பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சென்ட்ரல் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது

மும்பை.சத்திரபதி சிவாஜி ரயில் நிலைய நடை பாதை பாலம் சரிந்து 7 பேர் பலி 30 காயம் அந்த நிலையத்தை கட்டியது வெள்ளையன் அதற்கு விக்டோரியா டெர்மினல் என பெயரும் வைத்தான் இந்த சிவசேனா கோஷ்டி பெயரை மட்டும் மாற்றியது மராமத்து பணிகளை செய்யவே இல்லை, அதை எல்லாம் செய்ய பிரிட்டிஷ்காரனா வருவான்? பிரிட்டிஷார் போல் பராமரிக்காமல் , சும்மா பெயரை மட்டும் மாற்றுவது என்பது அயோக்கியதனம், எதற்கும் சென்னை சென்ட்ரல் பயணிகள் கவனமாக இருப்பது நல்லது

அக்கா கேட்ட கேள்வி

அக்கா தமிழிசையினை எப்படி கலாய்த்தாலும் இப்பொழுது அவர் எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு காங்கிரசாரிடமே பதில் இல்லை ராகுலை நோக்கி அவர் எழுப்பிய கேள்விகள் நிச்சயம் காட்டமான ஆனால் படுநியாயமான கேள்விகள் பழைய வரலாறுகள் குறிப்பாக இனதுரோகி என உங்களை அழைத்த சக்திகளுடன் உங்களுக்கு கூட்டணி ஏன் என்பதெல்லாம் காங்கிரசார் கேட்க வேண்டிய கேள்விகள் ஆனால் பாஜக தலைவரான தமிழிசை கேட்டிருக்கின்றார் அக்கா கேட்ட கேள்வியில் மிக அருமையான கேள்வி காமராஜரை ஏன் காங்கிரஸ் ஒதுக்கி வைத்தது? என்பது இதற்கு ராகுலிடமும் பதில் […]

வைகுண்டராஜன் அண்ணாச்சி

வைகுண்டராஜனின் வங்கி கணக்குகள் முடக்கபட்டது, 5ம் நாளாக சோதனை, சொந்த ஊருக்கு அழைத்து சென்று விசாரணை செய்ய திட்டம் : செய்தி முன்பு கலைஞர் வைகுண்டராஜனை தொட்டபொழுது சீறி எழுந்து “ஜெயா டிவியின் பங்குதாரர் என்பதற்காக வைகுண்டராஜன் பழிவாங்கபடுகின்றார்” என பகிரங்கமாக மிரட்டினார் அதன் பின் அண்ணாச்சி அவர்போக்கில் வலம் வந்தார் அண்ணாச்சி மேல் சிறு உறுமல் என்றாலும் அப்பொழுது சீறுவார்கள் விஜயகாந்த் வைகுண்டராஜனை பற்றி முதன் முறையாக குற்றசாட்டு எழுப்பியபொழுது நாடர் சங்கமும், சீமானும் பொங்கியது […]

சிதறல்கள்

ஜமால் கொலையில் பல தகவல்கள் சுவாரஸ்யமாக இருக்கின்றது முதலில் நம்பியார் ஸ்டைலில் “டேய் அந்த கசோகியினை தூக்கிட்டு வந்து என் முன்னால உயிரோடு போடுங்கடா” என்றுதான் மன்னர் சொல்லியிருகின்றாராம் அப்படி அந்த 15 பேர் கொண்ட குழு சென்றிருக்கின்றது, முதலில் ஜமாலை பேசி மசியவைத்து சவுதிக்கு கொண்டு செல்லத்தான் திட்டமாம், முடியாத பட்சத்தில் மயக்க ஊசி போட்டு கொண்டு செல்ல டாக்டர் சகிதம் சென்றிருக்கின்றார்கள் மிக நுட்பமான திட்டம்தான், ஜமால் சவுதி தூதரகம் உள்ளே வந்தது சிசிடிவில் […]

சாதி ஒற்றுமை

பெரியாரால் கூட கொண்டுவரமுடியா சாதி ஒற்றுமையினை பல நூறு சொத்துமதிப்பு கொண்ட சங்கங்களால் செய்ய முடிகின்றது தெட்சன நாடார் சங்கம் என்பது அபராதத்தில் ஓடும் சங்கம் அல்ல, கிட்டதட்ட 500 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை கொண்டது என சொல்லபட்டாலும் மதிப்பு அதை விட அதிகம் இருக்கலாம்.. வியாபாரத்தில் கொடிகட்டி பறந்த சிவகாசி விருதுநகர் நாடார்கள் தங்களுக்காக உருவாக்கியது நாடார் சங்கம் நாடார்கள் கல்வியிலும் வியாபாரத்திலும் வளர வேண்டும், அச்சமூகம் வளர வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கபட்டது அது […]

