பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ஜேசுதாஸின் காந்தகுரல்

காலையும் மாலையும் ஜேசுதாஸின் சபரிமலை பாடல்களை ஒலிக்கவிட்டு அதிலே உருகி கிடக்கின்றான் அறை நண்பன் காலை அவனை ஜேசுதாஸே எழுப்புகின்றார், அவரும் அவனுடனே அய்யப்பனை வணங்குகின்றார், அவரே உறங்கவும் வைக்கின்றார் ஒரு தெய்வீக குரல் அவருடையது, ஏதோ ஒரு பரிவார தேவதையின் குரலாக அது இங்கு ஒலிக்கின்றது, அப்படி ஒரு உருக்கம், தெய்வீகம் நிச்சயம் அய்யப்பனின் ஆசிபெற்றவர் ஜேசுதாஸ் இல்லையெனில் அப்படி பாடல்கள் வாய்ப்பே இல்லை ஜேசுதாஸ் உருகுகுகின்றார் நாமும் உருகுகின்றோம் ஜேசுதாஸ் கலங்குகின்றார் நாமும் கலங்குகின்றோம் […]

நிலத்தடி நீரை அள்ள தொடங்கிவிட்டார்கள்

கூடங்குள அணுவுலையின் பெருந்தேவைக்கு நிலத்தடி நீர் பயன்படுவது குறித்து வேதனை பட்டிருக்கின்றார் ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ இன்பதுரை ஆம், கூடங்குள அணுவுலை என்பது பக்ரா நங்கலையே திறந்துவிட்டாலும் போதாத அளவு தேவையுடையது, இந்நிலையில் 3ம் மற்றும் 4ம் அணுவுலை கட்டுகின்றார்கள் முன்பு பேச்சிபாறை அணையில் இருந்து நீர் கொண்டு செல்ல திட்டமிடபட்டது குமரி மக்கள் எதிர்ப்பால் அது கைவிடபட்டு தாமிரபரணியினை திருப்ப முயற்சித்து அதுவும் தோல்வி பின் கடல்நீரை சுத்திகரிக்க போகின்றோம் என கிளம்பினார்கள், இப்பொழுது கடலில் […]

அற்புதமான ஏற்புரை

எங்கே எதை எப்படி பேசவேண்டும் என்பது அழகாக அவருக்கு தெரிகின்றது அற்புதமான ஏற்புரை.. வாழ்த்துக்கள் (ஆக தமிழ்நாட்டு பத்திரிகையாளரிடம் வேண்டுமென்றேதான் வம்பிழுக்கின்றார் போல…) https://m.facebook.com/story.php?story_fbid=2616478758430197&id=100002042948330

முன்னாள் புலி கருணாவின் குரல்

கோத்தபாய ஆட்சிக்கு வந்ததும் ஒரு குரல் உரக்க கேட்கின்றது அது முன்னாள் புலி கருணாவின் குரல் பிரபாகரனின் மெய்காப்பாளனாக இருந்து பின் பிரபாகரனிடம் இருந்து உயிர்தப்பிக்க கோத்தபாயாவிடம் சரணடைந்த அந்த கருணாவின் குரல் அன்னார் மிக பகிரங்கமாக பிரபாகரன் மரணம் அடைந்தது உண்மை, அதனால் அவருக்கு வீரமரணம் என அஞ்சலி செலுத்துவதுதான் சரி என பேசிவிட்டார் இன்னும் ஒருவாரத்தில் மாவீரர் தினம் வரும் நிலையில் மனிதர் இப்படி பேசுவது எல்லாம் அலரி மாளிகையில் கோத்தபாய காலடி எடுத்து […]

தேவையும் அத்திவாசியமுமே ஒரு சமூகத்தை போராட வைக்கும்

தேவையும் அத்திவாசியமுமே ஒரு சமூகத்தை போராட வைக்கும், மற்றபடி ஒரு பயலும் போராட வரபோவதில்லை தாங்கமுடியா கெடுபிடிகளிலும் , இனி இழக்க ஒன்றுமில்லை எனும் நிலையிலும் ஒரு சமூகம் பொங்கி எழும் ஈரானிய சமூகம் அப்படி பொங்கி பெரும் போராட்டம் நிகழ்கின்றது, கடும் இறுக்கமான ஈரானிய அரசின் துப்பாக்கி சூட்டில் 36 பேர் இறந்தாயிற்று இதில் வேடிக்கை என்னவென்றால் கடந்தமாதம் ஈராக்கிய மக்களின் கிளர்ச்சியினை எப்படி ஒடுக்குவது என ஈரான் பாடம் நடத்திவிட்டு வந்தபின் சொந்த மண்ணிலே […]

இந்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கானது

ஒவ்வொரு மாதத்திலும் அஷ்டமி இந்துக்களுக்கு விஷேஷமானது, அதில் இந்த கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி கால பைரவருக்கானது கால பைரவர் காவலின் வடிவமாக கருதபடுபவர், சனிக்கே அவர்தான் குரு என்பதால் 12 ராசிக்காரர்களும் சனியின் பிடியில் இருந்து விடுபட அவரை வணங்கலாம் என்கின்றது சோதிட சாஸ்திரம் கால பைரவர் சிவனின் ருத்ரகோல சாயல், அந்த கால பைரவர் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பெயரில் வணங்கபடுவார், தென்னகத்து சுடலை சாமி கூட அந்த கால பைரவரின் ருத்திரகோல சாயலே.. […]

முடிந்தால் அதை வாங்கிபோட்டு லாபமாக்க வேண்டியதுதானே?

ஏர் இந்தியாவினை மோடி விற்கின்றார் என ஒரே ஆர்ப்பாட்டம், இதில் எவனாவது ஏர் இந்தியாவில் பயணிப்பவனா அந்நிறுவணத்தை காக்க முயன்றவனா என்றால் இல்லை, பாதி பயலுக்கு ஏர் இந்தியா விமானமே தெரியாது பாரத் பெட்ரோலியத்து ஊழியர்களின் கவர்னருக்கு நிகரான சம்பளம் பற்றி ஒரு பயலும் பேசமாட்டான் துபாய் ஏர் ஷோ காற்று வாங்கி கிடக்கின்றது, 2 விமானங்களே விற்கபட்டிருப்பதில் உலக தயாரிப்பு நிறுவணங்களே கதிகலங்கி போய் இருக்கின்றன‌ தமிழ்நாட்டில் அரசியல் செய்வதை விட மோசமாகிவிட்டது விமான போக்குவரத்து, […]

விஷயம் மூடி மறைக்கபடுகின்றது

விக்ரமின் மகன் துருவ் கார் ஏற்றி சில ஆட்டோக்களை நசுக்கியதாக செய்திகள் வருகின்றன, ஆனால் விஷயம் மூடி மறைக்கபடுகின்றது விக்ரம் கலைஞர் கருணாநிதி வீட்டு சம்பந்தி என்பது கூடுதல் தகவல் 1 ரூபாய் சில்லறை பிரச்சினை என்றாலே மொத்த தமிழ்நாட்டையும் கதற வைக்கும் ஆட்டோ சங்கங்கள் இப்பொழுது அவர்கள் போக்கில் மீட்டருக்கு மேல் அமைதி காக்கின்றார்கள்

இந்திரா சமாதியில் சோனியா அஞ்சலி

இந்திரா சமாதியில் சோனியா அஞ்சலி இந்திராவோடு இந்திராவின் கொள்கைகளையும் தேசம் புதைத்துவிட்டது, சோனியாவுக்கும் அதில் பங்கு உண்டு ஆம் இந்தியா ஒரு அதிரடி தலமையினையே விரும்பியது, இந்நாட்டின் எதிர்பார்ப்பு அது. மிசாவினை தாண்டி இந்திரா அசைக்கமுடியா இடத்துக்கு வந்ததும் அப்படித்தான் ஆனால் சோனியா தடுமாறினார், ஒருவிதமான மென்மையான போக்கை கொண்டிருந்தார், மாநில கட்சிகளின் பிடிக்குள் அடங்கினார் கருணாநிதி “சோனியா சொக்க தங்கம்” என சொல்லவும் இந்தியாவே அட இந்த ஆளே சோனியாவினை பாராட்டினால் உண்மை என்னவாக இருக்கும் […]

போலீஸ் அனுமதி கிடைக்குமா?

சபரிமலை தரிசனத்துக்கு தமிழக பெண்கள் 139 பேர் பதிவு – போலீஸ் அனுமதி கிடைக்குமா? போலிஸ் அனுமதி கிடைக்குமா என்பது தெரியாது, ஆனால் சிதம்பரம் கோவிலில் நடந்தது போல் நடக்க வாய்ப்பு பிரகாசமாக உள்ளது

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications