […]

ஸ்வீடன் கம்பெனியின் விமானங்கள் தரமானவை அல்ல

ஸ்வீடனின் இந்தியாவுக்கான தூதர் தன் நாட்டு கம்பெனியான சாப் தயாரிப்பான கிரிப்பன் விமானங்களை வாங்கலாம் என்கின்றார் அதாவது இந்தியா 114 விமானங்களை வாங்கும் திட்டத்தில் இருக்கின்றது, 36 விமானங்களை ரபேலை கொண்டு நிரப்பியாயிற்று மீதமிருக்கும் விமானங்களை வாங்க இந்தியா முயற்சிக்கின்றது இதில் அமெரிக்க எப் 21 ரஷ்யாவின் சூ 57 போன்றவை பரிசீலனையில் உள்ளன‌ இதில்தான் இந்த ஸ்விடன் தூதர் களத்துக்கு வருகின்றார், இது ஆச்சரியமானது பொதுவாக ஆயுத தயாரிப்பு கம்பெனிகளே இதுபற்றி பேசும் அரசுகள் பேசாது […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications