பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

வீர சிவாஜி : நினைவு நாள்

8ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்தே இத்தேசம் அந்நியருக்கு எதிர்ப்பினை தெரிவித்துகொண்டே இருந்தது, இங்கே ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் எல்லோரும் பெரும் எதிர்ப்பினை சந்தித்துகொண்டே இருந்தனர் கோரி, கஜினி முதலான மன்னர்கள் கொள்ளையடித்துவிட்டு ஆப்கனுக்கே ஓடினர், இங்கிருந்து ஆளும் எண்ணமெல்லாம் இல்லை, எதிர்ப்பு அப்படி இருந்தது பின்னாளைய பாபர் வந்து முகல் வம்சத்தை ஸ்தாபித்தாலும் அவருக்கும் ஆப்கன் ஏக்கம் இருந்திருக்கின்றது, அவர் கல்லறை அங்குதான் இருக்கின்றது. இந்தியாவில் தங்கள் வம்சம் ஆளும் என அவர் நினைத்திருக்க வாய்பில்லை பாபரின் வம்சாவளி […]

தமிழகமும் சமணமும்.

ஏப்ரல் 1 2015ல் முகநூலில் பதிவு செய்தது. தமிழகமும் சமணமும். பண்டைய இந்தியாவில் அவ்வப்போது சில மகான்கள் உதித்தார்கள். உலகம் நிலையற்றது என்பதனையும் , வாழ்க்கை தத்துவத்தையும் வாழும் முறையையும் சொல்லி கொடுத்தார்கள். அவர்களில் ஒருவர்தான் வர்த்தமானர், 24ம் தீர்த்தங்காரர் அல்லது மகாவீரர் என்று அழைக்கபடும் மகான். அவர் ஒன்றும் ஆள்திரட்டி அடித்து ஒடுக்கிய மாவீரனோ அல்லது மகா அரசனோ அல்ல, தன்னை வென்றார். அமைதியான வாழ்க்கைக்கு அஸ்திவாரமிட்டார், சொல்லபோனால் மக்களின் மனங்களை ஜெயித்தவீரர், அந்த மகாவீரர். அவர் […]

தமிழ் அழிகின்றதாம்.. பலர் தார்சட்டி தூக்கியாயிற்று…

மைல் என்பது தமிழ்சொல்லா? என்பதெல்லாம் பற்றி கூட யோசிப்பதில்லை. தமிழை வடமொழி கலப்பில் இருந்து விடுவிக்க வந்தவர்களின் அந்த காலகட்டம் நன்றாகத்தான் இருந்தது, திமுக மட்டும் அல்ல, மறைமலை அடிகளின் தனித்தமிழ் கழகம், ம.பொ.சியின் தமிழரசு கழகம் போல திமுகவும் அந்நாளில் தமிழை காப்பாற்றத்தான் செய்தது சமஸ்கிருதம் கலந்திருந்த தமிழை மிக சுத்தமாக்கி, பல தமிழ்பெயர்களை அவர்கள் தமிழ்படுத்தினார்கள், அப்படியே இந்தி எதிர்த்தார்கள், பெரும் போர் நடத்தினார்கள், அப்படியே ஆட்சிக்கும் வந்தார்கள் அண்ணா இருக்கும் வரை பல […]

மரணம் மனிதனுக்கு பல விஷயங்களை போதிக்கின்றது…

மரணம் மனிதனுக்கு பல விஷயங்களை போதிக்கின்றது, அதுவும் மனதிற்கு நெருக்கமானவர்கள் மரணம் மிகவும் பாதித்துவிடுகின்றது அதிலிருந்து வெளிவருவது எளிதில் சாத்தியமில்லை பெற்றெடுத்த‌ தாய் உண்டு, ஆனால் வளர்த்தெடுத்த தாய்மார்கள் பலர் உண்டு, அவர்களில் ஒருவரை இழந்துவிட்டேன். அந்த பெண்மணியிடம் கற்றுகொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம் உண்டு, ஒரு பெரும் குடும்பத்தின் மூத்த மருமகள், மிக பொறுப்பான பதவியில் இருப்பவரின் மனைவி, பிள்ளைகளுக்கு நல்ல தாய் எபப்டி இருக்கவேண்டும் என்பதன் எடுத்டுகாட்டு அவர். அப்படி ஒரு சுறுசுறுப்பான உழைப்பு […]

இன்று ஏப்ரல் 1 .. முதன் முதலாக சட்டமன்றம் சென்றார் கலைஞர்…

இதே போன்று ஒரு ஏப்ரல் 1 தேதி முதன் முதலாக சட்டமன்றம் சென்றார் கலைஞர் என ஆளாளுக்கு சொல்லிகொண்டே இருக்கின்றார்கள் கலைஞரே இதுபற்றி அதிகம் சொன்னதில்லை, 1957 என்பதோடு நிறுத்திகொள்வார் தேதியினை சொன்னால் எப்படி எல்லாம் கலாய்ப்பார்கள் என அவருக்கு தெரிந்திருக்கின்றது.. மனிதர் எதனை மவுனிக்கவேண்டுமோ அதில் கவனமாகத்தான் இருந்திருக்கின்றார் கலைஞர் சட்டமன்றத்தில் பணியாற்ற தொடங்கி 60 வருடம் ஆகின்றது, நிச்சயம் பெரும் சாதனை, இன்னொருவர் இனி அதனை முறியடிப்பது இப்போதைக்கு சாத்தியமில்லை அதிமுக என்றொரு கோடாரி […]

ரஜினியினை சந்தித்தார் மலேசிய பிரதமர்

ரஜினியினை சந்தித்தார் மலேசிய பிரதமர் ‘அந்த ரஞ்சித் பய பேச்ச கேட்டு இனி மலேசிய கதைகளில் நடிக்காதீங்க, அவனுக்கு ஒண்ணுமே சரியா தெரியல‌ எங்க நாட்டினை பற்றி உண்மையினை நல்லவிதமாக சொல்லும் கதைகளில் நடியுங்கள்” என மலேசிய பிரதமர் சொல்லியிருப்பாரோ? ஆனாலும் ரஜினிக்கு மச்சம், பல‌ நாட்டு அதிபர்களும் தேடி வருகின்றார்கள் இலங்கை அதிபரை சந்திக்க முடியாமல் திருமா தடுத்தாலும், மலேசிய பிரதமரை தன் வீட்டிலே சந்தித்து “ஹா ஹா ஹா” என சிரித்துகொள்கின்றார் ரஜினி அவர் […]

ஒரு விவசாயி வாடுகின்றான் என்றால்…

பல விவசாயிகள் வாழவில்லையா? விவசாயத்தில் அப்படி என்ன நஷ்டம்? எல்லா மார்க்கெட்டிலும் காய்கறிகள் குவிந்துதானே கிடக்கின்றது? இப்படி எல்லாம் பலர் பேசிகொண்டிருக்கின்றார்கள் அந்த விவசாயம் எப்படி நடக்கின்றது என கவனியுங்கள், அந்த தொழில் யாரையாவது அந்த குடும்பத்தில் ஓட அடித்திருக்கும், கதற கதற விரட்டியிருக்கும் அவனும் எங்கெல்லாமோ ஓடி கையில் கொஞ்சம் பணம் சேர்ப்பான், சேர்த்தவுடன் புத்தி எங்கே போகும்? கிணற்றில் நீர் இருக்கின்றதா? ஏதாவது நிலத்தில் செய்யலாமா? நாம் இல்லாவிட்டாலும் வீட்டில் யாராவது பார்த்துகொள்வார்கள். கினற்று […]

சமூகம் திருந்தினாலே விவசாயி வாழ்வான்

தக்காளி விலை சரிந்தால், கிலோ 10 பைசா என சந்தோஷபடுவனும், காய்கறிகடையில் 50 பைசா கூட கொடுக்க ராம்ஜெத்மலானி போல வாதம் புரிபவனும்தான் இன்று விவசாயிக்கு ஆதரவாக பேசிகொண்டிருக்கின்றான் வெங்காய விலை ஏறினால் சீறுபவன் தான் இன்று விவசாயிக்கு ஆதரவாம் உணவகத்தில் வாழை இலை போட்டால் செலவு என பாலித்தீன் பேப்பர் போடுபவன் எல்லாம் இன்று விவசாயிக்கு கத்திகொண்டிருக்கின்றான். மோட்டார் முதல் பைப் வரை பாமர விவசாயிடம் கொள்ளை விலைக்கு விற்கும், விவசாயிக்கு செல்லவேண்டிய நீரினை கேன்வாட்டர், […]

அம்மணமாய் ஆர்பரிப்போம் ….

டெல்லியில் நடக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் ஒரு குழு போராட கிளம்பிற்று அது ஒரு விவகாரமான குழு என்பதால் வித்தியாசமாக சிந்தித்துவிட்டது, அதாவது நாடே நம்மை திரும்பிபார்க்க வேண்டும் என யோசித்திருக்கின்றார்கள் சும்மா கத்தினால் நாய் கூட திரும்பாது, அப்படியானால் கத்தி பியோஜனமில்லை, எதையாவது அதிரடி காட்டினால் தேசம் திரும்பும், காட்ட வேண்டும், எதனையாவது காட்ட வேண்டும் இந்த வேகத்தில் சிந்தித்தபொழுது அவர்களுக்கு டெல்லி விவசாயிகளின் துன்பம் நினைவுக்கு வரவில்லை, மாறாக கோவணம் நினைவுக்கு வந்துவிட்டது, அதனை […]

வைகோ நிகழ்த்தும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

  மதிமுக எனும் கட்சி ஈழதமிழர்களுக்காக‌ நிரம்ப உழைத்தாகிவிட்டது, இப்பொழுது தமிழர்களுக்காக உழைக்க கிளம்பிவிட்டது எம்ஜி ராமசந்திரனுக்கு நூற்றாண்டு விழா நடத்தி தன் பெரும் தார்மீக கடமையினை அது நிறைவேற்றிகொண்டிருக்கின்றது தமிழர்களை மகிழ்வித்த எம்ஜிஆருக்கு அது நூற்றாண்டு விழா நடத்துகின்றது வைகோ சரோஜாதேவியினை அழைத்தெல்லாம் எம்ஜிஆர் நிகழ்ச்சி நடத்துகின்றார், வெண்ணிற ஆடை நிர்மலா, லதா எல்லாம் ஏன் அழைக்கவில்லை என தெரியவில்லை எம்ஜிஆர் இருக்கும் வரை அவரை தீவிரமாக எதிர்த்த கோப்பால் சாமி, இப்பொழுது எம்ஜிஆர் புகழ்பாட […]