பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

ரஷ்ய புரட்சி

உலக வரலாற்றில் மானுடம் கண்ட திருப்பங்களில் மகத்தானது ரஷ்ய புரட்சி. எத்தனை புரட்சிகள் உலகில் நடந்திருந்தாலும் ரஷ்ய புரட்சியின் மகத்துவமே உலகிற்கு பெரும் மாற்றங்களை கொடுத்தது அதற்கும் முன் போலந்து வலயம், பிரெஞ்ச் புரட்சி, அமெரிக்க சுதந்திரம் என பல நிகழ்ந்தாலும் ரஷ்ய புரட்சி என்பது வரலாற்றை மாற்றி போட்டது அந்த புரட்சி நடந்த நூற்றாண்டு விழா நாளை தொடங்குகின்றது, அந்த செங்கொடி எழுந்து நூறு ஆண்டுகள் ஆகின்றது ரஷ்ய புரட்சியினை பாரதி வரவேற்று பாடிய காலமும், […]

சிதறல்கள்

முதலில் உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக ஒரு மனுதாக்கல் செய்ய வேண்டும் இந்த டிவிக்கள் இம்சை தாங்க முடியவில்லை, சின்னதம்பி மவுனராகம் எல்லாம் இடைவேளைக்கு பிறகு தொடரும் என்கின்றார்கள் அடடே இதைவிட என்ன பாக்கியம் வேண்டும் என அமர்ந்தால், தலைவி வருவார் என எதிர்பார்த்தால் ஏதோ அல்லக்கைகள் வந்து நிற்கின்றன‌ அட நமக்கு என்னாயிற்று? கஞ்சா அடித்தோமா? இல்லை குஷ்பு இப்படித்தான் இருப்பாரா? அய்யகோ அப்படியானால் தலைவி கனவில் கண்ட முகமா? என பல எண்ணங்கள் மாயமாய் சுழன்ற […]

அர்ஜுன ரணதுங்க

அர்ஜுன ரணதுங்க எனும் கிரிக்கெட் ஆட்டக்காரரை மறக்க முடியாது இலங்கை அணி 1980களில் தடுமாறியபொழுது அவர்தான் கேப்டன், மனிதர் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி அப்பொழுது இந்த கனடா, ஆப்கானிஸ்தான் போலிருந்த இலங்கை அணி இவர் தலமையில் குப்புற கிடந்தபொழுது சமிந்தவாஸ், டிசில்வா, ஜெயசூர்யா, முரளிதரன் போன்ற சிற்ந்த வீரர்கள் கிடைத்தார்கள், இதுவரை இலங்கை கண்ட மிக சிறந்த அணி அதுதான் அந்த அணி வலுவான ஆஸ்திரேலியாவினையும் விரட்டி கோப்பையினை கைபற்றியது, அப்பொழுது அவர் கேப்டன் அதனால் மிகபிரபலமான அவர் […]

சிதறல்கள்

ஜமால் கொலையில் பல தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றது முதலில் நம்பியார் ஸ்டைலில் “டேய் அந்த கசோகியினை தூக்கிட்டு வந்து என் முன்னால உயிரோடு போடுங்கடா” என்றுதான் மன்னர் சொல்லியிருகின்றாராம் அப்படி அந்த 15 பேர் கொண்ட குழு சென்றிருக்கின்றது, முதலில் ஜமாலை பேசி மசியவைத்து சவுதிக்கு கொண்டு செல்லத்தான் திட்டமாம், முடியாத பட்சத்தில் மயக்க ஊசி போட்டு கொண்டு செல்ல டாக்டர் சகிதம் சென்றிருக்கின்றார்கள் மிக நுட்பமான திட்டம்தான், ஜமால் சவுதி தூதரகம் உள்ளே வந்தது சிசிடிவில் […]

சிதறல்கள்

ஐ.எஸ் இயக்கத்தை தாக்குகின்றோம் என சிரியா மசூதிகளை தாக்கி இருக்கின்றது அமெரிக்கா இதுவே ரஷ்யா தாக்கி இருந்தால் அய்யகோ மசூதியினை தாக்குவதா இஸ்லாமியரே கொந்தளிப்பீர் என உலகில் சென்னை வரை கிளம்புவார்கள் ஆனால் அமெரிக்கா தாக்கினால் சத்தம் இருக்காது, உலக மீடியா தர்மம் இப்படி [ October 24, 2018 ] ============================================================================ இந்த உலகம் இன்றல்ல, அன்றே வியாபார ரீதியானது. ஒன்றை கொடுத்து ஒன்றை பெறுவது என்பது ஆதாமின் அடுத்த காலத்திலே இருந்திருக்கின்றது உலகின் ஆதி […]

சிதறல்கள்

“களங்கம் வந்தா என்ன பாரு அதுக்கும் நிலாவுன்னு பேரு அட மந்தையில நின்னாலும் நீ வீரபாண்டி தேரு….” [ October 11, 2018 ] ========================================================================== இன்று உலக பார்வை தினம் பார்வை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.. [ October 12, 2018 ] ========================================================================= மனிதர்களுடன் உரையாடும் முதல் ரோபோ விசாகப்பட்டினத்தில் அறிமுகம் இதென்ன பிரமாதம்? தமிழகத்தில் ரோபாக்கள் ஆட்சியே நடக்கின்றது, கட்டுபாடு மட்டும் டெல்லியில் இருக்கின்றது [ October 12, 2018 ] […]

இந்திய அமைதிபடை

இதே அக்டோபர் 10ம் தேதிதான் 29 வருடங்களுக்கு முன்பு இந்திய அமைதிபடை புலிகள் மோதல் தொடங்கியது. ஈழவரலாற்றில் முக்கியமான காலம் அது, புலிகள் ஈழதமிழரின் எதிர்காலத்தை,நிம்மதியினை ஒழிக்க தொடங்கிய நிகழ்வு அது ஏதோ அமைதிபடை என்பது புதிதாக சென்றது அல்ல, முன்பே சென்றது, இது தெரியாமல் பலர் புலம்புவர் அமைதிபடைக்கு முன்பே ஜேவிபி கிளர்ச்சியும் அதனை அடக்க இந்திய ராணுவம் கொழும்பிற்கு சென்றதும் இவர்களுக்கு தெரியுமோ தெரியாதோ? தெரியாவிட்டால் விட்டுவிடலாம். அதாவது அன்றிலிருதே இன்னொரு மூன்றால் நாடு […]

எஸ் 400 பாதுகாப்பு முறை

உள்நாட்டு நிர்வாகத்தில் மோடி சொதப்பிய இடங்கள் உண்டு, பெட்ரோல் விலையே சாட்சி ஆனால் உலக அரங்கில் நேரம் பார்த்து அடித்துவிட்டார், நிச்சயம் புட்டீனுடனான ஒப்பந்தம் இந்திய வரலாற்றின் மாபெரும் மைல்கல். அதுவும் இந்த பரபரப்பான காலகட்டத்தில் அது மோடியின் வெற்றி ரஷ்யாவிடமிருந்து எஸ்.400 ஏவுகனைகனை தடுப்பு சாதனத்தை வாங்கினால் இந்தியா மேல் பொருளாதார தடை என மிக பகிரங்கமாக மிரட்டியும் இந்தியா வாங்கிவிட்டது இது போக ரஷ்யாவுடன் கூட்டு ராணுவபயிற்சியிலும் இறங்கிவிட்டது அமெரிக்காவிற்கு கடும் ஆத்திரம் சந்தேகமில்லை. […]

பெர்லின் சுவர்

இரண்டாம் உலகபோரில் பெரும் தோல்வி கண்டது ஜெர்மனி, அதன் பின் இரு நாடுகளாக பிரியும் படி கத்திவீசபட்டது. மேற்கு ஜெர்மன், கிழக்கு ஜெர்மன் என பிரிக்கபட்டது. ஒன்றிற்கு அமெரிக்காவும் இன்னொன்றிற்கு சோவியத்தும் பொறுப்பேற்றன‌ பிரமாண்ட பெர்லின் சுவரும் கட்டபட்டது மேற்கில் முதலாளித்துவமும், கிழக்கே கம்யூனிசமும் கொள்கையாக்கபட்டன‌ ஆனால் மக்கள் ஜெர்மானியர்களாகவே உணர்ந்தனர், வாய்ப்புக்காக காத்திருந்தனர். சோவியத் உடைய மக்கள் எழுந்தனர் கிட்டதட்ட 45 வருட பிரிவினை இணைத்தனர், அந்த சுவரும் உடைபெற்றது வரலாற்றில் பிரிக்கபட்ட நாடு இணைந்த […]

வடமாராட்சி தாக்குதல்

அந்த வடமாராட்சி தாக்குதலில் புலிகள் கொல்லபடும் நிலையில் இருந்தனர், ஏராளாமன மக்கள் சாகும் நிலை இருந்தது, இனி புலிகள் தமிழரை காக்க முடியாது என்ற நிலை அது இந்தியா முற்றுகையினை விலக்க சொன்னது, ஜெயவர்ததனே கேட்கவில்லை, ராஜிவ் கப்பல் நிறைய உதவிபொருளை அனுப்பினார், இலங்கையோ திருப்பி அனுப்பியது ஐ.நா அனுமதி இன்றி விமானம் மூலம் உதவி பொருளையும் பாதுகாப்பிற்காக மிக் விமானத்தையும் அனுப்பி இலங்கையினை மிரட்டியது இந்தியா, அதன் பின்பே இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் வந்தது,அமைதியும் […]