பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

முதிர்ச்சியான அரசியல்

ஈழபிரச்சினை உச்சத்தில் , ஜெயா ஏதோ சொல்ல போக பெரும் சலசலப்பினை இங்கு ஏற்படுத்திற்று சிங்கள அரசியல்வாதி எவனோ ஜெயாவினை மட்டமாக பேசிவிட்டான், தமிழக அரசியலுக்காக ஜெயா இலங்கை பிரச்சினையில் தலையிடுவதாக அப்படி சொல்லியிருந்தான் அவன் ஜெயாவின் பரம எதிரியான கலைஞர் சீறிகொண்டு பதிலளித்தார் “இது எங்கள் மாநிலம் இந்நாட்டு சிக்கல், இன்னொருவர் எம்மை சேர்ந்தவரை பற்றி பேசவோ, கருத்து சொல்லவோ அவசியமுமில்லை தேவையுமில்லை ஈழமக்களை சரிக்கு சமமாக நடத்தி உரிமைகளை கொடுத்திருந்தால் நாங்கள் ஏன் இலங்கையில் […]

ப.சிக்கு ஆதரவாக பெரும் வழக்கறிஞர் சிங்கங்கள்

ப.சிக்கு ஆதரவாக பெரும் வழக்கறிஞர் சிங்கங்கள் எல்லாம் களமிறங்கியிருக்கின்றன‌ இதில் யாராவது தமிழ்நாட்டு வழக்கறிஞரா என பார்த்தால் இல்லவே இல்லை இங்கு தமிழக காங்கிரஸில் திருநாவுக்கரசர் முதல் ஏகபட்ட வழக்கறிஞர்கள் உண்டு ஆனால் ஒருவரும் டெல்லியில் வாதாடும் அளவு திறமையும் தகுதியும் கொண்டவர்கள் அல்ல என்பது தெரிகின்றது பின் எங்கே இருப்பார்கள்? தகுதி இல்லாதோர் இருக்கும் ஒரே இடம் எது? அதேதான், எங்காவது எம்பி, எம்.எல்.ஏ என அமர்ந்திருப்பார்கள்.

தேசாபிமானிகளை கோபபட வைக்கின்றது

திமுக போராட்டத்தை பாகிஸ்தான் தனக்கு சாதகமாக எடுத்து என்னவோ பேசதொடங்கிவிட்ட பொழுதும் திமுக கனத்த அமைதி காப்பதுதான் தேசாபிமானிகளை கோபபட வைக்கின்றது “இது உள்நாட்டு பிரச்சினை, பாகிஸ்தான் அவர்கள் வேலையினை பார்ப்பது நல்லது காஷ்மீர் எங்கள் உள்நாட்டு விவகாரம் ” என பேச ஒரு திமுககாரனோ, தலமையோ இல்லை பார்த்தீர்களா? இதனால்தான் சொல்கின்றோம் கலைஞருக்கு பின்னரான திமுக உருப்படவே உருப்படாது தேசதுரோகத்தின் மொத்த உருவமாய் மாறிவிட்ட, பாகிஸ்தானை கண்டித்தால் இஸ்லாமிய வோட்டு போய்விடும் என்ற இழிநிலைக்கு சென்றுவிட்ட […]

கோவையில் சில கொடிய தீவிரவாதிகள்

கோவையில் சில கொடிய தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வரும் செய்திகள் பெரும் கலக்கத்தை ஏற்படுத்துகின்றன‌ அவளை பிடித்து தலையில் கட்ட சொல்லி சிவனிடம் கேட்டோம், கழுத்தில் கட்டசொல்லி மன்றாடினோம் இது நிச்சயம் அதிர்ச்சி, காஷ்மீர் விவகாரத்து எங்காவது ஏதாவது எதிரொலி கேட்டே தீரும், ஆனால் எங்கு என்பதுதான் எல்லோரும் மனதால் கேட்கும் மில்லியன் டாலர் கேள்வி அது கோவையா என்றால் மனம் நடுங்கத்தான் செய்கின்றது எனினும் நம் காவல் அமைப்புகள்மேல் பெரும் நம்பிக்கை இருப்பதால் மனம் கொஞ்சம் நிம்மதியடைகின்றது […]

திமுக நடத்திய அந்த மாபெரும் போராட்டம்

காஷ்மீரில் 370ம் பிரிவுக்கு ஆதரவாக டெல்லியில் திமுக நடத்திய அந்த மாபெரும் போராட்டம் இதுதான் 370 நபர்கள் கூட கூட்டத்தில் இல்லை.. அடுத்து அந்த கோஷ்டி என்ன போராட்டம் நடத்தபோகின்றதோ தெரியவில்லை இந்த கனிமொழி, தமிழச்சி எல்லாம் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை ஒருவேளை வாகா எல்லையில் பாகிஸ்தானியருடன் பேசி கொண்டிருந்தார்களோ என்னமோ?

தமிழக அரசியலிலும் அப்படி ஒரு கண்ணன் இருந்தார்

நமக்கு ஆன்மீக கண்ணனை தெரியும், தமிழக அரசியலிலும் அப்படி ஒரு கண்ணன் இருந்தார் மகா தந்திரகாரன் அவர், கம்சனை ஒழித்தாரோ இல்லையோ கம்சன் போல இங்கிருந்த பெரியாருக்கு பெப்பே காட்டிவிட்டு ஒரு தர்மனோடு ஓடிவந்தார் ஆம் அண்ணா அண்ணா என அவரோடே இருந்தார், அங்கே கண்ணனும் பலராமனும் என்றால் இங்கு கலைஞரும் அண்ணாவும் மகா ஆச்சரியமாக இந்த கண்ணனுக்கும் ஒரு அர்ஜூனன் கிடைத்தான் அவன் பெயர் ராமசந்திரன், அர்ஜூனனுக்கு காண்டீபம் போல ராமசந்திரனுக்கு மேக் அப் இருந்தது […]

NIA சட்டம் எல்லாம் திருத்திட்டானுக‌

இனி ஈழம், தனிநாடு, பிரபாகரன், தமிழ்தேசியம் எல்லாம் பேசமுடியாது NIA சட்டம் எல்லாம் திருத்திட்டானுக‌ ப.சிதம்பரமே இந்தபாடுபடுறார்ன்னா நம்ம நிலை நினைச்சாலே பயமா இருக்கு.. காஷ்மீர்ல நடக்குறத பார்த்தா நமக்கே கால் எல்லாம் ஆடுது,இதெல்லாம் எவனால தாக்குபிடிக்க முடியும்? ஆத்தாடி, மனுஷனுகளா அவனுக? சோனியாவும், அய்யா கலைஞரும் எவ்வளவு நல்லவுகன்னு இப்பதான் புரியுது ஏதாவது செய்யணும், இல்லண்ணா தம்பிக மறந்துருவானுக, அண்ணே நீ உயிரோடத்தான் இருக்கியா? இல்ல வீர அஞ்சலி கூட்டம் நடத்தட்டுமான்னு கேட்ருவானுக. பால் விலை […]

அப்படி ஒரு போராட்டம் நடந்ததா?

அப்படி ஒரு போராட்டம் நடந்ததா? என தெரியாமலே முடிந்துவிட்டது திமுகவின் டெல்லி போராட்டம் முன்பொருமுறை கலைஞரை குடியரசு தலைவராக அமர சொல்லி வற்புறுத்தல் இந்தியா முழுக்க இருந்து வந்தது என் உயரம் எனக்கு தெரியும்,டெல்லி நம் எல்லைக்கு அப்பாற்பட்டது என சொல்லி மறுத்து மிக அழகாக அரசியலை தொடர்ந்து வரலாறாக மாறினார் அவர் அவர் நினைத்திருந்தால் நொடியில் குடியரசு தலைவராகியிருக்கலாம் ஆனால் அதன் பின்னால் நடக்க போகும் விளைவுகளை கணித்து அட்டகாசமாக அதை தவிர்த்தார் இந்த திமுக […]

அப்படித்தானே மேடம்?

ப.சிதம்பரம் கைது விவகாரத்தில் பா.ஜ,க அரசுக்கு தொடர்பு இல்லை – நிர்மலா சீதாராமன் ஆனால் பாகிஸ்தானில் எல்லை தாண்டி குண்டு வீசிய பொழுது மட்டும் பாஜக அரசுக்கு தொடர்பு இருந்தது அப்படித்தானே மேடம்?

சாதி, மத பேதமற்ற சமத்துவபுரமாக திகழ்கின்றது சென்னை

சாதி, மத பேதமற்ற சமத்துவபுரமாக திகழ்கின்றது சென்னை : முக ஸ்டாலின் டெல்லி, பெங்களூர், மாஸ்கோ, லண்டன், டோக்கியோ, வாஷிங்டன், சிங்கப்பூர், ஹாங்காங் இன்னும் ஏகபட்ட நகரங்களில் எல்லாம் சாதியும் மதமும் தலைவிரித்தாடுகின்றன‌ சென்னை மட்டுமே சமத்துவபுரமாக விளங்குகின்றது காரணம் 400 ஆண்டுக்கு முன் கோட்டை கட்டியவர் பெரியார், அதன் பின் சாதி மத கலவரங்களை எல்லாம் ஓடுக்கி 300 வருடத்துக்கு முன்பே சமத்துவபுர சென்னை அமைத்தவர் தளபதி அண்ணா 100 வருடத்துக்கு முன்பே நவீன சென்னைக்கு […]