சிதறல்கள்

பொதுவாக சர்ச்சைகளில் சிக்கி கொள்ளாதவர் ஏ.ஆர் ரகுமான். இசை தவிர வேறு செய்திகளில் அவரை பார்க்க முடியாது முழுக்க இசை இசை என எம்.எஸ் விஸ்வந்தானுக்கு பின் தமிழகம் கண்ட இசை அமைப்பாளர் அவர். எவ்வித சர்ச்சையும் அவரை பற்றி வந்ததே இல்லை இப்பொழுது சர்ச்சை அவரின் சொந்த சகோதரி வடிவில் வருகின்றது, வைரமுத்து பற்றி என்னவெல்லாமோ சொல்கின்றார் சகோதரி ரகுமான் சிறந்த இசை அமைப்பாளர் சந்தேகமில்லை ஆனால் அவரை உச்சத்திற்கு கொண்டு சென்றதில் வைரமுத்துவின் வரிகளுக்கும் […]

சிதறல்கள்

பூஜை திருநாட்களையொட்டி எல்லா வீடுகளிலும் கொலு வைக்கின்றார்களாம், அதாவது அழகான பொம்மைகளை சிலைகளை வைத்து அலங்கரிக்கின்றார்களாம் இந்த பொம்மையினை விடவா அழகான கொலு பொம்மை உலகில் உண்டு? ஆனால் ஏனோ இந்த பொம்மையினை யாரும் வைக்கவில்லை என தகவல்கள் சொல்கின்றன, பெரும் விசித்திரம் இது இம்முறை சங்கத்தார் வீடுகளில் கொலுவில் இந்த பொம்மை இருந்தாக வேண்டும் என சங்கம் வலியுறுத்துகின்றது, சங்கத்து செயலாளர் Periya Samy அவர்கள் வீட்டில் இந்த அழகிய பொம்மை முதன் முதலாக‌ கொலு […]

சிதறல்கள்

காலையிலே பிரகாசமாக இருப்பது சூரியனும் தலைவி முகமுமே…. [ October 9, 2018 ] ============================================================================ திரைதுறையில் பாலியல் குற்றசாட்டுக்கள் வருவது புதிதல்ல, வராமல் இருந்தால்தான் ஆச்சரியம். அங்கிருக்கும் பலவாறான சூழல்களும், இன்னும் பல விஷயங்களும் அதற்கு துணைபோகின்றன‌ விஷயம் இதுகாலம் நடிகர்கள்மேல் இன்னபிற கலைஞர்கள் மேல் இருந்தது, இப்பொழுது கவிஞர்கள் மேலும் திரும்பி இருகின்றது பொதுவாக ரசனை மிகுந்தவர்கள் கவிஞர்கள், அழகில் மயங்கும் மனம் அவர்களுடையது சந்தேகமில்லை ஆனால் மேக் அப் இல்லாத நடிகைகளை பார்த்ததால் […]

சிதறல்கள்

வைரஸ் தாக்கிய போலியோ மருந்து: தயாரிப்பு நிறுவனம் மூடப்பட்டது; உரிமையாளர் கைது தெலுங்கானா, டெல்லி போன்ற சில பகுதிகளில் போலியோ சொட்டுமருந்து கொடுக்கபட்ட குழந்தைகளுக்கு விசித்திர நோய் தாக்கியதால் மருந்து சோதிக்கபட்டது, அதில்தான் இந்த வைரஸ் இருப்பதை கண்டுபிடித்திருக்கின்றார்கள் பச்சிளம் குழந்தைகளை போலியோவில் இருந்து காக்க கொடுக்கபடும் மருந்து உயிரை எடுப்பது பெரும் கொடுமை. இந்த ஆலை எங்கே இயங்கி இருக்கின்றது என்றால் உபியில் இயங்கி இருக்கின்றது, இப்பொழுது சீல் வைத்திருக்கின்றார்கள் அது என்ன பாவமோ, சாபமோ […]

சிதறல்கள்

கலைஞர் டிவியில் உத்தமர் காந்தி பிறந்தநாள் சிறப்பு நிகழ்ச்சிகள் ஓடிகொண்டிருக்கின்றன‌ காந்தி தேசியவாதி, இவர்கள் திராவிடவாதிகள். அவர் சாகும்பொழுதும் ஹேராம் என சொல்லிகொண்டிருந்த ஆன்மிகவாதி, இவர்களோ ராமர் படத்தை எல்லாம் அடித்த பகுத்தறிவுவாதிகள் பின் எப்படி காந்தி இவர்களுக்கு “உத்தமர் காந்தி” ஆனாரோ தெரியவில்லை [ October 2, 2018 ] ============================================================================ ஐஎம்எஃப் தலைமை பொருளாதார நிபுணராக கீதா கோபிநாத் நியமனம் நிச்சயம் பெருமைக்குரிய விஷயம், ரகுராம் ராஜனுக்கு பின் அந்த இடத்தை அடைபவர் கீதா, […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications