பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

திராவிட புரட்சியன்றி வேறல்ல‌

அந்த திருச்சி மாவட்டம் அரியலூர் பகுதி கல்லகுடி ஏரியா சுண்ணாம்பு பாறைகள் நிறைந்தபகுதி என்பதால் அங்கு சிமென்ட் ஆலை வந்தது, டால்மியா எனும் கம்பெனி ஆலை தொடங்கியது, வடக்கே ஜாம்ஷெட்பூர் நகர் ஜாம்ஷெட்ஜி டாட்டா பெயரால் உருவானது போல டால்மியா நகரும் உருவாயிற்று அது 1930களிலே உருவான திட்டம், மெல்ல ஆரம்பித்து 1950களில் பெருந்திட்டமாக செயல்பட ஆரம்பித்தது, ஜாம்ஷெட்பூர் போல டால்மியாபுரம் உருவானது அவ்வளவுதான் போர்முரசு கொட்டியது திமுக, தமிழன் மண்ணில் அன்னிய பெயரா என பொங்கிற்று, […]

ஏ பாளை சிறை நிர்வாகமே பதில் சொல்……….

ஆக இனி என்ன வரலாற்றை தோண்டவேண்டி இருக்கின்றதென்றால் இதைத்தான்.. “1965ல் பாளையங்கோட்டை சிறையில் பாம்புகளும் பல்லிகளும் இருந்தனவா இல்லையா? பாம்புகள் இருந்ததென்றால் இதுவரை ஏன் ஊமைதுரை காலத்திலிருந்து இன்றுவரை யாரும் பாம்புகடித்து சாகவில்லை? கருணாநிதி செல்லில் மட்டும் பாம்பு வந்தது எப்படி? அது அவரை கடிக்காமல் சென்றது எப்படி? கருணாநிதி அவதாரமும்மல்ல அவர்கையில் மகுடியும் இல்லாதபொழுது எப்படி தப்பினார்? ஏ பாளை சிறை நிர்வாகமே பதில் சொல்……….”

அந்த தொழிலாளிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்

6 இந்தியர் ஓமானில் மண்சரிவில் செத்திருக்கின்றார்கள் உழைத்து பிழைத்து பொருளோடும் நலமோடும் வருவார்கள் என எதிர்பார்த்த 6 குடும்பங்கள் கதறிகொண்டிருகின்றன‌ வலி மிகுந்த நேரமிது, எதிர்பாத்திருந்தோரை பிணமாக பார்ப்பதெல்லாம் விளக்க முடியா வலிகள்,இதயத்தை பிடுங்கி எடுக்கும் வலி அக்குடும்பங்களை தொட்டிருப்பது மகா வேதனையான விஷயம் அந்த தொழிலாளிகளுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள். அவர்கள் இந்தியாவில் எங்கோ பிறந்து மஸ்கட் மண்ணில் மொத்தமாக மடியவேண்டும் என்ற அவர்களின் வல்விதி மிக சரியாக தன் கொடுமையினை நிகழ்த்திவிட்டது

திமுகவினருக்குள் ஏக குழப்பம் இருப்பது தெரிகின்றது

என்னடா இது? ஒரு திமுகக்காரன் ஷா கமிஷன் கலைக்கபட்டது அதில் ஆதாரமே இல்லை என்கின்றான், இன்னொரு திமுகக்காரன் பிரசன்னா நான் படித்த ஷா கமிஷனில் ஸ்டாலின் பெயர் உண்டு , பார்த்துவிட்டு அறிவாலய கழிவறை கழுவ வா என்கின்றான் கழிவறை கழுவுவது கேவலம் அல்ல என கோஷமிட்டது திமுக, கழிவறை தொழிலாளர் இல்லை என்றால் நான் இல்லை என உருகியவர் கருணாநிதி ஆனால் அதே திமுக உபி கழிவறை கழுவுவதை கேவலமாக கருதுகின்றது திமுகவினருக்குள் ஏக குழப்பம் […]

விளம்பரத்தில் நடிக்க வழிகாட்டியதே கருணாநிதியும் அண்ணாவுமே

1947ல் இந்தியா சுதந்திரம் பெற்று தேசம் பிரிந்து எல்லை எரிந்தபொழுது, இன்னும் இத்தேசம் சவலை குழந்தையாக கண்ணீருடன் தானே எழும்பிகொண்டிருந்தபொழுது, பாகிஸ்தானுடன் யுத்தம் என்றெல்லாம் அலைபாய்ந்திருந்தபொழுது, பட்டேல் இந்நாட்டை இரும்புகரத்தோடு ஒருங்கிணைத்தபொழுது நேருவும் காமராஜரும் சாஸ்திரியும் இந்நாட்டின் எதிர்காலத்துக்கு பெரும் திட்டம் தீட்டியபொழுது கலைஞர் என்ன செய்தார் தெரியுமா? ராஜகுமாரி, அபிமன்பு, மருத நாட்டு இளவரசி படங்களுக்கு வசனம் எழுதிகொண்டிருந்தார் அவரின் குருநாதர் அண்ணா நல்லதம்பி, வேலைக்காரி, ஓர் இரவு என சினிமாகதை எழுதினார் இந்த ராம்சந்தர் […]

பலரை ரகசியமாக பின் தொடர்கின்றது சிங்கள உளவுதுறை

யாழ்பாணத்துக்கு சென்னையில் இருந்து விமானபயணம் தொடங்கியது நல்லது, ஆனால் அச்சபடும் விஷயம் என்னவென்றால் அங்கிள் சைமனையும் அவரின் அடிபொடிகளையும் காணவில்லை ஒருவேளை யாழ்பாண விமானத்தில் ஏறி இலங்கையில் ஊடுருவிவிட்டார்களோ, அங்கு தேர்தல் நேரம் வேறு என்பதால் புலிகள் பாணியில் கோத்தபாய மற்றும் சஜித் பிரேமதாசாவினை குறிவைத்துவிட்டார்களோ என ரகசிய உலகில் அணல் அடிக்கின்றது ராஜிவ்காந்தியினையே கொன்ற சைமன் சிங்களனை சும்மாவிடுவானா? என சிங்கள உளவு உலகம் கடும் பதற்றத்தில் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன‌ இதனால் கண்ணாடி […]

தமிழ்நாட்டின் சோக தலைவிதி

அமெரிக்காவில் இந்தியர் ஒருவர் தன் மனைவியினை கொன்றிருக்கின்றார், விஷயம் பரிதாபமானது அவர்களுக்கு இப்பொழுதுதான் திருமணம் நடந்தது, அப்பெண் ஹிர்திக் ரோஷனின் ரசிகையாம், இது கணவனுக்கு பிடிக்கவில்லை அவன் படம் பார்க்காதே என கணவன் தடுத்தாலும் அம்மணி அதன் போக்கில் பார்த்துகொண்டே இருந்திருக்கின்றது, ஆத்திரமுற்ற கணவன் கொன்றே விட்டான் வெறும் சாதாரண விஷயத்துக்கு கொலையே செய்துவிட்டான் அந்த படுபாவி, நிச்சயம் அப்பெண் கொஞ்சநாளில் குடும்ப பொறுப்பு குழந்தை பொறுப்பு கூடும் பொழுது அதில் இருந்து விடுபட்டிருப்பாள் முதலில் மிக […]

ராமேஸ்வரத்தில் குருநாணக் நினைவிடம் அமைக்கபடும்

ராமேஸ்வரத்தில் குருநாணக் நினைவிடம் அமைக்கபடும் என சொல்லியிருகின்றார் பழனிச்சாமி, நிச்சயம் அவருக்கு இந்த யோசனை வந்திருக்காது, யாரோ கழுத்தை பிடித்து சொல்ல சொல்லியிருகின்றார்கள் இந்த அறிவிப்பு தேசிய ஒருமைபாட்டுக்கு நல்லது, தெற்கே ராணுவம் வியாபாரம் சுற்றுலா என பலவகையில் வரும் பஞ்சாபிய மக்களுக்கு தமிழகம் பால் நல்லுறவும் சகோதரத்துவமும் உண்டாகும் குருநாணக் நினைவிடம் ராமேஸ்வரத்தி அமைப்பது சரி பதிலுக்கு பெரியார் சிலை அமிர்தசரஸ் கோவில் முன் நிறுவபடவேண்டும் அல்லது அண்ணா கலைஞர் சிலை வேண்டும் என எவனாவது […]

திமுக அதிமுகவின் பி டீம்

சாலையில் கட்சிகொடி பெண் மேல் விழுந்து அவர் கீழே விழுந்து அவர் காலில் லாரி ஏறிற்று என்கின்றது கோவை செய்தி சமீபத்தில் பேனர் விழுந்து ஒரு பெண் இதே போல் செத்ததன் அதிர்ச்சி நீங்குமுன் அடுத்த அதிர்ச்சி இது எந்த கட்சிகொடி என பார்த்தால் அதே அதிமுக கொடி மக்களை கொல்லவே கொடியேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் , ஆனால் எல்லா தேர்தலிலும் அதுதான் வெல்கின்றது எப்படி? எதிர்கட்சி செய்யும் அழிச்சாட்டியம் அவர்களுக்கு உதவியாகின்றது, திமுக அதிமுகவின் […]

அவர் செல்லும் இடமெல்லாம் சிறக்கட்டும்

காசிமேடு காவல் ஆய்வாளர் சிதம்பர முருகேசன் என்பவர் மிக சிறப்பாக பணியாற்றியிருகின்றார், போதை பொருள் ஒழிப்பு, பாதுகாப்பு இன்னும் பல நற்காரியங்களை செய்ததால் சாமி படத்து விக்ரம் அல்லது சிங்கம் சூர்யா போல அவருக்கு நற்பெயர் இருந்தது அவரை பணிமாற்றம் செய்திருகின்றார்கள் ஆனால் காசிமேடு பகுதியே திரண்டுவந்து அவர் செல்ல கூடாது என போராடியிருக்கின்றது, குறிப்பாக பெண்கள் அலையாக திரண்டு அழுது ஆர்பரித்து அவரை செல்ல கூடாது என தடுத்திருக்கின்றார்கள். அம்மக்களின் உணர்வுகளை எம்மால் புரிந்து கொள்ளமுடிகின்றது. […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications