ஜேசுதாஸின் காந்தகுரல்
காலையும் மாலையும் ஜேசுதாஸின் சபரிமலை பாடல்களை ஒலிக்கவிட்டு அதிலே உருகி கிடக்கின்றான் அறை நண்பன் காலை அவனை ஜேசுதாஸே எழுப்புகின்றார், அவரும் அவனுடனே அய்யப்பனை வணங்குகின்றார், அவரே உறங்கவும் வைக்கின்றார் ஒரு தெய்வீக குரல் அவருடையது, ஏதோ ஒரு பரிவார தேவதையின் குரலாக அது இங்கு ஒலிக்கின்றது, அப்படி ஒரு உருக்கம், தெய்வீகம் நிச்சயம் அய்யப்பனின் ஆசிபெற்றவர் ஜேசுதாஸ் இல்லையெனில் அப்படி பாடல்கள் வாய்ப்பே இல்லை ஜேசுதாஸ் உருகுகுகின்றார் நாமும் உருகுகின்றோம் ஜேசுதாஸ் கலங்குகின்றார் நாமும் கலங்குகின்றோம் […]