பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

நாளைக்கு சித்திரை 1

நாளைக்கு சித்திரை 1 தமிழ்புத்தாண்டு வாழ்த்து என சொல்லாவிட்டால் தலைகாட்ட முடியாது, சொல்லிவிட்டால் தலைஞர் சமாதிபக்கம் செல்ல முடியாது ஆனால் சொல்லாமல் தேர்தல் நேரம் சமாளிக்கவும் முடியாது பூரா பயலும் ஒரு வெறியோடு சுற்றிகொண்டிருக்கின்றான், தொலைத்துவிடுவான் வெரி டெலிகேட் பொசிஷன்.. சத்திய சோதனை ம்ம்.. இப்படி செய்யலாம் இனி புத்தாண்டு வாழ்த்துக்கு பதிலாக‌ ஒவ்வொரு மாதபிறப்புக்கும் வாழ்த்து சொல்லிவிடலாம் , சிக்கல் இல்லை இனி புத்தாண்டே தமிழனுக்கு கிடையாது மாத பிறப்பு மட்டுமே..

பகுத்தறிவு சிந்திக்கவா போகின்றது?

முத்துவேலருக்கு பல தலைமுறைக்கு முன்பே சமூக நீதி காத்த ஆரிய பார்ப்பானிய அட்டகாசத்தை ஒடுக்கிய திராவிட போராளி சிலை முன் கனிமொழி ஆசி பெற்ற காட்சி (அது மன்னன் சிலை, அவன் காலத்தில் அவன் கடவுள்,அவனே சர்வாதிகாரி, அவனே பாசிஸ்ட் பார்ப்பான் முதல் சூத்திரன் வரை அவனுக்கு கட்டுபட்டே இருந்தனர், திமுக குறீயிட்டில் சொல்ல வேண்டுமென்றால் அவன் ஆதிக்கவாதி, அடக்குமுறையாளன் இதை எல்லாம் சொன்னால் அவர்கள் பகுத்தறிவு சிந்திக்கவா போகின்றது? அதுவும் தேர்தல் நேரத்தில். ஒரு பாசிஸ்ட் […]

நாட்டுக்கு நல்லது

இந்த வருடம் இந்த குருத்து ஞாயிறு பெரிய வெள்ளி எல்லாம் தேர்தலையொட்டி வருகின்றது பொன் ராதாகிருஷ்ணன் குருத்தோலையுடன் “ஓசான்னா..” பாடபோகின்றார் அப்படியே பெரிய வியாழன் கிறிஸ்தவ சடங்கான பாதம் கழுவுதல் நிகழ்ச்சியில் 12 பேருக்கு என்ன 12 ஆயிரம் பேருக்கும் பாதம் கழுவி முத்தி செய்ய அவர் ரெடி தமிழிசை அக்கா முக்காடு இட்டுகொண்டு “பொறுத்தருளும் கர்த்தாவே எனது ஜனத்தின் பாவங்களை பொறுத்தருளும்” என சிலுவை பாதை சொல்ல போகின்றது “உம் ரத்ததால் சிகப்பு தாமரை மலரட்டும் […]

வழக்கம் போல காணவே இல்லை..

ராஜிவ் கொலைவழக்கு பற்றி ரகோத்தமன் எழுதிய புத்தகத்தில் இப்படி ஒரு காட்சி வரும் இந்த சின்ன சாந்தன் என்பவன் இப்படி சொல்வான் “அய்யா அவர் யாரென்று தெரியாது வெள்ளை ஆடை அணிந்து வருவார், அவரும் சிவராசனும் வை.கோ அடுத்த முதலமைச்சர் என்பதையும் அவர் முதலமைச்சர் ஆனபின் என்ன செய்ய வேண்டும் என்பதையும் சீரியசாக பேசிகொண்டிருப்பார்கள்” கவனியுங்கள் சீரியசாக பேசுவார்களாம் என்னது வைகோ முதலமைச்சராவார் என அந்த புலிகூட்டம் அவ்வளவு நம்பியதா , பின்னர் ஏன் மொத்தமாக அழிந்துபோக மாட்டார்கள்? […]

தேர்தல் துளிகள் 12/04/2019(1)

‘ஆக’ ன்னு சொல்லாம அடுத்த வார்த்தை ஸ்டாலினை பேச சொல்லுங்க பார்ப்போம் : சீமான் ராசா, அவர் உளறினாலும் உண்மையினை உளறுகின்றார் நீர் கத்தி கத்தி பேசினாலும் உண்மை என்பது கொஞ்சமும் இல்லை அவர் ஆக என பேசுவது இருக்கட்டும், நீர் ஒரு உண்மையினை பேசிவிடும் பார்க்கலாம் என்னதான் தமிழகத்தில் தாமரை மலராது கருகும் என திமுகவினர் சொல்லிகொண்டே இருந்தாலும், கலைஞர் வீட்டில் ஏற்கனவே தாமரை மலர்ந்துவிட்டது ஆம் முக ஸ்டாலின் மகளின் பெயர் “செந்தாமரை” அக்கா […]

தேர்தல் துளிகள் 27/03/2019 (2)

இந்திராகாந்தி மாதிரி மூக்கு இருப்பதால் பிரியங்காவால் வெற்றி பெற முடியாது – பாஜக மந்திரி செல்லூர் ராஜூக்கள் எல்லா கட்சியிலும் இருப்பார்களாம் பிரியங்காவின் மூக்கு இந்திரா போல் கூர்மையாக இருப்பதால் அவர் பிரதமராவார் என யாரோ இவரிடம் சொன்னார்கள், இவர் மறுத்தாராம் இந்திராவுக்கு மக்கள் மூக்கு பார்த்தா வாக்களித்தார்கள்? வைகோவினை உடன்பிறப்புகள் பாதுகாப்பதும், சுப்பிரமணியன் சாமியின் அட்டகாசத்தை பாஜகவினர் பல்லை கடித்து பொறுத்துகொண்டிருப்பதும் காங்கிரசார் திருமாவுக்கு பிரச்சாரம் செய்வதும் பிரேமலதாவினை ராமதாஸ் கோஷ்டி சகித்துகொண்டிருப்பதும் விதியின் பலன் […]

கடவுள் இருக்கான் பாலாஜி..

காமராஜர் கக்கனுக்கு பின் ஒரு சாமன்யர் காங்கிரஸில் பெரும் அடையாளமாக உருவாகிவருவது வரவேற்கதக்கது கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி இருவரில் யார் சிறந்தவர் என்றால் சாட்சாத் ஜோதிமணிதான் 42 வயதேயாகும் ஜோதிமணி பெரும் வரலாறு படைக்க வாழ்த்துக்கள் (கடந்த காலங்களில் பலமுறை இவரை தோற்கடிக்க பெரும் பணத்துடன் களமிறங்கிய செந்தில் பாலாஜி இப்பொழுது அம்மணிக்கு உதவியாக வந்து நிற்கின்றார் கடவுள் இருக்கான் பாலாஜி..)

தேர்தல் துளிகள் 27/03/2019 (1)

ராசாத்தி அம்மாள் நிச்சயம் முருகனிடம் வேண்டியிருக்க மாட்டார், ஆனால் வள்ளியிடம் வேண்டியிருப்பார் ராசாத்தி அம்மாளின் கஷ்டம் அந்த வள்ளி ஒருத்திக்குத்தான் முழுமையாக புரியும் என்பதால் வேண்டுதல் நிச்சயம் ஏற்கபட்டிருக்கும் முத்துவேலர் சொத்தே..முத்தமிழர் வித்தே..முத்துநகர் முத்தே… (இதுபோன்ற ஏக அடைமொழிகள் சங்கத்து கைவசம் உள்ளது, வேண்டியவர்கள் தொடர்பு கொள்ளவும்) தமிழ்நாட்டின் மிகபெரும் சாபக்கேடு அதிமுக அதுவும் அதன் அடுத்த வெர்ஷனான தினகரன் கோஷ்டியும் இத்தேர்தலோடு காணாமல் போக வேண்டும் (அதிமுக இல்லா இடத்தில் அதனையொற்றி களமிறங்க நினைக்கும் பாஜக […]

தேர்தல் துளிகள் 26/03/2019 (1)

ஒரு பைசா லஞ்சம் ஊழல் இருந்தால் விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம் : சீமான் சயனைடை கடி, குண்டுவெடித்து சாவு என போதித்த பிரபாகரனின் தம்பி எப்படி பேசுவார்? இப்படித்தான் பேசுவார்.. எப்பொழுதும் போராட்டம் சிறை என வாழ்ந்த அந்த எளிய தமிழச்சி, அன்றொரு நாள் மாபெரும் மக்கள் நல போராட்டத்திற்கு திமுக மகளிரணி சார்பாகதயாராகி களத்திற்கு சென்ற காட்சி இது நெற்றியில் உதயசூரியன் எல்லாம் வரைந்து வந்தது குறிப்பிடதக்கது கேப்டனுக்கு பேசுவதற்கு பயிற்சி அளிக்கபடுகின்றது, “ஒளிமயமான […]

எங்கள் பிரியதலைவியே வருக

ஏப்ரல் 1க்கு பின் காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்வேன் : குஷ்பு ஆக உடனே பாஜக அரசின் சொதப்பல்களை குறிப்பெடுத்து வைத்து குவிக்க வேண்டும், அது ஏகபட்டது இருப்பதால் சிக்கல் இல்லை. அதை எல்லாம் கொடுத்து தலைவி பிரச்சாரத்திற்கு வரும்பொழுது அவருக்கு வலு சேர்க்க வேண்டும், இதை விட என்ன பெரிய வேலை இருக்கின்றது? இதை செய்யாவிட்டால் சங்கம் நடத்துவதன் குறிக்கோளே அடிபட்டு போகும், சாத்தான் கூட அதன்பின் நரகத்தில் சேர்க்கமாட்டான் 2 ஆயிரம் ரூபாய் நோட்டு ஏன் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications