பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

சிதறல்கள்

கல்விக்கொரு தெய்வமுண்டு அவளருள் கம்பனுண்டு செல்வத்திற்கோர் தெய்வமுண்டு, பெரும்செல்வர் பலருண்டு வீரத்திற்கோர் தெய்வமுண்டு  வீராதி வீரருண்டு அழகுக்கோர் தெய்வமேது? அவளருள் பெற்றோர் உண்டோ? மனக்குறை பட்ட‌ கடவுள் மனதார துடித்திட்டான் மேனகை ரம்பை என படைத்து பார்த்திட்டான் ஆனாலும் முழு அழகில்லை என்றே உணர்ந்திட்டான் அழகிற்கோர் படைப்பு உருவாக்க முனைந்திட்டான் அதுவரை படைத்த அழகெல்லாம் கொட்டி புதிதாய் பல வண்ணம் கலந்தே இதுவரை இல்லா ஓவியமாய் வரைந்தே மதுவிலும் இனிதாய் படைத்தே எடுத்தான் மங்கையர் விளக்கே, மரகரத […]

வெங்கடேச பண்ணையார்

தென் தமிழ்நாடு வெங்கடேச பண்ணையாரின் நினைவுநாள் என பரபரப்பில் இருக்கின்றது. தூத்துகுடி பகுதி 144 உத்தரவில் இருக்கின்றது இன்று ஒரு நிலச்சுவாந்தாராக, தொழிலதிபராக இல்லை கபடி ஆட்டக்காரராக இருந்திருக்க வேண்டிய வெங்கடேசன் இப்பொழுது தீரா உறக்கத்தில் இருக்கின்றார் எப்படி மாறியது அவரின் வாழ்வு? அவர் குடும்பம் மிகபெரும் நிலச்சுவாந்தர் குடும்பம், அவர்களுக்கும் சிலருக்கும் பகை இருந்தது. சாதி வேறாய் இருந்ததுதான் சிக்கல் பொதுவாக தொழில் இருப்பவன் பொறுத்து செல்வான், தொழிலே இல்லாதவனே வம்புக்கு வருவான். வெங்கடேசன் குடும்பத்தை […]

சிதறல்கள்

மணிரத்தினத்தின் “செக்க சிவந்த வானம்” எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது மணி நிச்சயம் அர்ஜூனன் சந்தேகமில்லை, ஆனால் அவரின் தேரோட்டிகள் வசனகர்த்தாக்களும் கதை விவாதக்காரர்களும் என்பதுதான் விஷயம் அப்படி பாலகுமாரன், சுஜாதா என இருந்தவரை மணியால் நினைத்த குறியினை அடிக்க முடிந்தது, காரணம் தேரோட்டிகள் அப்படி மிக நுணுக்கமான ரசனையாளர்களாக அவருககு உதவினர் ஆனால் அவர்கள் இல்லா மணி தடுமாற ஆரம்பித்தார், அது ராவணா, கடல், ஒகே கண்மணி இந்த படுமொக்கையான காற்றுவெளியிடை வரை தெரிந்தது நல்ல தேரோட்டி கிடைக்காவிட்டால் […]

அயன் லேடி

சினிமா ஒன்றே மூலதனமான கட்சி அதிமுக, ஜெயா இல்லா நிலையில் இனி பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அவர்களுக்கு சினிமா அடையாளம் தேவை அதற்காக பழனிச்சாமியோ, பன்னீரோ மேக் அப் போட்டு ராமசந்திரன் போல ஆடினால் நன்றாயிராது, ஜெயக்குமாருக்கும் ரஜினி படத்தின் வில்லன் கேரக்டர் கிடைக்கவில்லை இதனால் என்ன செய்யலாம் என பரிதவித்தவர்களுக்கு ஜெயாவின் கதையினை சினிமாக எடுத்து பாராளு மன்ற தேர்தலையொட்டி ஓடவிட்டால் என்ன? என்ற எண்ணம் வந்தாயிற்று இதனால் ஜெயா வாழ்க்கை அயன் லேடி என […]

இந்த பழனிச்சாமி கோஷ்டி

ஒரு மனிதன் தடுமாறலாம் ஆனால் இப்படி குப்புற விழகூடாது, டாஸ்மாக் நடத்தும் அரசுதான் ஆனால் இப்படி போதை போடாமலே உளற கூடாது அப்படி என்ன உளறல்? இலங்கையில் நடந்த இன அழிப்பினை திமுக எதிர்க்கவில்லையாம், அதை எதிர்த்து அதிமுக ஆர்பாட்டமாம் அட பதர்களா? அது நடந்து 10 வருடம் ஆக போகின்றது, அவர்களே மறந்தாயிற்று, இவர்கள் இப்பொழுதுதான் விழித்திருக்கின்றார்கள் சென்னையில் பிரபாகரனை வீட்டு காவலில் வைத்தவர் ராமசந்திரன், கண்டித்தது கலைஞர் ஈழசிக்கலில் அமைதிபடையினை அனுப்பாதே என்றவர் கலைஞர், […]

பறையர் மகாசன சபை – இரட்டைமலை சீனிவாசன்

பெரியாருக்கும் நீதிகட்சிக்கும் முன்னாலே 1900களுக்கு முன்னாலே ஒருவர் தாழ்த்தபட்டவருக்காக பேசினார் முதன் முதலில் பறையர் மகாசன சபையினை தொடங்கினார், முதன் முதலில் பறையர் என்ற இதழை அந்த மக்களுக்காக நடத்தினார் அன்று அச்சு ஊடகங்களே அதிகம் இல்லா நிலையில் அவரின் இந்த முயற்சி நிச்சயம் அதிசயமானது, தாழ்த்தபட்டோருக்கான இந்தியாவின் முதல் குரல் அவருடையது அன்றே கல்வி கற்றிருந்தார், சிந்தித்தார். தென்னாப்ரிக்கா எல்லாம் சென்று மக்களின் அடிமை நிலையினை உணர்ந்தார் தாழ்த்தபட்ட மக்களின் குரலாக அவர் ஒலிக்க ஒலிக்க […]

சிதறல்கள்

பெரியார் சிலை அவமதிப்பு: தூண்டியோர் மீதும் கடும் நடவடிக்கை தேவை; ராமதாஸ் பெரியார் சிலைக்கே இந்தபாடு என்றால், விரைவில் இவர் திறக்க இருக்கும் காடுவெட்டி குருவின் சிலை என்ன பாடுபடும்? அந்த பயம் டாக்டருக்கு இருக்குமா இருக்காதா? அடேய் ஆண்டிபெரியார்ஸ் பண்டாரங்களா… இங்கு பெரியாரின் சித்தாந்தமோ இல்லை அவரின் கொள்கைகளோ அரசியலை பிடிக்கவில்லை, ஆட்சி அமைக்கவில்லை ஆட்சியினை பிடித்தது சினிமா, இன்றுவரை அதை ஆட்டிவைப்பதும் சினிமா, ஏதோ பெரியார் தங்கள் அரசியல் வாழ்வினை தொடங்கியதற்காக சில காரியங்களை […]

உண்மையில் இது சினிமா மண்

இது பெரியார் மண், அண்ணா மண் என சொல்பவன் சொல்லிகொண்டே இருந்தாலும் உண்மையில் இது சினிமா மண் ராமசந்திரன் என்பவர் 11 ஆண்டு முடிசூடா மன்னனாக ஆண்டிருக்க முடியாது இது பெரியாரின் மண்ணாக இருந்திருந்தால் பிராமண ஜெயலலிதா 17 ஆண்டுகள் முதல்வராக ஆண்டிருக்க முடியாது விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்திருக்க முடியாது இது பெரியாரின் மண்ணாகவே இருந்திருந்தால் பெரியாரின் சீட கோடிகள் இன்று அரசியலுக்கு வருமே தவிர சிஸ்டமும், மையமும் வந்திருக்க முடியாது விஜயினை வைத்து அவரின் […]

தமிழக நீதிமன்றம்

கும்பகர்ணனை போல் தூங்க கூடாது : தமிழக அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் அட அவனாவது 6 மாதம் விழித்திருப்பான், இவர்கள் அதுவுமில்லை இந்த விபீஷ்ணன் வேலை செய்யாமல் தமிழக அரசு சுதந்திரமாக செயல்படுவது நல்லது என நீதிமன்றம் சொல்லி இருக்கலாம் எச்.ராசா உச்சநீதிமன்றமாவது மயிராவது என பேசிவிட்டாராம் உடனே கைது செய்ய வேண்டுமாம் அடுத்த சர்ச்சை ஆரம்பித்துவிட்டது எச்.ராசா மேல் சர்ச்சைகளுக்கு குறைவே இல்லை, சில இடங்களில் அவரின் அடாவடி அதிகம். ஆனால் இந்த மயிராவது என […]

அண்ணா பேரறிஞரானது

அந்த காலத்தில் ராஜாஜி என்றொருவர் இருந்தார், இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் மற்றும் தமிழர் மகாத்மா காந்தியின் சம்பந்தி பெரும் வழக்கறிஞரும், பெரும் அறிஞருமான அவர் மூதறிஞர் என போற்றபட்டார். பெரியாரும் அவரும் கருத்து ரீதியாக மோதினாலும் அவரை கலக்காமல் பெரியார் ஏதும் செய்ததில்லை மணியம்மை திருமணம் உட்பட‌ காங்கிரசுக்கும் நாட்டிற்கும் மிகபெரும் அடையாளம் மூதறிஞர் ராஜாஜி அவரை குறிவைத்து அடித்தே திமுக வளர நினைத்தது, திமுகவின் தந்திரம் அது. யார் பெரியவர்களோ அவர்கள் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications