பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

உண்மைகள் உறங்குவதுமில்லை, பொன்.சிவகுமாரன் மறைவதுமில்லை.

அது 1974ம் ஆண்டு, ஈழ தமிழர்களை சிங்கள அரசுகள் ஒடுக்க ஆரம்பித்த நேரம். வஞ்சகமாக இந்திய மலையக வம்சாவழிதமிழரில் பெரும்பான்மையினரை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டு (அப்பொழுது ஒரு ஈழதமிழரும் அதனை கண்டிக்கவில்லை,எதிர்க்கவில்லை என்பதுவேறுகதை ) ஈழதமிழரை குறிவைத்து காய்களை நகர்த்தியது. இறுதியாக ஒரு திட்டத்தினை கொண்டுவந்தது. கொண்டுவந்தவர் சிறிமாவோ பண்டாரநாயக, தந்திரகாரி அவர். யானைகுட்டியை கொடுத்து கச்சதீவை வாங்கியர் (அதாவது கச்சதீவு இலங்கைக்கு கொடுக்கபட்டபொழுது இந்திராவுக்கு இவர் ஒரு யானைகுட்டி பரிசளித்தார்) என சிங்களர்களால் கொண்டாடபட்ட சிறீமாவோ. அதாவது […]

அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் புத்தாக்க குழு.

சர்வ சக்திவாய்ந்த அமெரிக்கா கிட்டதட்ட 100 ஆண்டுகளுக்கு பின் பெரும் வீழ்ச்சியினை காண்கின்றது, அதன் வல்லமை மிக்க கரங்களும், பெரும் அதிகாரமும் வீழ்ந்து கொண்டிருக்கின்றது ஆனால் முடிந்தவரை போராடுவார்கள் அல்லவா? சும்மா இருபார்களா என்ன? அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் புத்தாக்க குழு ஒன்றை டிரம்ப் உருவாக்கியுள்ளார். அவர்கள் பெரும் வழிகாட்டலை கொடுப்பார்கள், புது புது ஆலோசனைகளை கொடுப்பார்கள், அந்த ஆலோசனைகளில் சிறந்ததை அமெரிக்க அரசு செயல்படுத்தும் இந்த குழுவில் அமெரிக்காவின் ஆக சிறந்த அறிவாளிகள், பெரும் திறமையாளர்கள் […]

தமிழகத்தில் இரு அயோக்கியர்களை நினைத்து பார்க்கின்றேன்.

தமிழகத்தில் இரு அயோக்கியர்களை நினைத்து பார்க்கின்றேன், அவர்கள் நிச்சயம் தமிழராகவோ தமிழ் நாகரீகமும் கலாச்சரமும் அறிந்தவராக இருக்க முடியாது முதல் நபர் இந்த இயக்குநர் செல்வராகவன், சோழர்களை அவ்வளவு கேவலமாக சித்தரித்து அவர் இயக்கியிருந்த அந்த “ஆயிரத்தில் ஒருவன்” தமிழ் சினிமாவின் சாபக்கேடு. ஒரு இனம் எவ்வளவு பெரும் ஞானத்திலும் நாகரீகத்திலும் பெருவாழ்வு வாழ்ந்திருந்தால் தஞ்சை தரணி அவ்வளவு அடையாளங்களை கொடுத்திருக்கும்? அவர்களை காட்டுமிராண்டிகளாகவும் மனித உடலை தின்னும் காட்டுவாசிகளாக காட்டியதெல்லாம் மன வக்கிரம், உக்கிரமான வக்கிரம் […]

மார்ச் 16ம் தேதிக்கு முன்பே எல்லைகளை மூடியிருக்க வேண்டும்-ஸ்டாலின்

மார்ச் 16ம் தேதிக்கு முன்பே எல்லைகளை மூடியிருக்க வேண்டும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும், ஜனவரியிலே மூடியிருக்க வேண்டும் : மு.க ஸ்டாலின் இதே ஸ்டாலின் ஜனவரி பிப்ரவரியில் என்ன செய்தார் என்றால், ஜனவரி பிப்ரவரி மார்ச் பாதிவரை அன்னார் இந்த குடியுரிமை போராட்டத்தில் முழு ஆளாக நின்றார் எங்கெல்லாம் கும்பல் கூடுமோ அங்கெல்லாம் கனிமொழியும், உதயநிதியும் நின்றார்கள். ஸ்டாலின் வண்ணார்பேட்டை முதல் எல்லா இஸ்லாமிய பெரும் கூட்டத்திலும் முன்னால் இருந்தார் அப்பொழுதெல்லாம் கொரோனா நினைவு […]

ஏலேய்ய் ரஞ்சித்து..நம்ம நிலத்தை மீட்டாகணுமுல்ல..

இந்த உடையார் நாவலை படிக்க தொடங்கியதில் இருந்து சோழநாட்டில் வசிப்பது போல் தோன்றுகின்றது, தூரத்தில் தெரியும் கோலாலம்பூர் இரட்டை கோபுரம் மாமன்னன் கட்டிய ஆலயம் தானே? இல்லை அது கற்றளி இது சிமென்ட் அளி என உணர்ந்து கொள்ளவே கொஞ்ச நேரம் எடுக்கின்றது பக்கத்தில் ஓடும் ஆறு காவேரி போலவே தெரிகின்றது, “ஏ காவேரியே சித்திரை மாதமும் வற்றாமல் ஓடுவாயா? எப்படி” என தானாகவே கேட்கின்றது மனம் பென்ஸ்கார்களை கண்டால் உயர்தர அரபு குதிரைகள் போல தோன்றுகின்றது, […]

திமுக தொண்டர்களை பார்த்து பரிதாபபடுவதை தவிர ஏதும் செய்யமுடியாது.

நிச்சயம் அவர் கோடீஸ்வரர், அவரின் அப்பாவும் மாமன் மச்சானும் கோடீஸ்வரர்கள், அதனால் கோடிகளில் அவர் டீல் பேசுவது ஒன்றும் விஷயமே அல்ல‌ ஆனால் கொரோனாவில் இறந்தவர்களுக்கும் ஒரு கோடி அரசு கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரின் பொறுப்பற்றதனத்தை காட்டுகின்றது உலகெல்லாம் போர்காலம் போல் மக்கள் இறக்கும் நேரம் , பெரும் வல்லரசுகளே மூச்சுவிட திணறும் நேரம் எவ்வளவு அசால்ட்டாக செத்தவனுக்கு ஒரு கோடி என சொல்லிகொண்டிருக்கின்றார் இந்த மனிதர் அப்பொழுதும் எம்.எல்.ஏ சம்பளத்தை கொடுக்க மனமில்லை, அரசு […]

வைக்கம் போராட்டம் .

வைக்கம் போராட்டம் என்பது வேறொன்றும் அல்ல, இந்த திராவிட கோஷ்டி திராவிட பூமி என சேர்த்து கொண்டாலும் தங்களை எக்காலமும் மலையாளிகளாக கருது திருதாங்கூர் சமஸ்தானத்தில் இருக்கும் ஒரு ஊர், அங்கிருக்கும் கோவில் ஒரு சிவன் ஆலயம் பொதுவாக கேரளாவில் கிருஷ்ண வழிபாடும் , சக்தி வழிபாடும் அதிகம். இந்த சிவன் கோவில் தனித்து இருந்தது குருவாயூர், சபரிமலை போல பெரும் பெயர் அதற்கு இல்லை எனினும் பரசுராமன் தொடர்புடைய ஆலயம் அந்த ஆலயத்து தெருக்களில் தாழ்த்தபட்ட […]

திராவிடத்தின் மிக பெரிய உச்ச சாதனை இது

கார்பரேட்டுக்கள், தொழிலதிபர்கள்.. விவசாயிக்கு துரோகம் என சீறுமுன் சில விஷயங்களை அமைதியாக நோக்கலாம் விவசாயம் ஒன்றால் தேசம் வாழமுடியாது என்பது இக்காலத்தின் நியதி, எல்லா நாடுகளும் அதைத்தான் சொல்கின்றன, தொழில் வளம் மிக அவசியம் இப்போது உலக யதார்த்தம் இது, தொழில்வளம் ஒன்றில் வரும் வருமானத்திலே விவசாயத்தை காத்தல் வேண்டும் அல்லது முடியும் இந்தியாவில் இதை தொடங்கி வைத்தவன் வெள்ளையன் எனினும் சுதந்திர் இந்தியாவில் அடித்தளமிட்டவர் நேரு காரணம் வரி, அரசுக்கு வேண்டிய வரி, வருமானம் வெள்ளையன் […]

தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல

“தி.மு.க., இந்து விரோத கட்சி அல்ல; விநாயகர் போற்றி, முருகன் போற்றி, திருமால் போற்றி, சிவன் போற்றி புத்தகங்களை வெளியிட்டவர் கருணாநிதி,” என தி.மு.க., தலைவர் ஸ்டாலின்… தேர்தல் ஒரு கட்சி தலைவரை இப்படி எல்லாம் பொய் சொல்ல வைக்குமா? திராவிட நாடு பத்திரிகையினை விடுங்கள் “அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள் அறிவு கெட்டவனே” என் பரபரப்பு வாழ்க்கையினை தொடங்கினார் கலைஞர் புராணங்களும் இதிகாசங்களும் அவரிடம் படாதபாடு பட்டன‌ ராமனின் கதை என இலக்கிய சுவை மிகுந்த […]

அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ

அந்த கால திமுகவினர் நடத்திய பத்திரிகைகள் இதோ மதியழகன் -தென்னகம்; அண்ணாதுரை -திராவிட நாடு; என் வி நடராஜன் -திராவிடன்; ஆசைத்தம்பி- தனியரசு; சி பி சிற்றரசு -போர்வாள்; கண்ணதாசன்-தென்றல்;கருணாநிதி-முரசொலி; ஆர் எஸ் தங்கபழம்-கிளர்ச்சி; அரங்கண்ணல்-அறப்போர்; மனோகரன்-விந்தியம்;பி எஸ் இளங்கோ -மாலைமணி கட்சி பத்திரிகை – நம்நாடு; எம் ஜி ஆர்-சமநீதி; மாறன்-மறவன் மடல்;நெடுஞ்செழியன் -மன்றம் உண்மையில் இதை தொடங்கி வைத்தது பெரியாரின் வேலை, அவர்தான் முதலில் தொடங்கினார் ஆனால் பாமர தமிழ் பெரியாரின் கருத்துக்கள் என்றாலும் விடுதலை குடியரசில் அதை தேன் தடவி கொடுத்தவர் அண்ணா ஆம், அவரே எப்படி […]